MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ரிட்டர்ன் வந்த பார்கவி; விசாரணை வளையத்துக்குள் சிக்கிய ஆதி குணசேகரன்! எதிர்பாரா திருப்பங்களுடன் எதிர்நீச்சல் 2

ரிட்டர்ன் வந்த பார்கவி; விசாரணை வளையத்துக்குள் சிக்கிய ஆதி குணசேகரன்! எதிர்பாரா திருப்பங்களுடன் எதிர்நீச்சல் 2

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் பார்கவி வெளிநாட்டுக்கு செல்லாமல் மீண்டும் திரும்பி வந்துவிட்ட நிலையில், அடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Aug 13 2025, 08:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ethirneechal Thodargiradhu Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த சீரியலில் ஆதி குணசேகரனுக்கு எதிரான கேஸை விசாரிக்கும் பொறுப்பில் இருந்து கொற்றவை விலகிக் கொள்ள வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து நீதிமன்ற வாயிலில் தர்ணாவில் ஈடுபட்ட ஜனனி, ரேணுகா மற்றும் நந்தினியை நீதிபதி நேரில் அழைத்து பேசினார். அப்போது கொற்றவையை இனி இந்த வழக்கை விசாரிக்க நியமிக்க முடியாது என திட்டவட்டமாக கூறிய நீதிபதி, நேர்மையான போலீஸ் அதிகாரி இந்த வழக்கை விசாரிப்பார் என கூறினார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

24
அறிவுக்கரசி மீது சந்தேகப்படும் ஜனனி
Image Credit : youtube/suntv

அறிவுக்கரசி மீது சந்தேகப்படும் ஜனனி

கோர்ட்டில் இருந்து வீட்டுக்கு வரும் ஜனனி, நந்தினி மற்றும் ரேணுகா, ஈஸ்வரி அடிபட்டுக் கிடந்த அறையில் ஏதேனும் ஆதாரம் கிடைக்கிறதா என தேடுகிறார்கள். அவர்களுக்கு எந்தவித ஆதாரமும் சிக்கவில்லை. உடனே கொற்றவை வந்தபோது அறிவுக்கரசி இந்த ரூமில் இருந்ததாக சொன்னதை நினைவுகூர்ந்த ஜனனி, அவளுக்கு இங்க என்ன வேலை, அப்போ அவ தான் எதோ செய்திருக்கிறாள் என சந்தேகப்படுகிறாள். இதனால் ஆதாரம் அறிவுக்கரசியிடம் இருப்பதை ஜனனி கண்டுபிடிக்கவும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட புது போலீஸ் அதிகாரியும் வீட்டுக்கு வருகிறார்.

Related Articles

Related image1
கொற்றவைக்கு தடைவிதித்த நீதிபதி; ஜனனிக்கு அடிமேல் அடி கொடுக்கும் ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Related image2
ட்விஸ்ட் மேல் ட்விஸ்டால் டாப் கியரில் எகிறிய டிஆர்பி; எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் படைத்த புது சாதனை..!
34
ஆதி குணசேகரனிடம் விசாரிக்க வந்த போலீஸ்
Image Credit : youtube/suntv

ஆதி குணசேகரனிடம் விசாரிக்க வந்த போலீஸ்

அவர் நேராக வந்ததும், ஆதி குணசேகரனிடம், நான் இந்த வழக்கோட விவரங்களையெல்லாம் படித்துவிட்டேன். அதில் ஈஸ்வரி தாக்கப்பட்டிருக்கிறார் என்று ரிப்போர்ட் சொல்லுது. அது சம்பந்தமாக உங்க வீட்டில் உள்ள ஆட்களையெல்லாம் விசாரிக்க வேண்டும் என சொல்கிறார். இதனால் ஆதி குணசேகரன், கதிர், அறிவுக்கரசி, கரிகாலன் ஆகியோர் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளனர். அவர்களிடம் விசாரணை ஆரம்பமாகிறது. அதில் அறிவுக்கரசி தன்னிடம் உள்ள ஆதாரத்தை வெளியிடுவாரா? இந்த விசாரணையில் உண்மை வெளிவருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

44
கனடா செல்லாமல் திரும்பி வந்த பார்கவி
Image Credit : youtube/suntv

கனடா செல்லாமல் திரும்பி வந்த பார்கவி

மறுபுறம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈஸ்வரியின் உடல்நிலையில், எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், ஃபீல் பண்ணும் தர்ஷினி, ஜீவானந்தத்திடம் கண்ணீர்விட்டு அழுகிறார். அந்த சமயத்தில் திடீர் ட்விஸ்டாக பார்கவி மருத்துவமனைக்கு வருகிறார். அவரை பார்த்து ஷாக் ஆன ஜீவானந்தம் நீ ஏன் இங்க வந்த என கேட்க, என்னால் சுயநலமாக முடிவு எடுக்க முடியல சார் என சொல்கிறார் பார்கவி. அவரின் வரவால் இனி தர்ஷனின் கல்யாணத்திலும் அதிரடி திருப்பங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இனி வரும் எபிசோடுகள் சரவெடியாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சன் தொலைக்காட்சி
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
குணசேகரனின் பிளானில் மறைந்திருக்கும் மர்மம்... போலீசில் புகார் அளிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது
Recommended image2
தங்கமயிலால் கணவரை பிரியும் மீனா... கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய செந்தில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image3
உயில் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த நிலா... சோழன் எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Related Stories
Recommended image1
கொற்றவைக்கு தடைவிதித்த நீதிபதி; ஜனனிக்கு அடிமேல் அடி கொடுக்கும் ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
ட்விஸ்ட் மேல் ட்விஸ்டால் டாப் கியரில் எகிறிய டிஆர்பி; எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் படைத்த புது சாதனை..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved