MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தி.மலை அண்ணாமலையார் கோவிலில் அதிர்ச்சி! அபிஷேகம் பார்த்தப்படியே பக்தருக்கு நேர்ந்த சோகம்! நடந்தது என்ன?

தி.மலை அண்ணாமலையார் கோவிலில் அதிர்ச்சி! அபிஷேகம் பார்த்தப்படியே பக்தருக்கு நேர்ந்த சோகம்! நடந்தது என்ன?

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாயரட்சை அபிஷேகத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால், தெலுங்கானாவைச் சேர்ந்த பக்தர் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : Sep 27 2025, 07:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அண்ணாமலையார் கோவில்
Image Credit : our own

அண்ணாமலையார் கோவில்

உலக புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இக்கோவில் நினைத்தாலே முக்தி தரக் கூடிய புண்ணிய தலமாக விளங்கக்கூடியது. அது மட்டுமல்லாமல் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் போற்றக்வடியது. இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் மாதந்தோறும் வரும் பவுர்ணமி அன்று வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.

25
நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
Image Credit : our own

நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

குறிப்பாக வெள்ளி மற்றும் வார முறை நாட்களில் கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை வழிபட்டு அவரின் அருளை பெறுகின்றனர். இந்நிலையில் அண்ணாமலையால் கோவிலில் பக்தர்கள் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Related image1
100 கி.மீ வேகம்! குறுக்கே வந்த வாகனம்! சுக்கு நூறாக நொறுங்கிய KTM பைக்! இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்!
Related image2
சீமானையே புலம்பவிட்ட விஜய்! அவரது ஆணவ பேச்சுக்கு என்ன நடவடிக்கை? எங்கே போனார் தன்மான பழனிசாமி? முன்னாள் எம்.பி.!
35
 சாயரட்சை அபிஷேகம்
Image Credit : our own

சாயரட்சை அபிஷேகம்

நேற்று முன்தினம் மாலை சாயரட்சை அபிஷேகத்திற்கு அர்த்த மண்டபத்தில் 30 பேர் மட்டுமே அமரக்கூடிய இடத்தில் 40க்கும் மேற்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது தெலுங்கானா மாநிலம் மேற்கு கோதாவரி பகுதியை சேர்ந்த சுரேஷ் (40) என்பவர் தனது தாய் மற்றும் மனைவி குழந்தைகளுடன் அபிஷேகத்தில் கலந்து கொண்ட போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார்.

45
கோவிலில் மயங்கி விழுந்த பக்தர்
Image Credit : our own

கோவிலில் மயங்கி விழுந்த பக்தர்

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் பக்தர்கள் கோவில் ஊழியர்கள் உதவியுடன் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்தவிட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.

55
போலீஸ் விசாரணை
Image Credit : our own

போலீஸ் விசாரணை

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை மாநகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அபிஷேகத்தில் கலந்துகொண்ட பக்தர்கள் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திருவண்ணாமலை
தமிழ்நாடு
மருத்துவமனை

Latest Videos
Recommended Stories
Recommended image1
எல்லாரும் அதிமுககாரன் கிடையாது... கட்சியில் இருப்பேன்டானு சொல்றவன்தான் ரோஷமானவன்..! செங்கோட்டையன் மீது செல்லூர் ராஜூ ஆவேசம்..!
Recommended image2
நாஞ்சில் சம்பத்தை குஷி படுத்திய விஜய்.. முக்கிய பொறுப்பு வழங்கி கௌரவிப்பு..!
Recommended image3
அன்புமணி மீது சிபிஐயில் கடும் புகார்..! வயிற்றில் வாயில் அடித்துக் கொள்ளும் ராமதாஸ் குரூப்
Related Stories
Recommended image1
100 கி.மீ வேகம்! குறுக்கே வந்த வாகனம்! சுக்கு நூறாக நொறுங்கிய KTM பைக்! இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்!
Recommended image2
சீமானையே புலம்பவிட்ட விஜய்! அவரது ஆணவ பேச்சுக்கு என்ன நடவடிக்கை? எங்கே போனார் தன்மான பழனிசாமி? முன்னாள் எம்.பி.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved