MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆணவப் படு**லை செய்யப்பட்ட கவின் வீட்டில் முகாமிடும் அரசியல் தலைவர்கள் - கனிமொழி, நயினார் விசிட்

ஆணவப் படு**லை செய்யப்பட்ட கவின் வீட்டில் முகாமிடும் அரசியல் தலைவர்கள் - கனிமொழி, நயினார் விசிட்

நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷ் வீட்டிற்கு எம்.பி. கனிமொழி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

1 Min read
Author : Velmurugan s
Published : Jul 31 2025, 08:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழகத்தை உலுக்கிய ஆணவப்படுகொலை
Image Credit : Asianet News

தமிழகத்தை உலுக்கிய ஆணவப்படுகொலை

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த கவின் செல்வணேஷ் என்ற மென்பொருள் பொறியாளர் தனது பள்ளித் தோழியும், சித்த மருத்துவருமான இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். சென்னையில் பணியாற்றி வந்த கவின் கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்தபடியே தனது பணியை மேற்கொண்டு வந்துள்ளார். இதனிடையே கடந்த ஞாயிற்றுக் கிழமை உடல்நிலை சரியில்லாத தனது தாத்தாவை அழைத்துக் கொண்ட திருநெல்வேலி மாவட்டம் கேடிசி நகரில் செயல்பட்டு வரும் சித்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.

24
மென்பொறியாளர் படுகொலை
Image Credit : Asianet News

மென்பொறியாளர் படுகொலை

அதே மருத்துவமனையில் தான் கவினின் காதலியும் பணியாற்றி வந்துள்ளார். கவினின் வருகையை அறிந்த இளம் பெண்ணின் சகோதரரான சுர்ஜித் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். அங்கு நின்றுகொண்டிருந்த கவினை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்ட சுர்ஜித், தனது வீட்டின் அருகே அழைத்துச் சென்று கவினை வெட்டி படுகொலை செய்துள்ளார்.

Related Articles

Related image1
கவின் ஆணவக் கொ**லை! ஒருவழியாக சுர்ஜித்தின் தந்தையான சப் இன்ஸ்பெக்டர் கைது! தொடரும் பதற்றம்!
Related image2
Now Playing
சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கு ! தமிழக அரசு அதிரடி
34
சுர்ஜித்தின் தந்தை கைது
Image Credit : Asianet News

சுர்ஜித்தின் தந்தை கைது

சுர்ஜித்தின் தந்தை, சரவணன், தாய் என இருவரும் காவல் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றி வரும் நிலையில், இவர்களின் உடந்தையுடன் தான் இந்த ஆணவப்படுகொலை நடைபெற்றுள்ளது என்று கூறி கவினின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கவினின் உடல் தற்போது வரை உறவினர்களால் பெறப்படாமல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

பாதிக்கப்பட்ட இளைஞரின் உறவினர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து சுர்ஜித்தின் தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டு ஆகஸ்ட் 8ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

44
அரசியல் கட்சி தலைவர்கள் ஆறுதல்
Image Credit : Asianet News

அரசியல் கட்சி தலைவர்கள் ஆறுதல்

இந்நிலையில் பாதிக்கப்பட்ட கவினின் குடும்பத்தினருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கவினின் உடலை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக இன்று காலை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கவினின் வீட்டிற்கு நேரில் சென்று தங்களது ஆறுதலைத் தெரிவித்தனர்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கௌரவக் கொலை
திருநெல்வேலி
குற்றம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அதிகாலையிலேயே கோர விபத்து! இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! 5 பேர் சம்பவ இடத்திலேயே ப*லி
Recommended image2
Tamil News Live today 06 December 2025: போலீஸ் விசாரணையில் விசாலாட்சி கொடுத்த ட்விஸ்ட்... கொற்றவையிடம் என்ன சொன்னார்? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image3
இந்த ஐந்து நாள் பயிற்சி போய்ட்டு வந்தாலே போதும்! கை நிறைய சம்பாதிக்கலாம்! உங்க லைஃப் டோட்டலா மாறிடும்!
Related Stories
Recommended image1
கவின் ஆணவக் கொ**லை! ஒருவழியாக சுர்ஜித்தின் தந்தையான சப் இன்ஸ்பெக்டர் கைது! தொடரும் பதற்றம்!
Recommended image2
Now Playing
சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கு ! தமிழக அரசு அதிரடி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved