MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நெல்லை ஆணவப்படுகொலை! அச்சுறுத்தலில் பேசும் சுபாஷினி - பகீர் கிளப்பும் தொல்.திருமா

நெல்லை ஆணவப்படுகொலை! அச்சுறுத்தலில் பேசும் சுபாஷினி - பகீர் கிளப்பும் தொல்.திருமா

கவின் படுகொலையில் எனது அப்பா, அம்மாவுக்கு தொடர்பு இல்லை என்று சொல்லும் சுபாஷினி யாருடைய கட்டுப்பாட்டிலோ இருப்பது போல் தெரிவதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Velmurugan s
Published : Aug 01 2025, 09:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மென்பொறியாளர் ஆணவப்படுகொலை
Image Credit : X/@thirumaofficial

மென்பொறியாளர் ஆணவப்படுகொலை

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின்குமார் தனது பள்ளித் தோழியும், சித்த மருத்துவருமான திருநெல்வேலி மாவட்டம் கேடிசி நகர் பகுதியில் வசித்து வரும் சுபாஷினி என்பவரை காதலித்து வந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், இவர்களது காதல் சுபாஷினியின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஞாயிற்றுக் கிழமை மருத்துவமனைக்கு வந்த கவினை, சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித் வெட்டி படுகொலை செய்தார்.

24
காதலுக்கு எதிர்ப்பு
Image Credit : X/@thirumaofficial

காதலுக்கு எதிர்ப்பு

லட்சங்களில் மாத சம்பளம் வாங்கும் மென்பொறியாளர் கவினின் ஆணவப் படுகொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சுபாஷியின் தாய், தந்தை என இருவரும் காவல் உதவி ஆய்வாளர்களாக இருக்கும் நிலையில், இருவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கவினின் உறவினர்கள், கவினின் உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் அழுத்தத்தின் காரணமாக சுபாஷினியின் பெற்றோர் இருவரும் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, தந்தை சரவணன் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டள்ளார்.

Related Articles

Related image1
Now Playing
எங்களுக்கு ஜாதி வேண்டாம் அரபு நாடு தண்டனை கொடுக்க வேண்டும் ஆணவ கொலை குறித்து மக்கள் சொல்லும் கருத்து
Related image2
ஆணவப் படு**லை செய்யப்பட்ட கவின் வீட்டில் முகாமிடும் அரசியல் தலைவர்கள் - கனிமொழி, நயினார் விசிட்
34
கவின் வீட்டில் திருமாவளவன்
Image Credit : X/@thirumaofficial

கவின் வீட்டில் திருமாவளவன்

இந்நிலையில் வியாழக்கிழமை கவினின் வீட்டிற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் கவினின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் சொன்னார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “சுபாஷினி பேசியது போன்ற ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில், கவினுக்கும், எனக்கும் இடையேயான உறவு எங்களுக்கு மட்டுமே தெரியும். இது பற்றி தெரியாமல் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

44
கட்டுப்பாட்டில் சுபாஷினி
Image Credit : X/@thirumaofficial

கட்டுப்பாட்டில் சுபாஷினி

சுபாஷினி பேசும் விதம், உடல் மொழியைப் பார்க்கும் போது அவர் யாருடைய கட்டுப்பாட்டிலோ, அச்சுறுத்தலிலோ இருப்பது போல் தெரிகிறது. இந்த கொலை சம்பவத்திற்கும், எனது தாய், தந்தைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று சொல்கிறார். ஆனால் கவினுக்கு இப்படி ஒரு நிலை வந்துவிடக் கூடாது என தனது பெற்றோரிடமோ அல்லது சகோதரரிடமோ சொல்லி தடுத்திருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்ததாக தெரியவில்லை. சாதியவாத அமைப்புகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி கவினின் நடவடிக்கைகளை கொச்சை படுத்தும் வகையில் அவதூறுகளைப் பரப்புகிறார்கள். இது தேவையற்ற சமூக பதற்றத்தை ஏற்படுத்துகிறது. அவ்வாறு அவதூறு பரப்பும் நபர்கள் மீது சைபர் கிரைம் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தொல். திருமாவளவன்
கௌரவக் கொலை
திருநெல்வேலி

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
Now Playing
எங்களுக்கு ஜாதி வேண்டாம் அரபு நாடு தண்டனை கொடுக்க வேண்டும் ஆணவ கொலை குறித்து மக்கள் சொல்லும் கருத்து
Recommended image2
ஆணவப் படு**லை செய்யப்பட்ட கவின் வீட்டில் முகாமிடும் அரசியல் தலைவர்கள் - கனிமொழி, நயினார் விசிட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved