MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.1,964 கோடி ஒதுக்கீடு!

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.1,964 கோடி ஒதுக்கீடு!

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் திட்டம் ₹9,335 கோடியில் அமையவுள்ளது. தமிழ்நாடு அரசு முதல் தவணையாக ₹1,964 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

1 Min read
Author : SG Balan
Published : Sep 03 2025, 05:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கிளம்பாக்கம் விமான நிலையம் மெட்ரோ ரயில்
Image Credit : Google

கிளம்பாக்கம் - விமான நிலையம் மெட்ரோ ரயில்

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு முதல் தவணையாக ₹1,964 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ₹9,335 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள இத்திட்டம், மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதி உதவிக்காக காத்திருக்கிறது.

24
திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.9,335 கோடி
Image Credit : our own

திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.9,335 கோடி

முன்னதாக, பிப்ரவரி 2025-ல் இந்த திட்டத்தின் மதிப்பீடு ₹4,080 கோடியாக இருந்தது. ஆனால் விரிவான திட்ட அறிக்கையின்படி, திட்டத்தின் மொத்த செலவு ₹9,335 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை ஏற்கனவே மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசு தனது பங்களிப்பின் ஒரு பகுதியை ஒதுக்கி, நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தொடங்க அனுமதி வழங்கியுள்ளது.

Related Articles

Related image1
அடி தூள்.! சோதனை ஓட்டம் நிறைவு... போரூர்- பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் எப்போது இயக்கும்.?
Related image2
கவனமா இருக்கணும்... சென்னையில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி... ஆய்வில் அதிர்ச்சி!
34
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய இணைப்பு
Image Credit : our own

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய இணைப்பு

இந்த 15.46 கிலோமீட்டர் நீளமுள்ள வழித்தடத்தில், 13 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இது விமான நிலையம், தாம்பரம், குரோம்பேட்டை வழியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இணைக்கும். மேலும், இந்த திட்டம் இந்தியாவின் முதல் இரட்டை அடுக்கு மெட்ரோ ரயில் திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

44
மேம்பாலத்திற்கு மேலே மெட்ரோ ரயில்
Image Credit : Asianet News

மேம்பாலத்திற்கு மேலே மெட்ரோ ரயில்

இது ஜிஎஸ்டி சாலையில் வாகனப் போக்குவரத்திற்கான மேம்பாலத்திற்கு மேலே மெட்ரோ ரயில் பாதையை அமைக்கும். இதன் மூலம் தென் சென்னையில் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
தமிழ்நாடு அரசு
சென்னை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
மதுபிரியர்களுக்கு பேரிடி.. தமிழகம் முழுவதும் பிப்ரவரி 18 முதல் டாஸ்மாக் மூடல்.. காரணம் இதுதான்!
Recommended image2
நெருங்கும் தேர்தல்.. டெண்டர்களை அள்ளி வீசும் திமுக..! டிடிவி தினகரன் ஆவேசம்
Recommended image3
கிடைத்தவரை வாரி சுருட்டும் திமுக.. அவசர அவசரமாக 50 குவாரிகள் ஏலம்.. விளாசும் அன்புமணி
Related Stories
Recommended image1
அடி தூள்.! சோதனை ஓட்டம் நிறைவு... போரூர்- பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் எப்போது இயக்கும்.?
Recommended image2
கவனமா இருக்கணும்... சென்னையில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி... ஆய்வில் அதிர்ச்சி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved