MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரூ.25,000 சம்பளத்துக்கு பிஎப் கட்டாயம்.. இபிஎப்ஓவில் புதிய மாற்றம்.. உடனே படிங்க

ரூ.25,000 சம்பளத்துக்கு பிஎப் கட்டாயம்.. இபிஎப்ஓவில் புதிய மாற்றம்.. உடனே படிங்க

இபிஎப்ஓ தனது கட்டாய பங்களிப்புக்கான மாத சம்பள வரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றத்தால் ஒரு கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு வளையத்திற்குள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : Oct 29 2025, 08:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இபிஎப்ஓ புதிய அறிவிப்பு
Image Credit : Google

இபிஎப்ஓ புதிய அறிவிப்பு

ஊழியர் நல நிதியமைப்பு (EPFO) தனது விதிகளில் பெரிய மாற்றத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. தற்போது EPF மற்றும் EPS திட்டங்களில் கட்டாய பங்களிப்புக்கான மாத சம்பள வரம்பு ரூ.15,000 ஆக உள்ளது. ஆனால் வரும் மாதங்களில் இதை ரூ.25,000 ஆக உயர்த்தும் முயற்சி நடைபெறுகிறது. இதற்கான இறுதி முடிவு EPFO ​​மைய நிர்வாக குழுவின் அடுத்த கூட்டத்தில் டிசம்பர் அல்லது ஜனவரியில் எடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. தற்போது ரூ.15,000 க்கும் மேல் அடிப்படை சம்பளம் பெறும் ஊழியர்கள் EPF மற்றும் EPS யில் சேருவது விருப்பத்துக்கேற்ப மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

24
சம்பள வரம்பு உயர்வு
Image Credit : Social Media

சம்பள வரம்பு உயர்வு

மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் உள் மதிப்பீட்டின்படி, சம்பள வரம்பை ரூ.10,000 உயர்த்தினால் மேலும் ஒரு கோடிக்கும் அதிகமானோரின் சமூக பாதுகாப்பு நன்மைகள் பெறும் வாய்ப்பு உண்டு என்று கூறினார். பல தொழிற்சங்கங்கள் இதற்காக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக பெருநகரங்களில் குறைந்த மற்றும் நடுத்தர திறனுடைய தொழிலாளர்கள் ரூ.15,000 க்கும் மேல் சம்பளம் பெறுகிறார்கள். எனவே, புதிய வரம்பு அவர்கள் அனைவரையும் EPFO ​​இன் கீழ் கொண்டுவரும் முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.

Related Articles

Related image1
நவம்பர் 1 முதல்.. ஜிஎஸ்டி பதிவு இனி 3 நாட்களில்.. வேற லெவலில் எல்லாம் மாறுது
Related image2
மக்களே உஷார்.. நவம்பர் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்.. முழு லிஸ்ட்
34
ஊழியர் நல நிதி
Image Credit : Social Media

ஊழியர் நல நிதி

தற்போதைய விதிப்படி, ஊழியரும், முதலாளியும் தலா 12% வீதம் மாத சம்பளத்தில் இருந்து EPFக்கு பங்களிக்க வேண்டும். இதில், ஊழியரின் முழு 12% EPF கணக்கில் செல்கிறது; முதலாளியின் பங்கு 3.67% EPFக்கு, 8.33% EPSக்கு ஒதுக்கப்படுகிறது. சம்பள வரம்பு உயர்ந்தால் EPF மற்றும் EPS நிதிகள் வேகமாக வளர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு அதிக ஓய்வூதியம் மற்றும் வட்டி சேர்க்கைகள் கிடைக்கும். தற்போது EPFO ​​வின் மொத்த நிதி சுமார் ரூ.26 லட்சம் கோடி அளவுக்கு உள்ளது; செயலில் உள்ள உறுப்பினர்கள் 7.6 கோடியாக உள்ளனர்.

44
தொழிலாளர் அமைச்சகம்
Image Credit : our own

தொழிலாளர் அமைச்சகம்

இதுபற்றி நிபுணர்கள் கூறுவதாவது, சம்பள வரம்பை ரூ.15,000 முதல் ரூ.25,000 ஆக உயர்த்துவது சமூக பாதுகாப்பு வலையத்தை விரிவாக்கும் முக்கியமான மற்றும் முன்னேற்றமான நடவடிக்கை ஆகும். இது இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் அனைவருக்கும் நீண்ட கால நிதி பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய நன்மைகளை உறுதிப்படுத்தும். பொருளாதார அலைச்சல்கள் அதிகரித்துள்ள நிலையில், இது எதிர்கால நிம்மதிக்கான முக்கிய அடித்தளமாக இருக்கும் என அவர்கள் விளக்குகின்றனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு)
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?
Recommended image2
Gold Rate Today (December 06): இதுதான் இன்றைய தங்கம் விலை.! விலை உயர என்ன காரணம் தெரியுமா?
Recommended image3
வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
Related Stories
Recommended image1
நவம்பர் 1 முதல்.. ஜிஎஸ்டி பதிவு இனி 3 நாட்களில்.. வேற லெவலில் எல்லாம் மாறுது
Recommended image2
மக்களே உஷார்.. நவம்பர் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்.. முழு லிஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved