MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!

நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!

Congress: விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். த்ரிஷா கிட்ட இருந்து வெளியில் வந்தால் தான் எல்லாம் நடக்கும். குடும்பங்களுடன் நல்லுறவு வைக்க வேண்டும் என பேசியிருந்தார்.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 15 2026, 02:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு
Image Credit : Asianet News

நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு

தமிழக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக விஜய் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தவெக தலைவர் விஜய், முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். த்ரிஷா கிட்ட இருந்து வெளியில் வந்தால் தான் எல்லாம் நடக்கும். குடும்பங்களுடன் நல்லுறவு வைக்க வேண்டும் என பேசியிருந்தார். நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு தவெக, திமுக, காங்கிரஸ் பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டங்கள் எழுந்து வருகிறது.

24
தமிழகம் முழுவதும் கண்டனம்
Image Credit : Asianet News

தமிழகம் முழுவதும் கண்டனம்

இந்நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு நாடாளுமன்றத்தில் அல்லது ஊடகங்களில் நேரிடையாக விளக்கம் கொடுக்க பயப்படும் பிஜேபி கட்சியை சேர்ந்த நயினார் நாகேந்திரனிடம் பெண்களை குறித்து உயர்வான சிந்தனையை எப்படி எதிர்பார்க்க முடியும் என காங்கிரஸ் எம்.பி.சுதா கடுமையாக விமர்சித்துள்ளார்.

Related Articles

Related image1
நயினாரின் தில்லாலங்கடியை புட்டுப் புட்டு வைத்த நாஞ்சில் சம்பத்.! விஜய்-த்ரிஷா பேச்சுக்கு சவுக்கடி.!
Related image2
மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..! தமிழகம் முழுவதும் பிப்ரவரி 17ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்.! என்ன காரணம் தெரியுமா?
34
காங்கிரஸ் எம்.பி.சுதா
Image Credit : Asianet News

காங்கிரஸ் எம்.பி.சுதா

இதுதொடர்பாக அவரது எக்ஸ் தள பக்கத்தில்: பிஜேபி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின் விஜய் குறித்து பேச்சு நாகரிகமற்றது, திராவிட இயக்கத்தில் அரசியல் செய்த காலங்களில், பெண் உரிமை,பெண்கள் சமத்துவம் இவற்றை மேடைகளில் பேசிய அரசியல் செய்தவர் இன்று பெண்களின் மாண்பை குறைக்கும் வகையில் பொது வெளியில் ஊடகங்களில் பேசுகிறார் என்றால் அதுதான் RSS பிஜேபி யின் சானாதன சித்தாந்தத்தின் வெளிபாடு, பெண் ஆணுக்கு சமம் இல்லை என்ற பழைமை வாத கோட்பாட்டை அடிப்படையாக கொண்ட கட்சியில் தலைமை வகிப்பதால் அதற்கு ஏற்றவாறு பேசி வருகிறார்.

44
பிஜேபி கட்சி
Image Credit : Asianet News

பிஜேபி கட்சி

இவர் சார்ந்த கட்சியின் மத்திய அமைச்சர்கள் ஏற்கனவே எப்ஸ்டீன் பைல் பட்டியலில் சிக்கி தவிப்பதை அமெரிக்கா நீதிமன்றத்தால் வெளிடபட்ட ஆவணங்களில் காணமுடிகிறது. இப்படி பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு நாடாளுமன்றத்தில் அல்லது ஊடகங்களில் நேரிடையாக விளக்கம் கொடுக்க பயப்படும் பிஜேபி கட்சியை சேர்ந்த நயினார் நாகேந்திரனிடம் பெண்களை குறித்து உயர்வான சிந்தனையை எப்படி எதிர்பார்க்க முடியும், இனிமேலாவது பொது வெளியில் இழிவாக விமர்சனம் செய்வதை நிறுத்து கொள்ள வேண்டும், எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ அந்த பெண்ணிடம் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என எம்.பி. சுதா காட்டமாக தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
நயினார் நாகேந்திரன்
இந்திய தேசிய காங்கிரஸ்
டிவி.கே. விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..! தமிழகம் முழுவதும் பிப்ரவரி 17ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்.! என்ன காரணம் தெரியுமா?
Recommended image2
தங்கம், வெள்ளி வாங்க இதுதான் சரியான நேரமா? இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா?
Recommended image3
10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! பிப்ரவரி 18ம் தேதிக்குள்.. அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
Related Stories
Recommended image1
நயினாரின் தில்லாலங்கடியை புட்டுப் புட்டு வைத்த நாஞ்சில் சம்பத்.! விஜய்-த்ரிஷா பேச்சுக்கு சவுக்கடி.!
Recommended image2
மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..! தமிழகம் முழுவதும் பிப்ரவரி 17ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்.! என்ன காரணம் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved