MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பயமா? திமுகவுக்கா? அது அகராதியிலேயே கிடையாது! வைகோவின் நச் பதில்!

பயமா? திமுகவுக்கா? அது அகராதியிலேயே கிடையாது! வைகோவின் நச் பதில்!

ஸ்டாலின் மத்திய அரசு அமைப்புகளின் தவறான பயன்பாடு மற்றும் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் குறித்து வைகோ கருத்து தெரிவித்தார்.

1 Min read
Author : vinoth kumar
Published : May 04 2025, 05:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வைகோ

வைகோ

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ: நீட் தேர்வு விலக்கு வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திமுகவின் நான்கு ஆண்டுகால ஆட்சியில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சொல்லாத வாக்குறுதிகளையும் அரசு நிறைவேற்றி உள்ளது. திராவிட மாடல் ஆட்சி திருப்திகரமாக உள்ளது என்றார்.

24
பயம் என்பது திமுகவின் அகராதியிலேயே கிடையாது

பயம் என்பது திமுகவின் அகராதியிலேயே கிடையாது

பயம் என்பது திமுகவின் அகராதியிலேயே கிடையாது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் மத்திய அரசால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், அந்த அமைப்புகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது. திமுகவினர் யாரும் இதைப்பற்றி அஞ்சவும் இல்லை. கவலைப்படவும் இல்லை. 

Related Articles

Related image1
அடேங்கப்பா! மகளிர் விடியல் பயண திட்டம்! இதுவரை இத்தனை கோடி பேர் பயணமா?
Related image2
கடைசி வரை வைகோ தொண்டனாக இருந்துட்டு போறேன்! என்னை கட்சியில் இருந்து நீக்கி விடுங்கள்! மல்லை சத்யா!
34
பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

மேலும் பேசிய அவர் பஹல்காமில் 26 பொதுமக்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. அதே நேரத்தில், முஸ்லிம் இளைஞர்கள் சிலர் துணிச்சலுடன் செயல்பட்டு மீதமுள்ள மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்த செய்தி மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. இந்த செய்தியை ஊடகங்களில் விரிவாக வெளியிடப்படவில்லை. மத்திய அமைச்சரவையில் உள்ள சிலர் போர் தொடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். 

44
அப்பாவி மக்கள் பெருமளவில் உயிரிழக்க நேரிடும்

அப்பாவி மக்கள் பெருமளவில் உயிரிழக்க நேரிடும்

ஆனால், போர் என்பது எளிதான விஷயம் அல்ல. போர் மூண்டால், இரு தரப்பிலும் அப்பாவி மக்கள் பெருமளவில் உயிரிழக்க நேரிடும். பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க ஒத்துழைக்க வேண்டும். சர்வதேச நாடுகளும் இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தீவிரவாதிகள் பதுங்கும் இடங்களைக் கண்டுபிடித்து, அவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். போரை ஆதரிப்பவர்கள் அதன் விளைவுகளைப் பற்றி யோசிக்க வேண்டும் என்றார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வைகோ மதிமுக
அரசியல்
மு. க. ஸ்டாலின்
பிஜேபி
பிரதமர் மோடி

Latest Videos
Recommended Stories
Recommended image1
நெருங்கும் தேர்தல்.. டெண்டர்களை அள்ளி வீசும் திமுக..! டிடிவி தினகரன் ஆவேசம்
Recommended image2
கிடைத்தவரை வாரி சுருட்டும் திமுக.. அவசர அவசரமாக 50 குவாரிகள் ஏலம்.. விளாசும் அன்புமணி
Recommended image3
வெயிலுக்கு குட்பை.. 10 மாவட்டங்களில் பொளக்கப் போகும் மழை.. வானிலை மையத்தின் 'ஜில்' அப்டேட்!
Related Stories
Recommended image1
அடேங்கப்பா! மகளிர் விடியல் பயண திட்டம்! இதுவரை இத்தனை கோடி பேர் பயணமா?
Recommended image2
கடைசி வரை வைகோ தொண்டனாக இருந்துட்டு போறேன்! என்னை கட்சியில் இருந்து நீக்கி விடுங்கள்! மல்லை சத்யா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved