MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! தமிழ்நாடு அரசு சொன்ன குட்நியூஸ்!

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! தமிழ்நாடு அரசு சொன்ன குட்நியூஸ்!

தமிழக அரசுப் பள்ளி 10ம் வகுப்பு மாணவர்களுக்காக முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 2026 ஜனவரி 31 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் 1000 மாணவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை ஆண்டுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும். 

2 Min read
Author : vinoth kumar
Published : Dec 16 2025, 11:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பள்ளி மாணவர்கள்
Image Credit : our own

பள்ளி மாணவர்கள்

தமிழக அரசு சார்பாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஆரம்ப கல்வியே அடிப்படை கல்வி என்ற நோக்கில் தரமான கல்வியை வழங்க வேண்டும் என மாநில பாடத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி மாணவர்களின் உயர்கல்விக்கு வழிவகுத்து வருகிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி படிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 2023- 2024ம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இக்கல்வியாண்டிற்கான முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 2026ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

24
முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு
Image Credit : our own

முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு

படிப்புதவித் தொகை மற்றும் எண்ணிக்கை

இத்தேர்வில் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவியர்கள் என மொத்தம் 1000 மாணக்கர்கள் நடைமுறையிலுள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூ.10,000(மாதம் ரூ.1000 வீதம்) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.

தேர்விற்கான பாடத் திட்டம்

தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகங்களில் உள்ள பாடத் திட்டங்களின் அடிப்படையில் கொள்குறிவகையில் TNCMTSE தேர்வு இரு தாள்களாக நடத்தப்படும்.

Related Articles

Related image1
லேப்டாப், செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! தமிழகத்தில் நாளை 5 முதல் 8 மணி நேரம் மின்தடை
Related image2
போட்டு தாக்கிய குளிரால் அலறிய பொதுமக்கள்! மீண்டும் சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த மழை
34
தேர்வு நேரம்
Image Credit : our own

தேர்வு நேரம்

இத்தேர்வானது தாள் 1 (கணிதம் 60 வினாக்கள்) காலை மணி 10 முதல் 12 வரையிலும், தாள் 2 (அறிவியல் மற்றும் சமூக அறிவியல் 60 வினாக்கள்) பிற்பகல் மணி 2 முதல் 4 மணி வரையிலும் நடத்தப்படும்.

44
வெற்று விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்தல்
Image Credit : our own

வெற்று விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்தல்

மாணாக்கர்கள் டிசம்பர் 18 முதல் 28 வரை www.dgetn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேர்வுகட்டணம் ரூ. 50/-னை டிசம்பர் 28ம் தேதிக்குள் மாணக்கர்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணாக்கர்களின் விவரங்களை பள்ளிகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டணத்தினை ஆன்லைனில் செலுத்துதல் குறித்தான தேதிகள் பின்னர் தெரிவிக்கப்படும். எனவே. 2025-2026 கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் "தமிழ்நாடு முதனைமச்சரின் திறனாய்வுத் தேர்வினை- அறிந்துகொள்ளும் வகையில், தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
பள்ளிக் கல்வித் துறை
தமிழ்நாடு
தேர்வு
உதவித்தொகை

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
லேப்டாப், செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! தமிழகத்தில் நாளை 5 முதல் 8 மணி நேரம் மின்தடை
Recommended image2
போட்டு தாக்கிய குளிரால் அலறிய பொதுமக்கள்! மீண்டும் சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த மழை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved