MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஜனனி, மதிவதினியை கடத்தியது ராணாவா? புரியாத புதிராய் மாறிய தேவசகாயம் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

ஜனனி, மதிவதினியை கடத்தியது ராணாவா? புரியாத புதிராய் மாறிய தேவசகாயம் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தேவசகாயம் வீட்டிற்கு போலீஸ் உடன் சென்றுள்ள ஜனனிக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 16 2026, 11:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி, மதிவதினி இருவரும் தேவசகாயத்திடம் இருந்து தப்பித்து வெளியே வந்துள்ளனர். அதேபோல் ஜனனி அமுதாவை கொல்லவில்லை என்பதற்கான ஆதாரத்தையும், சக்தி கொடுத்துள்ளதால், ஜனனி மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. தேவசகாயத்திடம் இருந்து தப்பித்த ஜனனி மற்றும் மதிவதினியை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். இதையடுத்து தங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய தேவசகாயத்தை போலீசிடம் பிடித்துக் கொடுக்க முடிவெடுத்த ஜனனி அந்த பங்களாவிற்கு போலீஸ் உடன் செல்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
ஜனனிக்கு காத்திருந்த அதிர்ச்சி
Image Credit : youtube/suntv

ஜனனிக்கு காத்திருந்த அதிர்ச்சி

தேவசகாயத்தின் பங்களாவுக்கு சென்ற பின்னர் தான் ஜனனிக்கு மிகப்பெரிய பேரதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஒரு முதியவர் இருக்கிறார். அவர் தான் ஓய்வுபெற்ற பாதுகாப்புப்படை வீரர் என கூறுகிறார். பின்னர் வீட்டின் உள்ளே போய் பார்த்தபோது எல்லாமே டோட்டலாக மாறி இருக்கிறது. தேவசகாயம் இருக்கும் போது வீட்டில் திரும்பிய பக்கமெல்லாம் யேசுவின் போட்டோ இருக்கும். ஆனால் தற்போது இந்துக் கடவுகளின் போட்டோக்கள் தான் நிரம்பி இருக்கின்றன. இதையடுத்து தன்னை அடைத்து வைத்திருந்த ரூமுக்கு சென்று பார்க்கிறார் ஜனனி. அங்கும் அவருக்கு எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை.

Related Articles

Related image1
ஜனனி பற்றி வந்த அப்டேட்... அரண்டுபோன ஆதி குணசேகரன்; போலீஸின் புது ட்விஸ்ட் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Related image2
சக்தியிடம் சிக்கும் வீடியோ... காசு கொடுத்து கதையை முடிக்கும் ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது ட்விஸ்ட்
35
தப்பித்த தேவசகாயம்
Image Credit : youtube/suntv

தப்பித்த தேவசகாயம்

பின்னர் வீட்டின் பின்புறம் உள்ள அவுட் ஹவுஸிற்கு போலீசை அழைத்து செல்கிறார். அங்கும் எந்தவித ஆதாரமும் சிக்கவில்லை. இதனால் ஜனனி மற்றும் மதிவதினி இருவருமே கன்பியூஸ் ஆகி இருக்கிறார்கள். உடல் உறுப்புகளை திருடி விற்கும் கும்பலைச் சேர்ந்த தேவசகாயத்தை எப்படியாவது போலீஸில் பிடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்கிற ஐடியாவில் அந்த பங்களாவுக்கு வந்த ஜனனிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் அங்கிருந்து ஜனனி மற்றும் மதிவதினியை போலீசார் பத்திரமாக அழைத்துச் செல்கிறார்கள். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

45
ஜனனியை கடத்தியது யார்?
Image Credit : youtube/suntv

ஜனனியை கடத்தியது யார்?

பின்னர் அறையில் இருவரும் ஆலோசிக்கும் போது ஜனனி, இதுக்குப் பின்னாடி நிறைய கேம் இருக்கு என சொல்லும் மதிவதினி, குணசேகரனை தாண்டி இதில் வேறு யாருடைய தொடர்போ இருக்கிறது என சொல்கிறார். அநேகமாக மதிவதினியின் கணவர் ராணா தான் இந்த வேலையை செய்திருப்பாரோ என்கிற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் மதிவதினி அவரை பிரிந்துவிட்டார். அவர் மீது இருந்த கோபத்தில் அவரை கடத்தி வர வைத்து, அவரை கொல்ல பிளான் போட்டிருக்கக் கூடும். அதே நேரத்தில் ஜனனியும் மதிவதினியின் தோழி என்பதால் அவரையும் இந்த சிக்கலில் மாட்டிவிட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.

55
ஆதி குணசேகரனின் உள்குத்து
Image Credit : youtube/suntv

ஆதி குணசேகரனின் உள்குத்து

மறுபுறம் வீட்டில் உள்ள பெண்கள் அனைவரையும் மண்டையை கழுவி இராமேஸ்வரத்திற்கு சென்று திதி கொடுக்க சம்மதம் வாங்கி இருக்கிறார் ஆதி குணசேகரன். அவரின் இந்த பிளானிலும் ஏதோ உள்குத்து இருப்பது போல தெரிகிறது. பெண்கள் அனைவரையும் இராமேஸ்வரம் அழைத்து சென்று, அங்கு தான் ஏற்கனவே ராணா அம்மாவின் கதையை முடித்ததை போல், இந்த பெண்களையும் தீர்த்துக்கட்ட குணசேகரன் பிளான் போட்டிருக்கிறாரா என்பது புரியாத புதிராக இருக்கிறது. இதையடுத்து என்ன நடந்தது? ஆதி குணசேகரனின் பிளான் என்ன என்பது இனி வரும் எபிசோடில் தெரியவரும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
வீட்டை விட்டு துரத்திவிட்ட பாக்கியம்... உயிரைவிடத் துணிந்த தங்கமயில் - பரபரப்பான திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
Recommended image2
நிலா கொடுத்த பலே ஐடியா... பெரியப்பாவை கடத்திய சோழன் - அய்யனார் துணை சீரியலில் செம ட்விஸ்ட்
Recommended image3
அருணிடம் சரண்டர் ஆன முத்து... ரவியை பிளாக்மெயில் செய்யும் நீத்து - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Related Stories
Recommended image1
ஜனனி பற்றி வந்த அப்டேட்... அரண்டுபோன ஆதி குணசேகரன்; போலீஸின் புது ட்விஸ்ட் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
சக்தியிடம் சிக்கும் வீடியோ... காசு கொடுத்து கதையை முடிக்கும் ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved