MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Spiritual: நெல்லிக்காய் தரும் ராஜயோகம்! கார்த்திகையில் இதை மட்டும் செய்யுங்க.! அடுத்தவர்களுக்கு கொடுத்து உதவும் அளவுக்கு உயர்வு கிடைக்கும்!

Spiritual: நெல்லிக்காய் தரும் ராஜயோகம்! கார்த்திகையில் இதை மட்டும் செய்யுங்க.! அடுத்தவர்களுக்கு கொடுத்து உதவும் அளவுக்கு உயர்வு கிடைக்கும்!

கார்த்திகை மாதம், நெல்லிக்காய் வழிபாடு மற்றும் தீபம் ஏற்றுவதன் மூலம் ராஜயோகம் பெற ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. இந்த மாதத்தில் செய்யப்படும் தான தர்மங்கள், நம் வாழ்வில் உள்ள இருளை அகற்றி, புதிய வாய்ப்புகளையும், ஆனந்த அனுபவங்களையும் கொண்டு வரும்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Nov 20 2025, 01:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
கார்த்திகையில் இதை மட்டும் செய்யுங்க.!
Image Credit : Asianet News

கார்த்திகையில் இதை மட்டும் செய்யுங்க.!

கார்த்திகை மாதம் தொடங்கியவுடன், ஆன்மீக ஒளி பரவும் காலம் ஆரம்பமாகிறதாக நம்பப்படுகிறது. கார்த்திகை தீபத் திருநாளுடன் வரும் இந்த மாதம், நம் வாழ்க்கையில் உள்ள இருளையும் துன்பத்தையும் அகற்றி, ஞான ஒளியை பரப்பும் காலமாக புராணங்கள் கூறுகின்றன. 

27
ராஜயோகம் கிடைக்கும் உங்களுக்கு
Image Credit : Asianet News

ராஜயோகம் கிடைக்கும் உங்களுக்கு

குறிப்பாக, நெல்லிக்காய் வழிபாடு இந்த மாதத்தில் மிக முக்கியமானது. விஷ்ணுவுக்கு படைக்கபப்படும் நெல்லிக்காய், தாலாட்டை போல் தெய்வீக அதிர்ஷ்டத்தை நமக்குக் கொடுக்கும். கார்த்திகை மாதத்தில் அதிகாலையில் நீராடுவது நாம் செய்த பாவங்களை போக்கம். ஆசனத்தில் அமர்ந்து, மனதை ஒருமுகப்படுத்தி “ஓம் நமோ நாராயணாய” என்று ஜபம் செய்து நெல்லிக்கனியை தானமாக வழங்கினால், ராஜயோகம் கிடைக்கும் என ஸ்மிருதி நூல்கள் கூறுகின்றன. 

Related Articles

Related image1
Spiritual: ருத்ராட்சம் சொல்லும் ஆன்மிக ரகசியம்.! யார் அணியலாம், எப்போது அணியக்கூடாது தெரியுமா?
Related image2
Spiritual: கேட்டதை எல்லாம் தரும் கார்த்திகை ஞாயிறு வழிபாடு.! எந்த கோவிலுக்கு சென்று யாரை வணங்க வேண்டும் தெரியுமா?!
37
வாழ்க்கையில் உயர்வு நிச்சயம்
Image Credit : Asianet News

வாழ்க்கையில் உயர்வு நிச்சயம்

நெல்லிமரத்தடியில் அமர்ந்து விஷ்ணுவை பூஜித்து, அன்னதானம் செய்து, பிறருக்குத் துணை நின்றால், நம் வாழ்க்கையில் உயர்வு நிச்சயம் கிடைக்கும். “தர்மம் செய்தால் தானே ராஜ யோகம் வரும்” என்ற வாக்கு இங்கே உண்மையாகிறது. 

47
புதிய வாய்ப்புகளைக் கொண்டு வரும்
Image Credit : Asianet News

புதிய வாய்ப்புகளைக் கொண்டு வரும்

கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றி வழிபடுவது, நம் மனக்குழப்பங்களையும் கர்ம ரணங்களையும் அகற்றி, புதிய வாய்ப்புகளைக் கொண்டு வரும் என்றும் நம்பப்படுகிறது. 

57
ஆனந்த அனுபவங்கள் அதிகரிக்கும்
Image Credit : Asianet News

ஆனந்த அனுபவங்கள் அதிகரிக்கும்

கார்த்திகை மாதத்தில் கோயில்களுக்குச் சென்று தரையைக் கழுவி கோலமிடுவது, பணிவு மற்றும் சேவை உணர்வை வளர்க்கிறது. சிவாலயங்களில் தினமும் விளக்கேற்றி வழிபட்டால், நம் வாழ்க்கையிலும் வெளிச்சம், நல்லோர் சந்திப்பு, ஆனந்த அனுபவங்கள் அதிகரிக்கும்.

67
தெய்வீக ஆற்றல் மிகுந்த காலம்
Image Credit : Asianet News

தெய்வீக ஆற்றல் மிகுந்த காலம்

கார்த்திகை மாதம் தெய்வீக ஆற்றல் மிகுந்த காலமாக கருதப்படுகிறது. நெல்லி மரத்தடியில் அமர்ந்து பூஜை செய்வது பித்ரு தோஷ நிவாரணம் மற்றும் சந்திர தோஷ பரிகாரம் எனப் பல நூல்கள் குறிப்பிடுகின்றன. நெல்லிக்கனியை தானமளிப்பது ஆரோக்கியம், புத்தி, வளம் ஆகிய மூன்றையும் அளிக்கும் என்று நம்பப்படுகிறது. 

77
இந்த கார்த்திகையில் நம் வாழ்க்கை ஒளிரட்டும்
Image Credit : Asianet News

இந்த கார்த்திகையில் நம் வாழ்க்கை ஒளிரட்டும்

கார்த்திகை சனியன்று அல்லது கார்த்திகை நட்சத்திர நாளில் நெல்லிக்காய் தானம் செய்தால் வம்ச வளர்ச்சி மற்றும் வியாபாரம் வளர்ச்சி கிடைக்கும் என சாஸ்திரம் கூறுகிறது. இந்த தானம் ரகசியமாக, எதிர்பார்ப்பில்லாமல் செய்யப்படுவது மிகப்பெரும் புண்ணியம் எனும் கருத்தும் உள்ளது.

இந்த மாதம் ஒரு சராசரி மத வழிபாட்டு சடங்கு அல்ல,  இது நம் உள்ளத்தைக் கழுவி, பிறருக்குக் கொடுத்து உதவும் மனப்பான்மையை உருவாக்கும் ஆன்மீகப் பயணம். நம்மால் செய்யப்படும் நெல்லிக்காய் தானம், தீப தானம், அன்னதானம், அவர்கள் வாழ்வை ஒளிரச் செய்தாலும், திரும்பி நம்மையே உயர்த்தும். இந்த கார்த்திகையில் நம் வாழ்க்கை ஒளிரட்டும்!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஆன்மீகம்
கோவில்
கோவில் நிகழ்வுகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மகா சிவராத்திரி உருவான வரலாறு: ஏன் இந்த இரவு இவ்வளவு புனிதமானது? முழு விபரம்!
Recommended image2
தனுசு ராசியினர் வழிபட வேண்டிய சிவன் கோயில் எங்கு இருக்கிறது? என்ன பலன் கிடைக்கும்?
Recommended image3
வாஸ்து தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில் – கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் கோயில்!
Related Stories
Recommended image1
Spiritual: ருத்ராட்சம் சொல்லும் ஆன்மிக ரகசியம்.! யார் அணியலாம், எப்போது அணியக்கூடாது தெரியுமா?
Recommended image2
Spiritual: கேட்டதை எல்லாம் தரும் கார்த்திகை ஞாயிறு வழிபாடு.! எந்த கோவிலுக்கு சென்று யாரை வணங்க வேண்டும் தெரியுமா?!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved