MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • மீண்டும் சீனுக்கு வந்த ஆதி குணசேகரன்... ஹவுஸ் அரெஸ்ட் செய்யப்படும் ஜனனி, சக்தி..! எதிர்நீச்சல் தொடர்கிறது

மீண்டும் சீனுக்கு வந்த ஆதி குணசேகரன்... ஹவுஸ் அரெஸ்ட் செய்யப்படும் ஜனனி, சக்தி..! எதிர்நீச்சல் தொடர்கிறது

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் பழைய பகையை தீர்க்க சென்றிருக்கும் ஆதி குணசேகரன், கதிருக்கு போன் போட்டு ஒரு முக்கிய விஷயத்தை சொல்லி இருக்கிறார். அது என்ன என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 23 2025, 10:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நந்தினி மற்றும் ரேணுகாவிற்கு தீபாவளி சீர் கொடுக்க வந்திருந்த அவர்களின் அம்மாக்களை கதிர் அசிங்கப்படுத்தி வெளியே அனுப்புகிறார். இதையடுத்து அவர்களை வெளியே அழைத்து வரும் ரேணுகா, இது வீடே இல்லை, நாங்களே வேண்டா வெறுப்பாக இங்கு இருக்கிறோம் என சொல்கிறார். அதேபோல் நந்தினியும், இன்னும் எத்தனை நாளைக்கு தான் நாங்கள் இந்த வலியை அனுபவிக்க போறோமோ என ஆதங்கத்துடன் பேசுகிறார். பின்னர் பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு கூறி தங்கள் அம்மாவை இருவரும் வழியனுப்பி வைக்கிறார்கள்.

24
ஆதி குணசேகரன் இஸ் பேக்
Image Credit : youtube/suntv

ஆதி குணசேகரன் இஸ் பேக்

வீட்டுக்குள் விசாலாட்சி, அண்ணன் எப்போ வருவான் என குணசேகரனை பற்றி கதிர் மற்றும் ஞானத்திடம் கேட்கிறார். அதற்கு கதிர், எத்தனை முறை சொல்வது, அண்ணன் வருவாங்க, நீங்க அமைதியா இருங்க என கத்துகிறார். பின்னர் கதிருக்கு ஆதி குணசேகரனிடம் இருந்து போன் வருகிறது. அப்போது தன்னுடைய அடுத்த பிளான் குறித்து பேசும் குணசேகரன், சக்தியும் அவன் பொண்டாட்டி ஜனனியும், நான் வரும் வரை அந்த வீட்டை விட்டு வெளியேறிவிடக் கூடாது என சொல்கிறார். ஏன் என்னாச்சு என கதிர் கேட்க, இன்னும் நான்கு நாட்களில் அம்புட்டையும் முடித்துக் காட்டுகிறேன் என கூறுகிறார்.

Related Articles

Related image1
தலைமறைவான ஆதி குணசேகரன்; தர்ஷனின் தல தீபாவளி கொண்டாட்டத்தில் எதிர்பாரா ட்விஸ்ட் - எதிர்நீச்சல் தொடர்கிறது
Related image2
சீண்டிய கதிர் கேங்... சிங்கப்பெண்ணாய் சீரிய பார்கவி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இன்றைய எபிசோடு
34
ஜனனி - சக்திக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
Image Credit : youtube/suntv

ஜனனி - சக்திக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

இத்தனை நாட்கள் தான் இருக்கும் இடத்தை சீக்ரெட்டாக வைத்திருந்த ஆதி குணசேகரன், தற்போது இராமேஸ்வரத்தில் இருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. அவர் அந்த லெட்டரில் உள்ள நபரைத் தேடி தான் சென்றிருக்க கூடும். அந்த பெண்ணின் கதையை முடிக்க கங்கணம் கட்டிக் கொண்டு சுற்றுகிறார் குணசேகரன். மறுபுறம் ஜனனி மற்றும் சக்தி இருவரும் இராமேஸ்வரம் சென்று அந்த லெட்டரில் உள்ள பெண் யார்? அவர் எதற்காக ஆதி குணசேகரனுக்கு சாபம் விட்டு லெட்டர் அனுப்பி இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள தயாராகி வருகிறார்கள்.

44
அடுத்த ட்விஸ்ட் என்ன?
Image Credit : youtube/suntv

அடுத்த ட்விஸ்ட் என்ன?

சக்தி - ஜனனி இருவரும் வீட்டை விட்டு வெளியேறிவிடக் கூடாது என ஆதி குணசேகரன் ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லி இருப்பதால், அவர்களை ஹவுஸ் அரெஸ்ட் செய்ய பிளான் போடுகிறார் கதிர். இவரை மீறி அவர்கள் இருவரும் இராமேஸ்வரத்துக்கு செல்வார்களா? ஆதி குணசேகரன் பற்றிய ரகசியம் வெளியே வருமா? நான்கு நாட்களுக்குள் ஆதி குணசேகரன் செய்யப் போகும் சம்பவம் என்ன? ஈஸ்வரியை குணசேகரன் தாக்கிய வீடியோ ஆதாரத்தை கைப்பற்றிய புது வில்லன் எப்போது எண்ட்ரி கொடுக்கப் போகிறார்? என்கிற பல கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் தான் விடை கிடைக்கும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
எல்லாம் முடிந்தது என நினைத்த அஞ்சலிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! சத்யா செய்த அந்த ரகசிய உதவி என்ன?! கெட்டிமேளம் அப்டேட்.!
Recommended image2
Singappenne : ஆனந்தி - அன்புவின் ஜாலி மொமெண்ட்ஸ்! கோகிலாவை அதிர வைத்த மாமனார் & மாமியார்.. கதையில் புதிய திருப்பம்!
Recommended image3
ரோகிணியை தூக்க ஸ்கெட்ச் போட்ட சத்யா - கௌதம்! மருமகள் சீரியலில் அதிரடி திருப்பம்.. மாட்டிக்கொள்வாரா ரோகிணி? இன்றைய பரபரப்பு எபிசோட்!
Related Stories
Recommended image1
தலைமறைவான ஆதி குணசேகரன்; தர்ஷனின் தல தீபாவளி கொண்டாட்டத்தில் எதிர்பாரா ட்விஸ்ட் - எதிர்நீச்சல் தொடர்கிறது
Recommended image2
சீண்டிய கதிர் கேங்... சிங்கப்பெண்ணாய் சீரிய பார்கவி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இன்றைய எபிசோடு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved