- Home
- Tamil Nadu News
- ரூ.1.20 லட்சம் மானியம்.. அள்ளிக்கொடுக்கும் அரசு.. குஷியில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்!
ரூ.1.20 லட்சம் மானியம்.. அள்ளிக்கொடுக்கும் அரசு.. குஷியில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்!
தமிழக அரசு, வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு களை எடுக்கும் இயந்திரம் வாங்க மானியம் வழங்குகிறது. 70 சதவீதம் வரை அல்லது அதிகபட்சமாக ரூ.1.20 லட்சம் வரை இந்த மானியம் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. தமிழக அரசு விவசாயிகளுக்காக இலவச மின்சாரம், சூரியசக்தி பம்ப்செட்டுகள், உழவன் செயலி, முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விவசாயிகள் களை எடுக்கும் இயந்திரம் வாங்க 70 சதவிகிதம் வரை மானியத்தை வழங்கி வருகிறது.
இது தொடர்பாக தமிழக அரசின் வேளாண்மை - உழவர் நலத்துறை வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்: வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான துணை இயக்கத் திட்டத்தின் கீழ் விசை களையெடுப்பான்கள் மானியத்தில் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 2 குதிரை திறன் முதல் 7.5 குதிரை திறன் கொண்ட இயந்திரம் வாங்க தமிழக அரசானது அதிகபட்சமாக 1.20 லட்சம் வரை மானியம் வழங்கி வருகிறது.
2 குதிரைத் திறன் முதல் 5 குதிரைத்திறனுக்குக் கீழ் உள்ள இன்ஜினால் இயங்கக்கூடிய இயந்திரம் வாங்க ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 70% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 56.000 வரை மானியம் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத இதர பிரிவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 60% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 48,000 வரை மானியமாக வழங்கப்படுகிறது. சிறு, குறு பிரிவில் அல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 40.000 வரையும், இதர விவசாயிகளுக்கு 40% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 32,000 வரை மானியமானது வழங்கப்படுகிறது.
5 குதிரைத் திறன் முதல் 7.5 குதிரைத்திறனுக்குக் கீழ் உள்ள இன்ஜினால் இயங்கக்கூடியது இயந்திரம் வாங்க ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 70% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 1,05000 வரையும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத இதர பிரிவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 60% சதவீதம் அல்லது அதிகபட்சமாக . 90,000 மானியம் வழங்கப்படுகிறது. சிறு, குறு பிரிவில் அல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 75,000 வரை மானியமும், இதர விவசாயிகளுக்கு 40% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 60,000 மானியமாக வழங்கப்படுகிறது.
7.5 மற்றும் அதற்கும் மேல் குதிரைத் திறன் உள்ள இன்ஜினால் இயங்கக்கூடிய இயந்திரங்கள் வாங்க, ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 70% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 1,19,000 வரையும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத இதர பிரிவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 60% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 10.2000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. சிறு, குறு பிரிவில் அல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 85,000 வரையும் வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு 40% சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5. 68,000 ரூபாய் வரை மானியம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

