MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஜீவானந்தத்தை சுற்றிவளைத்த ரெளடிகள்.. கதிரிடம் கையும் களவுமாக சிக்கும் நந்தினி? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

ஜீவானந்தத்தை சுற்றிவளைத்த ரெளடிகள்.. கதிரிடம் கையும் களவுமாக சிக்கும் நந்தினி? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜீவானந்தம் இருக்கும் இடத்தை ரெளடிகள் சுத்து போட்டுள்ள விஷயத்தை ஜனனி கூறிவிடுகிறார். இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 18 2025, 12:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ethirneechal Thodargiradhu Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Today Episode

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், ஜீவானந்தமும், பார்கவியும் காட்டுக்குள் இருந்து தப்பி வந்து ஒரு பஞ்சு மில்லில் தஞ்சமடைந்து உள்ளனர். அங்கு உள்ள ஓய்வுபெற்ற மிலிட்டரி டாக்டர் ஒருவர் செய்யும் உதவியால், ஜீவானந்தம் உடலில் இருந்து புல்லட் எடுக்கப்பட்டு, அவர் உயிர்பிழைக்கிறார். இதையடுத்து, அவர்களை தேடி அலையும் ஜனனியை, ரெளடிகள் நெருங்கிய நிலையில், அவர்களிடம் இருந்து எஸ்கேப் ஆகி கடையில் ஒளிந்துகொள்கிறார் ஜனனி. இப்படி அனல்பறக்க சென்றுகொண்டிருக்கும் இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

24
கதிருக்கு வந்த டவுட்
Image Credit : youtube/suntv

கதிருக்கு வந்த டவுட்

மண்டபத்தில் தர்ஷனுக்கு மேக்கப் போட வந்த பெண் மீது சந்தேகத்திலேயே சுற்றிவரும் கதிர், மண்டபத்துக்கு வெளியே ரேணுகா மட்டும் நிற்பதால், நந்தினியை எங்கே என கேட்டு பிரச்சனை செய்கிறார். அப்போது அங்கே வரும் ஆதி குணசேகரன், ஏண்டா தேவையில்லாம சண்டை இழுத்துகிட்டு இருக்க என கேட்கிறார். அப்போது நந்தினி எங்கனு தனக்கு தெரிய வேண்டும் என சொன்னதோடு, வேகமாக மாடிக்கு சென்று ரூமில் புர்கா அணிந்திருக்கும் நந்தினியிடம் உன் பெயர் என்ன என கேட்கிறார். அவருக்கு தமிழ் தெரியாது என தர்ஷன் சொல்ல, நந்தினி அருகே செல்கிறார் கதிர்.

Related Articles

Related image1
குணசேகரன் கேங்குக்கு விபூதி அடித்த நந்தினி... கடத்தப்படுகிறாரா தர்ஷன்? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்
Related image2
வெறிகொண்டு தேடும் ரெளடிகள்... நந்தினியால் வசமாக சிக்கப்போகும் ஜனனி? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ட்விஸ்ட்
34
ஜீவானந்தத்தை அலர்ட் செய்யும் ஜனனி
Image Credit : youtube/suntv

ஜீவானந்தத்தை அலர்ட் செய்யும் ஜனனி

மறுபுறம் ரெளடிகளிடம் இருந்து தப்பித்து செல்லும் ஜனனி, ஜீவானந்தத்திற்கு போன் போட்டு அவர்கள் இருக்கும் இடத்தை தெரிந்துகொள்கிறார். ரெளடிகள் எல்லாரும் நீங்க இருக்கும் இடத்திற்கு வெளியே தான் இருக்கிறார்கள் என்றும், நீங்க யாரும் வெளியே வர வேண்டாம். நான் எப்படியாச்சும் இவர்களை திசைதிருப்பிவிட்டுட்டு வந்து உங்களை அழைத்து செல்கிறேன் என சொல்கிறார் ஜனனி. காரில் பார்கவி இருக்கும் இடத்தை நெருங்கும் ஜனனி, அங்கிருக்கும் ரெளடிகளை திசைதிருப்பி விட பிளான் போடுகிறார். இதனால் ரெளடிகளும் ஜனனியை துரத்த ஆரம்பிக்கிறார்கள்.

44
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அடுத்து என்ன?
Image Credit : youtube/suntv

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அடுத்து என்ன?

மண்டபத்தில் நந்தினியை கதிர் கண்டுபிடித்தாரா? ஜனனி சக்சஸ்புல்லாக ரெளடிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஜீவானந்தம் மற்றும் பார்கவியை காப்பாற்றினாரா? நந்தினி தர்ஷனிடம் சொன்ன ரகசியம் என்ன? தர்ஷனுக்கு யாரோடு திருமணம் நடைபெற இருக்கிறது? ஜீவானந்தம் உயிர்பிழைத்த விஷயம் ஆதி குணசேகரனுக்கு தெரிய வருமா? ஜீவானந்தம், பார்கவியுடன் வந்து தர்ஷனின் திருமணத்தை நிறுத்துவாரா? தர்ஷனுக்கும் பார்கவிக்கும் திருமணம் நடக்குமா? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் நிச்சயம் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சன் தொலைக்காட்சி
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கடந்த கால காயங்கள்! செல்லமே செல்லமே தொடரில் விஜி அழுததற்கான உண்மையான காரணம் என்ன? நெகிழ்ச்சியான எபிசோட்!
Recommended image2
மனைவியுடன் ஓடிப்பிடிச்சு விளையாடிய பிரபு; செம காண்டான சத்யா போடும் மாஸ்டர் பிளான் – மருமகள் சீரியல் டுவிஸ்ட்!
Recommended image3
அர்ஜுன் கொடுத்த ஷாக்.. டிவோர்ஸ் நோட்டீஸில் கையெழுத்திட்ட சத்யா! ஆடுகளம் சீரியலில் உடைந்தது அர்ஜுன் - சத்யா பந்தம்?
Related Stories
Recommended image1
குணசேகரன் கேங்குக்கு விபூதி அடித்த நந்தினி... கடத்தப்படுகிறாரா தர்ஷன்? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்
Recommended image2
வெறிகொண்டு தேடும் ரெளடிகள்... நந்தினியால் வசமாக சிக்கப்போகும் ஜனனி? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved