MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • கோலிக்கே சவால்! உச்சத்துக்கு சென்ற பெண்கள் கிரிக்கெட் வீராங்கனைகளின் பிராண்ட் மதிப்பு

கோலிக்கே சவால்! உச்சத்துக்கு சென்ற பெண்கள் கிரிக்கெட் வீராங்கனைகளின் பிராண்ட் மதிப்பு

உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளின் பிராண்ட் மதிப்பு 100% மேல் உயர்ந்துள்ளது. ஹர்மன் பிரீத் கௌர், ஸ்மிருதி மந்தானா போன்றோர் விளம்பர உலகில் முக்கிய முகங்களாக மாறியுள்ளனர்.

2 Min read
Author : Raghupati R
Published : Nov 04 2025, 02:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பெண்கள் கிரிக்கெட் பிராண்ட் மதிப்பு
Image Credit : Asianet News

பெண்கள் கிரிக்கெட் பிராண்ட் மதிப்பு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை கைப்பற்றி வரலாற்றை படைத்ததற்குப் பிறகு, அவர்கள் விளையாட்டிலும் பிராண்ட் மதிப்பிலும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளனர். ஹர்மன் பிரீத் கௌர், ஸ்மிருதி மந்தானா, ஜெமிமா ரொட்ரிக்ஸ், தீப்தி சர்மா ஆகியோர் தற்போது இந்திய விளம்பர உலகில் பெரிய காந்த சக்தியாக மாறி வருகின்றனர். ஒருகாலத்தில் விராட் கோலியின் மட்டத்திற்குச் செல்ல முடியுமா என கேள்வி எழுந்திருந்தாலும், இன்று இந்த வீராங்கனைகள் பல பிராண்டுகளில் முதலாம் தேர்வாக மாறியுள்ளனர்.

24
பிரான்ட் மதிப்பில் 100% மேலான உயர்வு
Image Credit : Asianet News

பிரான்ட் மதிப்பில் 100% மேலான உயர்வு

இக்கோப்பை வெற்றியால் பெண்கள் கிரிக்கெட் வீராங்கனைகளின் பிராண்ட் மதிப்பு அதிகரித்துள்ளது JSW Sports மற்றும் Baseline Ventures போன்ற ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக ஹர்மன் பிரீத் கௌர், ஸ்மிருதி மந்தானா ஆகியோரின் சமூக ஊடகங்களின் பின்தொடர்புகள் இரட்டிப்பானதால், பல பிராண்டுகள் இவர்களை இணைத்துக் கொள்ள முனைந்துள்ளன. கோலிக்குப் பின், இவர்களும் விளம்பர உலகில் முக்கிய முகங்களாக உயர்ந்துள்ளனர்.

Related Articles

Related image1
உலகக் கோப்பை வென்ற இந்திய வீராங்கனைகளை சந்திக்கும் பிரதமர் மோடி!
Related image2
இந்திய வீராங்கனைகளுக்கு வைர நகைகள்..! பரிசுகளை அள்ளிக் கொடுக்கும் தொழில் அதிபர்!
34
எவ்வளவு உயர்ந்தது பிராண்ட் விலை?
Image Credit : Instagram

எவ்வளவு உயர்ந்தது பிராண்ட் விலை?

ET-யின் தகவல்படி, விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு ரூ.45–ரூ.8 கோடி வரை உள்ளது. முன்பு இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளின் பிராண்ட் விலை சராசரியாக ரூ.30 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை இருந்தது. ஆனால் உலகக்கோப்பை வெற்றிக்குப் பின்பு, அது ரூ.60 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை உயர்ந்துள்ளது. இதனால் மகளிர் வீராங்கனைகளுக்கு பிராண்ட் ஒப்பந்தங்கள் குவிந்து வருகின்றன.

44
முன்னணியில் ஸ்மிருதி மந்தானா
Image Credit : Getty

முன்னணியில் ஸ்மிருதி மந்தானா

ஸ்மிருதி மந்தானா தற்போது 16 வருடங்களின் தூதராக உள்ளார். ஒவ்வொரு பிராண்டுக்கும் ரூ.1.2–ரூ.2 கோடி வரை கட்டணம் பெறப்படுகிறது. ஜெமிமா ரொட்ரிக்ஸ் Red Bull, Boat, Nike, Surf Excel போன்ற பிராண்டுகளுடன் இணைந்துள்ளார்; அவர் ரூ.75 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை பெறுகிறார். Herbalife, Nike, Boat, Puma, Adidas, Surf Excel, Coca-Cola போன்ற பெரிய நிறுவனங்கள் பெண்கள் கிரிக்கெட் வீராங்கனைகளுடன் ஒப்பந்தம் செய்து வருகின்றன. கூகுள் ஜெமினி, எஸ்பிஐ, பிஎன்பி மெட்லைஃப், ஹூண்டாய், மஹிந்திரா போன்ற நிறுவனங்களும் மகளிர் வீராங்கனைகளை தங்கள் பிரச்சாரங்களில் இடம் அளிக்கத் தொடங்கியுள்ளன.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பெண்கள்
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
எகிறும் எதிர்பார்ப்புகள்.. அதிரும் அறிவிப்புகள்..? இன்று தாக்கலாகிறது இடைக்கால பட்ஜெட்
Recommended image2
தங்கத்தின் மீது இவ்வளவு வரிகளா? நகை வாங்குவதற்கு முன் இதை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
Recommended image3
வெயிட்டிங் டிக்கெட் இனி ஈசியா கன்பார்ம் ஆகும்.. IRCTC-யில் 'சூப்பர்' ஆப்ஷன்.. நோட் பண்ணிக்கோங்க!
Related Stories
Recommended image1
உலகக் கோப்பை வென்ற இந்திய வீராங்கனைகளை சந்திக்கும் பிரதமர் மோடி!
Recommended image2
இந்திய வீராங்கனைகளுக்கு வைர நகைகள்..! பரிசுகளை அள்ளிக் கொடுக்கும் தொழில் அதிபர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved