காலை எழுந்தவுடன் படுக்கை மடிக்கிறீர்களா? உடனே நிறுத்துங்க!
காலை எழுந்தவுடன் படுக்கையை மடிப்பது நல்ல பழக்கம் என்று பலர் நம்புகிறோம். ஆனால் விஞ்ஞான ரீதியாக பார்க்கும்போது, உடனே படுக்கை மடிப்பது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

படுக்கை மடிப்பு ஆபத்து
தூங்கி எழுந்ததும் படுக்கையைச் சரிசெய்வது ஒழுக்கத்தின் அடையாளம்னு நாம நினைக்கிறோம். ஆனா, தினமும் எழுந்தவுடனே படுக்கையை சரி செய்வது உடல்நிலைக்கு நல்லதில்லைன்னு நிபுணர்கள் எச்சரிக்கிறாங்க. படுக்கையை மடிக்கும் முன் குறைந்தது 30 நிமிடம் காத்திருக்க வேண்டும்னு அவங்க சொல்றாங்க. அதுக்குக் காரணம் இதோ பார்க்கலாம். நாம் தூங்கும்போது, நம் உடலில் இருந்து வியர்வையும் இறந்த சரும செல்களும் வெளியேறும்.
தூசி பூச்சி பிரச்சனை
இவை பெட்ஷீட் மற்றும் போர்வைகளில் சேகரமாகின்றன. இந்த ஈரப்பதம் 'டஸ்ட் மைட்ஸ்' (Dust Mites) எனப்படும் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகளுக்கு முக்கிய உணவு. நாம் எழுந்தவுடனே படுக்கையை மடித்தால், அந்த ஈரப்பதம் உள்ளேயே சிக்கி, டஸ்ட் மைட்ஸ் வேகமாகப் பெருகி, நம் படுக்கையை பாக்டீரியாக்களின் கூடாரமாக மாற்றிவிடும். நாம் எழுந்த பிறகு படுக்கையை மடிக்காமல் அப்படியே விட்டால், அறையில் உள்ள காற்றும் வெளிச்சமும் படுக்கையின் மீது படும்.
படுக்கை சுகாதாரம்
இதனால், பெட்ஷீட்டில் உள்ள ஈரப்பதம் காய்ந்துவிடும். டஸ்ட் மைட்ஸ் உயிர்வாழ ஈரப்பதம் அவசியம். வறண்ட சூழலில் அவற்றால் வாழ முடியாது. இப்படிச் செய்வதால் தும்மல், சளி, சரும அரிப்பு போன்ற அலர்ஜி பிரச்சனைகள் குறையும். காலையில் எழுந்ததும், ஜன்னல்களைத் திறந்து, சுத்தமான காற்று உள்ளே வரும்படி செய்யுங்கள். நீங்கள் கிளம்பிய பிறகோ அல்லது காலை உணவை முடித்த பிறகோ படுக்கையைச் சரிசெய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
படுக்கை மடிக்க வேண்டாமா?
வாரத்திற்கு ஒருமுறை பெட்ஷீட்களை சூடான நீரில் துவைப்பது நல்லது. நீட்டாக இருப்பது எவ்வளவு முக்கியமோ, ஆரோக்கியமாக இருப்பதும் அதைவிட இருப்பது முக்கியம். அதனால், நாளையிலிருந்து எழுந்ததும் உங்கள் படுக்கையில் கொஞ்சம் காற்றும் வெளிச்சமும் படட்டும், அதன் பிறகு அழகாக மடித்து வையுங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

