MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கோர்ட் கொடுத்த கிரீன் சிக்னல்! களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை! அலறும் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள்!

கோர்ட் கொடுத்த கிரீன் சிக்னல்! களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை! அலறும் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள்!

டாஸ்மாக் மது விற்பனையில் ரூ.1,000 கோடி முறைகேடு புகாரை அடுத்து அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. உயர் நீதிமன்றம் சோதனைக்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

1 Min read
Author : vinoth kumar
Published : May 16 2025, 08:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
டாஸ்மாக் முறைகேடு
Image Credit : our own

டாஸ்மாக் முறைகேடு

டாஸ்மாக் மது விற்பனை விவகாரத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதனை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கியது.

23
தமிழக அரசின் மனு தள்ளுபடி
Image Credit : our own

தமிழக அரசின் மனு தள்ளுபடி

அதில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல. அமலாக்கத்துறை நடத்திய சோதனை தேச நலனுக்கானது. சோதனை அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Related Articles

Related image1
TASMAC Shop: டாஸ்டாக் கடைகளில் சூப்பர் திட்டம்!! அரசே ரூ.10 கொடுக்கிறது! கொண்டாட்டத்தில் குடிமகன்கள்!
Related image2
டாஸ்மாக் வழக்கு! தமிழக அரசு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்! செந்தில் பாலாஜிக்கு சிக்கலா?
33
அமலாக்கத்துறை சோதனை
Image Credit : our own

அமலாக்கத்துறை சோதனை

இந்நிலையில் அமலாக்கத்துறை சோதனை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் சென்னை மணப்பாக்கம் சி.ஆர். புரத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதைபோல சென்னை சூளைமேடு கல்யாணபுரத்தில் உள்ள எஸ்.என்.ஜே. மதுபான நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சென்னையில் தேனாம்பேட்டை, தி.நகர், அண்ணா சாலை, பெசன்ட் நகர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டாஸ்மாக்
டாஸ்மாக் கடை
சென்னை உயர் நீதிமன்றம்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
Recommended image2
இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
Recommended image3
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!
Related Stories
Recommended image1
TASMAC Shop: டாஸ்டாக் கடைகளில் சூப்பர் திட்டம்!! அரசே ரூ.10 கொடுக்கிறது! கொண்டாட்டத்தில் குடிமகன்கள்!
Recommended image2
டாஸ்மாக் வழக்கு! தமிழக அரசு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்! செந்தில் பாலாஜிக்கு சிக்கலா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved