MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ரொம்ப அசிங்கமா இருக்கு! கோர்ட்டில் கதறிய மிளகாய் பொடி வெங்கடேசன்! நடந்தது என்ன?

ரொம்ப அசிங்கமா இருக்கு! கோர்ட்டில் கதறிய மிளகாய் பொடி வெங்கடேசன்! நடந்தது என்ன?

மிளகாய்ப்பொடி வெங்கடேசன் என்றழைக்கப்படும் கே.ஆர்.வெங்கடேஷ், தனது அடைமொழியை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

1 Min read
Author : vinoth kumar
Published : Sep 02 2025, 02:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Google

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் பி.டி.மூர்த்தி நகர் வீரவாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேஷ் என்ற மிளகாய்ப்பொடி வெங்கடேசன். தமிழக பாஜகவில் மாநில ஓபிசி அணியின் மாநில செயலாளராக இருந்து வந்தார். இவர் மீது ஆந்திரா, தெலங்கானாவில் செம்மர கடத்தல் வழக்குகள், ஆவடி காவல் ஆணையரகத்தில் பணமோசடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல முறை கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.

24
Image Credit : Google

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி மதுரை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, பிரபல ரவுடி மிளகாய் பொடி வெங்கடேஷ் பொன்னாடை போர்த்தி வரவேற்ற புகைப்படங்கள் வைரலானது. மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து எடுத்துக்கொண்ட போட்டோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு ஆந்திர காவல்துறை, தமிழக காவல்துறை, தெலங்கானா காவல்துறை என பலருக்கு டேக் செய்திருந்தார்.

Related Articles

Related image1
தமிழகத்தின் தலைநகரே தரங்கெட்ட நகராக மாறிப்போச்சு! திமுகவின் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய NARI 2025!
Related image2
விஜய் போட்ட ஒரே போடு! அலறிய இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயகே!
34
Image Credit : Google

இந்நிலையில் எலட்ரிக்கல்ஸ் கடைக்கு வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுக்கல் வாங்கலில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில், செங்குன்றம் போலீசாரால் மிளகாய் பொடி வெங்கடேசன் கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பின்னர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.

44
Image Credit : istock

இந்நிலையில் மிளகாய்ப்பொடி என்ற அடைமொழியை நீக்க புழல் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிடக்கோரி ரவுடி வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சந்தன மரம் கடத்திய போது உங்கள் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படவில்லையா? என நீதிபதி கேள்வி எழுப்பியது. மேலும் ரவுடி வெங்கடேசனின் கோரிக்கைக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை உயர் நீதிமன்றம்
தமிழ்நாடு
அரசியல்
குற்றம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
தமிழகத்தின் தலைநகரே தரங்கெட்ட நகராக மாறிப்போச்சு! திமுகவின் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய NARI 2025!
Recommended image2
விஜய் போட்ட ஒரே போடு! அலறிய இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயகே!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved