MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • போலீஸ் மேலயே கை வைப்பியா? குற்றவாளியை என்கவுண்டரில் போட்டுத்தள்ளிய போலீஸ்

போலீஸ் மேலயே கை வைப்பியா? குற்றவாளியை என்கவுண்டரில் போட்டுத்தள்ளிய போலீஸ்

திருப்பூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் என்பவர் காவல் துறையினரால் சுட்டு கொலை.

1 Min read
Author : Velmurugan s
| Updated : Aug 07 2025, 08:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திருப்பூரில் பயங்கரம்
Image Credit : Asianet News

திருப்பூரில் பயங்கரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்பில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகின்றார். மூர்த்திக்கு மணிகண்டன், தங்கபாண்டி என இரு மகன்கள் உள்ளனர். இதனிடையே செவ்வாய் கிழமை இரவு மது அருந்திய நிலையில் இவர்கள் மூவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகளப்பாக மாறியுள்ளது.

24
மோதல் தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல்
Image Credit : Asianet News

மோதல் தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல்

இது தொடர்பாக தோட்டத்தின் மேலாளர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல், காவலர் அழகு ராஜா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு மோதலில் ஈடுபட்டவர்களை கண்டித்துள்ளார். அப்போது மூர்த்தியின் மகன்கள் மற்றும் SSI சண்முகவேல் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Related Articles

Related image1
ஐய்யோ.. SI கொ*லயில் அதிமுக MLAவுக்கு தொடர்பு? விசாரணை வளையத்தில் மகேந்திரன் - நள்ளிரவில் நடந்தது என்ன?
Related image2
போலீஸ் மேல கைய வச்சா என்ன நடக்கும்னு காட்டுறேன்! ஒரு கோடி ரூபாய் நிதியுதவியை அறிவித்த கையோடு கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
34
காவல் அதிகாரி படுகொலை
Image Credit : Social Media

காவல் அதிகாரி படுகொலை

வாக்குவாதம் முற்றிய நிலையில் மூர்த்தி, மணிகண்டன், தங்கபாண்டியன் மூவரும் இணைந்து இளநீர் வெட்டும் அரிவாளைக் கொண்டு சண்முகவேலை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காவல் அதிகாரியை கொலை செய்த மூர்த்தி, தங்க பாண்டியன் என இருவரும் புதன் கிழமை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். மணிகண்டன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த நிலையில், நேற்று இரவு அவரும் கைது செய்யப்பட்டார்.

44
எண்கவுண்டரில் சுட்டு கொலை
Image Credit : Asianet News

எண்கவுண்டரில் சுட்டு கொலை

கைது செய்யப்பட்ட மணிகண்டன் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை சிக்கனூத்து உப்பாறு அணைப் பகுதி அருகே பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து SI சரவணன் தலைமையிலான காவல் அதிகாரிகள் குழு ஆயுதத்தை மீட்பதற்காக மணிகண்டனை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அரிவாளைக் கைப்பறிய மணிகண்டன் காவலர்களை வெட்ட முயன்றுள்ளார் இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர்கள் மணிகண்டனை எச்சரித்துள்ளனர். ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் அவர் அரிவாளார் தாக்கியுள்ளார். இதனால் காவலருக்கு வெட்டு காயம் ஏற்பட்ட நிலையில் மணிகண்டனை காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
காவல்
காவல்துறை என்கவுண்டர்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
அன்புமணி மீது சிபிஐயில் கடும் புகார்..! வயிற்றில் வாயில் அடித்துக் கொள்ளும் ராமதாஸ் குரூப்
Recommended image2
விஜய் தூங்குறார்... விஜய் குளிக்கிறார்... என்னங்கடா மீடியா..? கதறும் திமுக ராஜிவ் காந்தி..!
Recommended image3
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு விடாமல் மழை ஊத்தப்போகுதா? சென்னை வானிலை மையம் முக்கிய அப்டேட்
Related Stories
Recommended image1
ஐய்யோ.. SI கொ*லயில் அதிமுக MLAவுக்கு தொடர்பு? விசாரணை வளையத்தில் மகேந்திரன் - நள்ளிரவில் நடந்தது என்ன?
Recommended image2
போலீஸ் மேல கைய வச்சா என்ன நடக்கும்னு காட்டுறேன்! ஒரு கோடி ரூபாய் நிதியுதவியை அறிவித்த கையோடு கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved