MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து! 21 பேர் பலி! பலர் படுகாயம்!

கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து! 21 பேர் பலி! பலர் படுகாயம்!

இலங்கையின் கதிர்காமத்தில் இருந்து குருநாகல் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர். 

1 Min read
Author : vinoth kumar
| Updated : May 11 2025, 03:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
75 பயணிகளுடன் சென்ற பேருந்து விபத்து

75 பயணிகளுடன் சென்ற பேருந்து விபத்து

இலங்கையின் கதிர்காமத்தில் இருந்து  75 பயணிகளுடன் பேருந்து ஒன்று குருநாகல் நோக்கி வந்துக்கொண்டிருந்தது. அப்போது நுவரெலியா- கம்பளை மலைப்பகுதி சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடி  100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

23
பலர் படுகாயம்

பலர் படுகாயம்

மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 
 

Related Articles

Related image1
நெய்வேலி என்எல்சியில் பயங்கர தீ விபத்து! திணறும் தீயணைப்புதுறையினர்! கோடிக்கணக்கில் சேதம்!
Related image2
அதிகாலையில் நொடி பொழுதில் நடந்த பயங்கர விபத்து! 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு! 16 பேர் படுகாயம்!
33
புத்த மத துறவிகள்

புத்த மத துறவிகள்

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பேருந்தில் இருந்த அனைவரும் புத்த மத துறவிகள் என்பதும் 20 பேர் மட்டுமே செல்ல அனுமதி உள்ள பேருந்தில் 70க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததால் விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. பேருந்தில் விபத்தில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விபத்து
உலகம்
அரசு பேருந்து

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
Recommended image2
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?
Recommended image3
இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
Related Stories
Recommended image1
நெய்வேலி என்எல்சியில் பயங்கர தீ விபத்து! திணறும் தீயணைப்புதுறையினர்! கோடிக்கணக்கில் சேதம்!
Recommended image2
அதிகாலையில் நொடி பொழுதில் நடந்த பயங்கர விபத்து! 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு! 16 பேர் படுகாயம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved