கொங்கு மண்டலத்தில் நிலவும் கடுமையான வெயில் மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக, மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் பாசனத்திற்கு உடனடியாக நீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேட்டூர் அணை தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் : தமிழக விவசாயிகளுக்கு வாழ்வாதரமாக இருப்பதி மேட்டூர் அணையாகும். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து பிலிகுண்டு வழியாக தருமபுரி, சேலம் என பல மாவட்டங்களை கடந்து மேட்டூர் அணையை வந்தடைகிறது. அந்த வகையில் மேட்டூர் அணையில் இருந்து விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும். இந்ந நிலையில் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களின் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. 
இது தொடர்பாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

மேட்டூர் அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

வருடம் தோறும் மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனப்பகுதிகளுக்கு ஆகஸ்ட் மாதங்களில் தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் சேலம், நாமக்கல் ஈரோடு மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் பாசன பகுதி பயன் பெறுகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டமும் கோடைகாலத்தில் உயர்ந்து வந்தது. தமிழ்நாட்டில் வருடம் வருடம் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதுவும் கொங்கு மண்டலம் சேலம், ஈரோடு, நாமக்கல் பகுதிகளில் மிக மோசமான நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 

விவசாயம், கால் நடைகளுக்கு நீர் ஆதாரம் இல்லை

இதனால் பருவ காலங்களில் ஏரி, குளம், குட்டைகளில் சேகரித்த மழைநீர் அதிக வெயில்களின் தாக்கத்தினால் வறண்டு நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விவசாயத்திற்கும், கால்நடைகளுக்கும், குடிநீருக்கும் போதிய நீர் ஆதாரம் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள். சென்ற வருடம் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களின் பாசனத்திற்கு மே 15 ஆம் தேதி நீர் திறந்து விடப்பட்டது. 

முன்கூட்டியை மேட்டூர் அணை திறப்பு

அதேபோன்று இந்த வருடமும் நீர் பற்றாக்குறை காரணத்தினால் முன்னதாகவே பாசனத்திற்கு நீர் திறந்து விடப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு இதனை கவனத்தில் கொண்டு மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் பாசனத்திற்கு நீர் முன்னதாகவே திறந்து விட வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக கேட்டுக்கொள்வதாக ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.