MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Spiritual: அம்பாள் அம்பிகை பசுவாக தவம் இருந்த இடம் தெரியுமா?! கால்நடைகளை குணப்படுத்தும் அதிசய அருகம்புல்.!

Spiritual: அம்பாள் அம்பிகை பசுவாக தவம் இருந்த இடம் தெரியுமா?! கால்நடைகளை குணப்படுத்தும் அதிசய அருகம்புல்.!

மயிலாடுதுறை அருகே உள்ள திருக்கோழம்பியம், அம்பிகை பசுவாக சிவனை வழிபட்ட ஒரு புனித தலமாகும். இங்குள்ள சிவலிங்கத்தில் அம்பிகையின் குளம்படி பதிந்திருப்பதுடன், நோய்களைத் தீர்க்கும் சிறப்புமிக்க 'அறுகம்புல் அர்ச்சனை' வழிபாடும் பிரசித்தி பெற்றது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Nov 25 2025, 08:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
அம்பிகை பசுரூபத்தில் சிவனை வழிபட்ட புனித தலம்
Image Credit : Asianet News

அம்பிகை பசுரூபத்தில் சிவனை வழிபட்ட புனித தலம்

தமிழகத்தின்  சிறந்த ஆன்மிக  ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் திருக்கோழம்பியம் ஆலயத்தில் அம்பிகை பசுரூபத்தில் சிவனை வழிபட்ட புனித தலம் என்பது யாருக்கும் தெரியாத ஆன்மிக ரகசியம். மயிலாடுதுறை–கும்பகோணம் சாலையில் ஆடுதுறையிலிருந்து தெற்கே 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்தத் தலம், அருள்மிகு கோகர்ணேஸ்வரர், கொளம்பநாதர் என வழங்கப்படும் சிவபெருமானின் திருத்தலம். அம்பிகை உலகில் சிவபூஜையின் பெருமையை எடுத்துரைக்க பசுவாக அவதரித்து தவம் செய்த இடம் என்பதே இந்தத் தலத்தின் சிறப்பு.

26
லிங்கத்தில் பதிந்திருக்கும் அந்தக் குளம்படிச் சின்னம்
Image Credit : Asianet News

லிங்கத்தில் பதிந்திருக்கும் அந்தக் குளம்படிச் சின்னம்

அன்னையின் தபஸால் மகிழ்ந்த சிவபெருமான் ஒருநாள் அவளுக்கு அருள் செய்யும் தருணம் வந்தது. அப்போதெல்லாம் அறியாமலே அம்பிகையின் குளம்படி சிவலிங்கத்தின் மேல் விழ, அந்த ஸ்பரிசத்தால் ஈசன் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு அருள்புரிந்தார். இன்றும் லிங்கத்தில் பதிந்திருக்கும் அந்தக் குளம்படிச் சின்னத்தை பக்தர்கள் தரிசிக்க முடிவது இந்தத் தலத்தின் அதிசயமாகும். இதனால் இந்த ஊர் திருக்கொளம்பியம் என அழைக்கப்பட்டு, பின்னர் திருக்கோழம்பியம் என மருவியது.

Related Articles

Related image1
Spiritual: உருட்டினால் அதிசயம் நடக்கும்.! யாரும் அறிந்திராத ஆன்மிக ரகசியம்.!
Related image2
Spiritual: நெல்லிக்காய் தரும் ராஜயோகம்! கார்த்திகையில் இதை மட்டும் செய்யுங்க.! அடுத்தவர்களுக்கு கொடுத்து உதவும் அளவுக்கு உயர்வு கிடைக்கும்!
36
செம்பியன் மாதேவி அருள் பெற்ற தலம்
Image Credit : Asianet News

செம்பியன் மாதேவி அருள் பெற்ற தலம்

இத்தலத்தில் உள்ள 'பிரம்ம தீர்த்தம்' பெரும் மகிமை வாய்ந்தது. பிரம்மதேவர் பெற்ற சாபம் இத்தீர்த்தத்தில் நீராடி சிவனைப் பணிந்து நீங்கியதாக ஐதிகம் சொல்கிறது. அதேபோல் செம்பியன் மாதேவி இங்கு மல்லிகையைச் சாட்சியாக வைத்து வழிபட்டு வெண்குஷ்ட நோய் நீங்கப் பெற்ற வரலாறும் உள்ளது. 

46
காவடி வழிபாடு இங்குள்ள மற்றொரு முக்கிய நிகழ்வு
Image Credit : Asianet News

காவடி வழிபாடு இங்குள்ள மற்றொரு முக்கிய நிகழ்வு

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்ற நாயன்மார்களால் பாடல் பெற்ற இந்தக் கோயில், 9 முக்கிய சிவத்தலங்களுடன் தொடர்புடையது. ஆடிக் கிருத்திகையில் நடைபெறும் காவடி வழிபாடு இங்குள்ள மற்றொரு முக்கிய நிகழ்வு. திருமணப் பாக்கியம், குழந்தைப்பேறு, வீட்டு வளம் என வேண்டிய வரம் வலைவந்திருப்பது பக்தர்கள் அனுபவப் பேச்சு.

56
அறுகம்புல் அர்ச்சனை வழிபாடு
Image Credit : Asianet News

அறுகம்புல் அர்ச்சனை வழிபாடு

ஆனால் இந்தத் தலத்தை தனித்துவப்படுத்துவது “அறுகம்புல் அர்ச்சனை”. நந்தியின் முன் ஒரு குவளைத் தண்ணீர், அறுகம்புல் வைத்து அர்ச்சனை செய்து வேண்டி, பின்னர் அதை பசுவுக்கு கொடுத்தால் எத்தகைய நோயும் நீங்கிவிடும் என்பது நூற்றாண்டுகளாக நிலைத்த நம்பிக்கை. 

66
பசுக்களின் பிணி தீர்க்கும் திவ்யத் தலம்
Image Credit : Asianet News

பசுக்களின் பிணி தீர்க்கும் திவ்யத் தலம்

அருகிலுள்ள கிராம மக்கள் பசுக்களுக்கு நோய் ஏற்பட்டால் முதலில் திருக்கோழம்பியமே செல்வதற்குக் காரணமும் இதுவே. பசுக்களின் பிணி தீர்க்கும் திவ்யத் தலம் என்ற மகத்துவத்தால், திருக்கோழம்பியம் இன்றும் நம்பிக்கையின் ஒளிவிளக்காகத் திகழ்கிறது.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஆன்மீகம்
கோவில்
கோவில் நிகழ்வுகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Spiritual: மருதாணி செடியை பூஜித்தால் இவ்ளோ நன்மைகளா?! வழிபாடு செய்ய ஏற்ற நாள் இதுதான்!
Recommended image2
Secret Ring: எதிரிகளை விரட்டி அடிக்கும் ரகசிய மோதிரம்.! இதனை கைகளில் அணிந்தால் கடன்களும் காணாமல் போகுமாம்.!
Recommended image3
Spiritual: இனி முரட்டு சிங்கிள்களே இருக்க மாட்டாங்க...! திருமண தடையை போக்கும் எளிய வெள்ளிக்கிழமை பரிகாரங்கள்
Related Stories
Recommended image1
Spiritual: உருட்டினால் அதிசயம் நடக்கும்.! யாரும் அறிந்திராத ஆன்மிக ரகசியம்.!
Recommended image2
Spiritual: நெல்லிக்காய் தரும் ராஜயோகம்! கார்த்திகையில் இதை மட்டும் செய்யுங்க.! அடுத்தவர்களுக்கு கொடுத்து உதவும் அளவுக்கு உயர்வு கிடைக்கும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved