MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ராத்திரியோட 3 பேரையும் முடிக்கணும்; ஆர்டர் போட்ட குணசேகரன்... ஆபத்தில் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

ராத்திரியோட 3 பேரையும் முடிக்கணும்; ஆர்டர் போட்ட குணசேகரன்... ஆபத்தில் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி, ஜீவானந்தம் மற்றும் பார்கவியின் கதையை முடிக்க ஆதி குணசேகரன் புது ரெளடி கும்பலை இறக்கி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 22 2025, 08:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜீவானந்தம் மற்றும் பார்கவி உயிரோடு இருக்கும் விஷயம் ஆதி குணசேகரனுக்கு தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி அவர்களை ஜனனி சந்தித்து காப்பாற்ற தயாராகி வருவதையும் அறிந்த குணசேகரன், அவர்கள் இருக்கும் இடத்தை சுற்றி ரெளடிகளை இறக்கி இருக்கிறார். இதனால் தாங்கள் தஞ்சமடைந்து இருக்கும் மில்லை விட்டு வெளியேற முடியாமல் மூவரும் இருக்கிறார்கள். நள்ளிரவில் அங்கிருந்து கிளம்ப ஜனனி பிளான் போட்டிருந்த நிலையில், ரெளடிகளும் அவர்களை நள்ளிரவில் போட்டுத்தள்ள தயாராகி வருகிறார்கள்.

24
ஆதி குணசேகரன் போட்ட உத்தரவு
Image Credit : youtube/suntv

ஆதி குணசேகரன் போட்ட உத்தரவு

ஜீவானந்தம், பார்கவி ஆகியோர் உயிரோடு இருக்கும் விஷயத்தை கதிர் மற்றும் ஞானத்திடம் சொல்லும் ஆதி குணசேகரன், இன்றைக்கு ராத்திரியோடு மூன்று பேரின் கதையையும் முடிக்க வேண்டும் என்று தான் ரெளடிகளுக்கு கூறி இருப்பதாக சொல்கிறார். அதுமட்டுமின்றி அவர்கள் உயிரோடு இருக்கும் விஷயத்தை நாம் வெளியில் காட்டிக் கொள்ளக் கூடாது எனவும் தன் தம்பிகளிடம் கூறுகிறார். மறுபுறம் போதையில் இருக்கும் கதிர், இரவு மண்டபத்தில் சாப்பிட மறுக்கும் தர்ஷனை, உட்கார்ந்து சாப்பிடுமாறு வற்புறுத்துகிறார். அன்புக்கரசியும் அருகில் இருந்துகொண்டு, என்ன வேண்டாம் என மிரட்டும் தொனியில் கேட்கிறார். அதற்கு தர்ஷன் எதுவுமே வேண்டாம் என சொல்கிறார்.

Related Articles

Related image1
சக்திக்கு சவால்விட்ட ஆதி குணசேகரன்... ரெளடிகளிடம் சிக்கினாரா ஜனனி? - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Related image2
ஜனனி vs குணசேகரன் இறுதியுத்தம்... கிளைமாக்ஸை நெருங்கிய மோதல்; ஜெயித்தது யார்? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
34
ஜீவானந்தத்திற்கு வந்த டவுட்
Image Credit : youtube/suntv

ஜீவானந்தத்திற்கு வந்த டவுட்

இரவில் ஜனனி, பார்கவி மற்றும் ஜீவானந்தம் ஆகியோர் வெளியே சென்று பார்க்கும்போது, ரெளடிகள் கேட் அருகில் இருப்பதை பார்த்து பதறிப்போகிறார்கள். இதனால் உஷார் ஆன ஜீவானந்தம், ஜனனியிடம் நந்தினிக்கு போன் போட்டு, தர்ஷனை எந்த நேரத்திலும் மண்டபத்தில் இருந்து வெளியே கூட்டிட்டு வருவது போல் ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளுமாரு சொல்லச் சொல்கிறார். அந்த ரெளடி கும்பல் யதார்த்தமாக அங்கு நிற்கவில்லை. ஒரு குறிவச்சு தான் காத்திருக்கிறார்கள் என கூறுகிறார் ஜீவானந்தம். இதனால் ஜனனியும் பார்கவியும் ஷாக் ஆகிறார்கள்.

44
செம ட்விஸ்ட் வெயிட்டிங்
Image Credit : youtube/suntv

செம ட்விஸ்ட் வெயிட்டிங்

விடிந்தால் தர்ஷனுக்கு கல்யாணம், அதற்குள் ரெளடிகளிடம் இருந்து எஸ்கேப் ஆகி பார்கவியையும் தர்ஷனையும் சேர்த்து வைப்பார்களா ஜனனியும் ஜீவானந்தமும்? இல்லையெனில் ஆதி குணசேகரன் அனுப்பிய வீரா குரூப், ஜனனி உள்பட மூவரையும் கொன்றுவிடுவார்களா? மண்டபத்தில் இருந்து தர்ஷனை கடத்தி வரச் சொன்ன ஜீவானந்தத்தின் பிளானை நந்தினி சக்சஸ்ஃபுல் ஆக முடித்தாரா? தர்ஷனுக்கு யாருடன் திருமணம் ஆகப்போகிறது? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் தான் பதில் கிடைக்கும் என்பதால் இனி ஒவ்வொரு எபிசோடும் செம ட்விஸ்ட் காத்திருக்கிறது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சன் தொலைக்காட்சி
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கடந்த கால காயங்கள்! செல்லமே செல்லமே தொடரில் விஜி அழுததற்கான உண்மையான காரணம் என்ன? நெகிழ்ச்சியான எபிசோட்!
Recommended image2
மனைவியுடன் ஓடிப்பிடிச்சு விளையாடிய பிரபு; செம காண்டான சத்யா போடும் மாஸ்டர் பிளான் – மருமகள் சீரியல் டுவிஸ்ட்!
Recommended image3
அர்ஜுன் கொடுத்த ஷாக்.. டிவோர்ஸ் நோட்டீஸில் கையெழுத்திட்ட சத்யா! ஆடுகளம் சீரியலில் உடைந்தது அர்ஜுன் - சத்யா பந்தம்?
Related Stories
Recommended image1
சக்திக்கு சவால்விட்ட ஆதி குணசேகரன்... ரெளடிகளிடம் சிக்கினாரா ஜனனி? - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
ஜனனி vs குணசேகரன் இறுதியுத்தம்... கிளைமாக்ஸை நெருங்கிய மோதல்; ஜெயித்தது யார்? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved