MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 12 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் எப்போது? தேதி, நேரம் அறிவிப்பு!

12 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் எப்போது? தேதி, நேரம் அறிவிப்பு!

300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்ற பெருந்திட்ட வளாகப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த குடமுழுக்கு விழா எப்போது என்ற அறிவிப்பை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : Jun 07 2025, 11:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
Image Credit : our own

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

தூத்துக்குடி மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

24
பெருந்திட்ட வளாகப் பணிகள்
Image Credit : our own

பெருந்திட்ட வளாகப் பணிகள்

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, 6 நாட்கள் கோயில் வளாகத்திலேயே தங்கி விரதம் இருந்து சூரசம்ஹார நிகழ்ச்சியைக் கண்டு விரதம் முடிப்பார்கள். இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் HCL நிறுவனம் சார்பில் 200 கோடியும், அறநிலையத்துறை சார்பில் 100 கோடி என மொத்தம் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வந்தன.

Related Articles

Related image1
தமிழ்நாட்டில் நேற்று 9 இடங்களில் சதம் அடித்த வெயில்! அதிகபட்சம் இந்த மாவட்டம் தான்?
Related image2
இனி பள்ளி மாணவர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
34
குடமுழுக்கு விழா
Image Credit : Google

குடமுழுக்கு விழா

கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி துவங்கிய இந்த பணிகள் அண்மையில் நிறைவு பெற்றது. இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு எப்போது நடைபெறும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இக்கோவிலில் ஜுலை 7ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

44
கோயில் நிர்வாகம்
Image Credit : Google

கோயில் நிர்வாகம்

இதுகுறித்து திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்கு விழா 2025 ஆம் ஆண்டு 01-07-2025 முதல் 07-07-2025 முடிய வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. அதில் முக்கிய நிகழ்வான திருக்குட நன்னீராட்டு 07.07.2025 அன்று காலை 06.15 மணிக்கு மேல் 06.50 மணிக்குள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
தூத்துக்குடி

Latest Videos
Recommended Stories
Recommended image1
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
Recommended image2
இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
Recommended image3
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!
Related Stories
Recommended image1
தமிழ்நாட்டில் நேற்று 9 இடங்களில் சதம் அடித்த வெயில்! அதிகபட்சம் இந்த மாவட்டம் தான்?
Recommended image2
இனி பள்ளி மாணவர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved