MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கோவைக்கு மெட்ரோ ரயில் வரக்கூடது என்ற நோக்கத்தோடே திமுக அறிக்கை தயாரித்துள்ளது.. நயினார் பரபரப்பு

கோவைக்கு மெட்ரோ ரயில் வரக்கூடது என்ற நோக்கத்தோடே திமுக அறிக்கை தயாரித்துள்ளது.. நயினார் பரபரப்பு

கோவைக்கு மெட்ரோ ரயில் வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தோடு தமிழக அரசு சார்பில் திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார்.

2 Min read
Author : Velmurugan s
Published : Nov 21 2025, 10:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழகத்தில் அதிகரிக்கும் கொலை, கொள்ளை குற்றங்கள்
Image Credit : Asianet News

தமிழகத்தில் அதிகரிக்கும் கொலை, கொள்ளை குற்றங்கள்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் நாள்தோறும் கொலைகளும், கொள்ளைகளும் அதிகரித்து வருகின்றன. போதைப்பொருள் கலாசாரம் மாநிலத்தின் எல்லா இடங்களுக்கும் சென்றுவிட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு மட்டும் நான்கு கொலைகள் நடந்திருக்கின்றன. கடந்த ஆட்சியை ஒப்பிடும்போது, குற்றங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கிறது," என்று குற்றம் சாட்டினார்.

24
அரசு மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
Image Credit : Asianet News

அரசு மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

தமிழகத்தில் இதுவரை 14 தாக்குதல் சம்பவங்கள் காவல்துறை மீது நடைபெற்றுள்ளன. பாலியல் குற்றங்கள் 53 சதவீதம் உயர்ந்துள்ளது. மாநிலத்தில் 18,200 பாலியல் குற்றங்கள் பதிவாகியுள்ளன. மாநிலத்தில் கற்பழிப்புச் சம்பவங்கள் கடந்த ஆட்சியை விட 17 சதவீதம் உயர்ந்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் 60 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. தற்கொலை முயற்சிகள் இந்தியாவில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழகத்தில் மிக அதிகமாக உள்ளது. தமிழகம் தற்கொலையின் தலைநகரமாகத் (Suicide Capital) திகழ்ந்து வருகிறது.

கள்ளச்சாராயம் / போதைப் பொருட்கள் உயிரிழப்பு: போதை மற்றும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர் கதையாகி வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், "சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் 63 பேர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தார்கள். கரூரில் 41 பேர் உயிரிழந்தார்கள். கஞ்சாவை அருந்திப் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதை ஆகி வருகிறது," என்று வேதனையுடன் தெரிவித்தார்.

Related Articles

Related image1
நயினாருக்கு எதிராக எடப்பாடியின் பினாமியை களமிறக்கும் ஸ்டாலின்: நெல்லை திமுக வேட்பாளர் இவர் தானா?...
Related image2
மோடிக்கு கடிதம் எழுதுறது இருக்கட்டும்.. விவசாயிகளுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..? முதல்வருக்கு நயினார் கேள்வி
34
மெட்ரோ ரயில் திட்டம் குறித்துப் பகிரங்க குற்றச்சாட்டு
Image Credit : X/@NainarBJP

மெட்ரோ ரயில் திட்டம் குறித்துப் பகிரங்க குற்றச்சாட்டு

கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசின் மீது பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். "திருநெல்வேலிக்கும் மெட்ரோ ரயில் கொண்டு வருவேன் எனத் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், ஏன் தற்போது இது குறித்துத் தெரிவிக்கவில்லை?.

திட்ட அறிக்கையில் குளறுபடி: "கோவை மற்றும் மதுரை மெட்ரோவுக்கு இரண்டு மற்றும் மூன்று நிமிட வித்தியாசம் இருப்பதாகத் தமிழக அரசே ஒரு அறிக்கையை மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது. குறிப்பாக, கோயம்புத்தூருக்கு மெட்ரோ ரயில் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்தத் திட்டத்திற்கான அறிக்கையை மத்திய அரசுக்குத் தமிழக அரசு தவறாக வழங்கி உள்ளது என்று நான் பகிரங்கமாகச் சொல்வேன். மத்திய அரசு, மாநில அரசுக்கு 14ஆம் தேதியன்று அனுப்பிய கடிதத்தில், அந்த அறிக்கையைத் திருப்பி (DPR - Detailed Project Report) அனுப்பி இருக்கிறது. முதல்வர் ஏன் 15-ம் தேதி இந்தக் கடிதத்திற்குப் பதில் எழுதவில்லை? மக்களை ஏன் ஏமாற்றுகிறீர்கள்?" என்று ஆவேசமாகப் பேசினார்.

மெட்ரோ உறுதிமொழி: "மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்படவில்லை. திட்ட அறிக்கை மட்டுமே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. 2026 ஜூன் மாதம் கண்டிப்பாக மெட்ரோ ரயில் கோயம்புத்தூர், மதுரைக்கு வந்துவிடும்," என்று உறுதியாகக் கூறினார்.

44
விவசாயிகள் நலன் குறித்து:
Image Credit : Google

விவசாயிகள் நலன் குறித்து:

தென்னிந்திய இயற்கை வேளாண் பொருட்கள் விவசாயிகள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடியை, குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காகக் கோயம்புத்தூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது தேவையில்லை. நாடு முழுவதும் ₹18,000 கோடி ரூபாயை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளார். மத்திய அரசு குழு பார்த்துவிட்டுச் சென்றதில், நெல் ஈரப்பதம் 17% முதல் 21% வரை இருந்தது என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயினார் நாகேந்திரன்
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
நயினாருக்கு எதிராக எடப்பாடியின் பினாமியை களமிறக்கும் ஸ்டாலின்: நெல்லை திமுக வேட்பாளர் இவர் தானா?...
Recommended image2
மோடிக்கு கடிதம் எழுதுறது இருக்கட்டும்.. விவசாயிகளுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..? முதல்வருக்கு நயினார் கேள்வி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved