- Home
- Tamil Nadu News
- அரைக்கால் டவுசர்! கழுத்தில் பொட்டு நகை இல்லாமல்! வரிச்சூர் செல்வத்தை குண்டு கட்டாக தூக்கிய போலீஸ்! என்ன காரணம்?
அரைக்கால் டவுசர்! கழுத்தில் பொட்டு நகை இல்லாமல்! வரிச்சூர் செல்வத்தை குண்டு கட்டாக தூக்கிய போலீஸ்! என்ன காரணம்?
Varichiyur Selvam: மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம், 2012ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் நடந்த ஆள் கடத்தல் மற்றும் என்கவுண்டர் வழக்கில் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், தனிப்படை போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து கைது செய்தனர்.

வரிச்சூர் செல்வம்
வரிச்சூர் செல்வம் என்பவர் மதுரை மாவட்டத்தில் சேர்ந்த பிரபல ரவுடி. அவர் கிராமம் வரிச்சியூர் என்பதால் இந்தப் பெயர் பெற்றவர். கிலோக்கள் அளவில் நகைகள் அணிந்திருப்பார். இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் வரிச்சூர் செல்வத்தை சுட்டு பிடிக்க கோவை காவல்துறையினர் உத்தரவு பிறப்பித்திருந்தனர். ஆனால் கோவை சென்று 13 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் தற்போது கோவை காவல்துறையில் சுட்டு பிடிக்க உத்தரவு என்ற செய்தி வெளியாகி எனக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நான் திருந்தி வாழ்ந்து வருகிறேன். என் குடும்பம் பேரன் பேத்திகள் என தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். எனக்கு எதிரிகள் என்று யாருமே கிடையாது என தெரிவித்திருந்தார்.
ஆள் கடத்தல் வழக்கு
இந்நிலையில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான தங்கும் விடுதியில் கடந்த 2012ம் ஆண்டு கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை 4 நபர்கள் கடத்தி வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இது குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தனியார் தங்கும் விடுதியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
நீதிமன்றம் பிடிவாரண்ட்
அப்போது பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம், கேரள மாநிலத்தைச் சேர்ந்த சினோஜ் மற்றும் அவருடன் 2 அடையாளம் தெரியாத நபர்கள் இருந்தனர். அப்போது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் கேரள மாநிலத்தை சேர்ந்த சினோஜ் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டார். மேலும் அவருடன் இருந்த வரிச்சூர் செல்வம் மற்றும் அடையாளம் தெரியாத 2 நபர்கள் அங்கிருந்து தப்பித்தனர். இதனையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் ஆள்கடத்தல் கடத்தல் வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டு நீதிமன்றத்தின் மூலம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து வரிச்சியூர் செல்வம் தலைமறைவானார்.
வரிச்சூர் செல்வம் கைது
வரிச்சியூர் செல்வம் ரகசிய இடத்தில் ஒளித்திருப்பதாக ரகசிய தகவலின் அடிப்படையில் வரிச்சூர் செல்வம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்த போது அரைக்கால் டவுசர், பனியன் மற்றும் கழுத்தில் பொட்டு நகை இல்லாமல் போலீஸ் ஜீப்பில் உட்காத்திருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

