- Home
- Tamil Nadu News
- எதிர்வீட்டு வாலிபரின் அழகில் மயங்கிய ஆன்டி! ஓயாமல் ஜாலி! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
எதிர்வீட்டு வாலிபரின் அழகில் மயங்கிய ஆன்டி! ஓயாமல் ஜாலி! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
சென்னை பெருங்குடியில், தன் மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட அன்பு கணபதி என்பவரை, ராஜதுரை என்பவர் மது அருந்த அழைத்துச் சென்று கத்தியால் குத்திக் கொலை செய்தார். மனைவி மற்றும் குழந்தை காணாமல் போனதால் ஆத்திரமடைந்த ராஜதுரை இந்த கொலையை செய்துள்ளார்.

ராஜதுரை மனைவி
சென்னை புறநகர் பகுதியான பெருங்குடி கல்லுக்குட்டை திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பு கணபதி (29). அவரை பார்த்ததுமே ராஜதுரை மனைவிக்கு அவரை அடைய வேண்டும் என நினைத்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. எதிர் வீடு என்பதால் ரொம்ப வசதியாக போனது. ராஜதுரை வீட்டில் இல்லாத நேரத்தில் கணபதி அவ்வப்போது வந்து சென்றுள்ளார்.
கள்ளக்காதல்
இந்த விவகாரம் நாளடைவில் ராஜதுரைக்கு தெரியவந்ததை அடுத்து இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர். எவ்வளவு சொல்லியும் மனைவி கேட்காததால் ராஜதுரை வீட்டை காலி செய்துவிட்டு வேறுவீட்டுக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக நேற்று காலை புதிய வீடு பார்ப்பதற்காக ராஜதுரை மனைவியுடன் வெளியில் சென்று விட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
ஆத்திரத்தில் கணவர்
திடீரென எழுந்து பார்த்த போது தனது மனைவி, குழந்தையுடன் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த ராஜதுரை மனைவியின் கள்ளக்காதலன் அன்பு கணபதியை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி நைசாக பேசி மதுகுடிக்க அன்பு கணபதியை அழைத்தார். இருவரும் பரணி தெருவில் உள்ள ஏரிக்கரையில் அமர்ந்து மதுக் குடித்துக்கொண்டிருந்த போது கள்ளக்காதல் தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
கள்ளக்காதலன் கொலை
இதனால் ஆத்திரமடைந்த ராஜதுரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அன்பு கணபதியை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது அன்பு கணபதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீஸ் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அன்பு கணபதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து விட்டு தலைமறைவாக உள்ள ராஜதுரையை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அன்பு கணபதிக்கு மனைவியும், 2 பெண்குழந்தைகளும் உள்ளனர்.

