- Home
- Cinema
- தொலைக்காட்சி
- உயிலை எடுத்த சோழனுக்கு அடுத்த நொடியே காத்திருந்த அதிர்ச்சி... சிக்கினாரா நிலா? அய்யனார் துணை சீரியல் ட்விஸ்ட்
உயிலை எடுத்த சோழனுக்கு அடுத்த நொடியே காத்திருந்த அதிர்ச்சி... சிக்கினாரா நிலா? அய்யனார் துணை சீரியல் ட்விஸ்ட்
அய்யனார் துணை சீரியலில் சோழனும் நிலாவும் உயிலை எடுக்க வீட்டுக்குள் சென்றிருந்த நிலையில், அவர்கள் உயிலையும் கைப்பற்றி உள்ளனர். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Ayyanar Thunai Serial Today Episode
அய்யனார் துணை சீரியலில் நடேசனின் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், அவர் தன்னுடைய மகன்கள் மற்றும் நிலாவுடன் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி இருக்கிறார். வீட்டை பெரியப்பாவிடம் இருந்து மீட்க வேண்டும் என்றால், உயில் நம்முடைய கைக்கு வர வேண்டும் என முடிவெடுக்கும் சோழன், அந்த உயில் வீட்டில் இருக்கிறது என்பதை நிலாவின் உதவியோடு தெரிந்துகொள்கிறார். இதையடுத்து, இருவரும் வீட்டுக்குள் ஏறி குதித்து உயிலை எடுக்க சென்றிருக்கிறார்கள். சோழன் உயிலை எடுக்க உள்ளே குதித்துள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
உயிலை எடுத்த சோழன்
ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கி, சோழன் உயிலை தேடிக்கொண்டிருக்கிறார். அவர் எங்கு தேடியும் உயில் இல்லை என சொல்ல, நல்லா தேடுங்க, இல்லேனா, நான் உள்ள இறங்கி வந்தேன்னா அவ்வளவுதான் என மிரட்டுகிறார் நிலா. அதன்பின்னர் மேலே தூசியடைந்து கிடக்கும் டிரங்கு பெட்டியை எடுத்து தேடுகிறார் சோழன். அதில் அவர் தேடிய உயில் கிடைத்துவிடுகிறது. இதனால் இருவருமே சந்தோஷமடைகிறார்கள். இதையடுத்து கயிற்றின் மூலம் மேலே ஏறி வரும் சோழன், நிலாவிடம் அந்த உயிலை கொடுக்கிறார். அவரும் உடனடியாக அந்த உயிலை எடுத்து படித்துப் பார்க்கிறார்.
திடீர் எண்ட்ரி கொடுக்கும் பெரியப்பா
அந்த உயிலில், வீடு நடேசனுக்கு தான் சொந்தம் என எழுதி இருப்பதை பார்க்கும் நிலா, சந்தோஷமடைகிறார். இதன்பின்னர் ஏணி வழியாக இருவரும் இறங்குகிறார்கள். பின்னர் வெளியே செல்வதற்காக கேட்டை நோக்கி இருவரும் நடந்து சென்றபோது, கேட்டை திறக்கும் சத்தம் கேட்கிறது. சத்தத்தை கேட்டது, அருகில் இருந்த செடிக்குள் இருவரும் ஒளிந்துகொள்கிறார்கள். கேட்டை திறந்து சோழனின் பெரியப்பா உள்ளே வருகிறார். வீட்டின் உள்ளே யாராவது இருக்கிறார்களா என்பதை சோதனை செய்ய வந்திருக்கிறார். அவருக்கு தெரியாமல் சோழனும், நிலாவும் ஒளிந்திருக்கிறார்கள்.
ரூமுக்கு வரும் சோழன் - நிலா
வீட்டில் யாரும் இல்லை என்று தெரிந்த பின்னர் அவர் கேட்டை மூடிவிட்டு செல்கிறார். அவர் போன பின்னர் சோழனும் நிலாவும் அந்த கேட்டின் மீது ஏறி குதித்து வெளியே செல்கிறார்கள். பின்னர் காரில் கிளம்பி ஓட்டலுக்கு சென்றுவிடுகிறார்கள். அங்கு சோழனிடம் பேசும் நிலா, உயில் கிடைச்சிடுச்சு இனிமே நம்ம வீட்டுல எந்த பிரச்சனையும் இல்லை. நாளைக்கே நம்ம வீட்டுக்கு போயிடலாம் என சொல்கிறார். இதையடுத்து, சோழன், நான் உங்க ரூம்லயே வந்து படுத்துக்குறேன் என கேட்கிறார். ஆனால் அதற்கு நோ சொன்ன நிலா, நீ உன்னோட ரூமுக்கே போ என அனுப்பி வைக்கிறார்.
நிலா ரூமில் தங்கும் சோழன்
இதன்பின்னர் இரவில் நிலா வெளியே வந்து பார்க்கும்போது சோழன் வாசலிலேயே படுத்திருக்கிறார். என்னவென்று நிலா விசாரிக்கையில், எவ்வளவு நேரம் தட்டியும் யாருமே கதவை திறக்கலனு சொல்கிறார் சோழன். இதன்பின்னர் சோழனை தன்னுடைய ரூமில் வந்து படுக்க சொல்கிறார் நிலா, அங்கு நிலா பெட்டில் படுத்திருக்க, சோழன் கீழே படுத்துக் கொள்கிறார். உயில் கிடைத்த சந்தோஷம் ஒருபுறமும், நிலா ரூமில் படுத்திருக்கும் சந்தோஷமும் மறுபுறம் என டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார் சோழன். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

