MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தவெகவிற்கு ஷாக்.! சிபிஐ விசாரணை கோரி நாங்கள் மனு தாக்கல் செய்யவே இல்லை.! உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு திருப்பம்

தவெகவிற்கு ஷாக்.! சிபிஐ விசாரணை கோரி நாங்கள் மனு தாக்கல் செய்யவே இல்லை.! உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு திருப்பம்

கரூரில் தவெக கூட்ட நெரிசல் கோரி சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தீர்ப்பு வரவிருந்த நிலையில், மனுதாரர்கள் எனக் கூறப்பட்டவர்கள் தங்களை ஏமாற்றி கையொப்பம் பெற்றதாகக் கூறி பரபரப்பு

1 Min read
Author : Ajmal Khan
Published : Oct 13 2025, 10:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : Asianet News

கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தவெக கரூர் மாவட்ட செயலாளர், சேலம் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் சிடி நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் தலைமறைவாகியுள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரவிட்டு உத்தரவிட்டது.

23
Image Credit : X

இதனையடுத்து கரூரில் அஸ்ரா கார்க் தலைமையில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களாக பிரபாகர், செல்வராஜ், பன்னீர் செல்வம் ஆகியோர் பெயரில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்வியை எழுப்பியிருந்தது.

Related Articles

Related image1
125 தொகுதிகளில்.. எங்க பேசனுமோ அங்க பேசுவோம்..! திமுகவுக்கு ஷாக் கொடுக்கும் காங்கிரஸ்
Related image2
பிடி கொடுக்காத விஜய்.. எதிர்க்க தொடங்கிய பாஜக..? நடிகர்களை நம்பாதீங்க: அண்ணாமலை காட்டம்
33
Image Credit : Asianet News

இதனையடுத்து இன்று சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு அளிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், திடீரென பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதில் தங்களை ஏமாற்றி கையொப்பம் பெற்று வழக்கில் தங்களை மனுதாரர்களாக இணைத்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். 

பிரபாகர், செல்வராஜ், பன்னீர் செல்வம் ஆகியோர மனு தாக்கல் செய்யவே இல்லையெனவும் கூறியுள்ளனர். இன்று தீர்ப்பு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட் என்ன முடிவு எடுக்கும் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
tvk நெரிசல்
டிவி.கே. விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
Recommended image2
இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
Recommended image3
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!
Related Stories
Recommended image1
125 தொகுதிகளில்.. எங்க பேசனுமோ அங்க பேசுவோம்..! திமுகவுக்கு ஷாக் கொடுக்கும் காங்கிரஸ்
Recommended image2
பிடி கொடுக்காத விஜய்.. எதிர்க்க தொடங்கிய பாஜக..? நடிகர்களை நம்பாதீங்க: அண்ணாமலை காட்டம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved