MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஷாக்கிங் நியூஸ்! திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் நடந்த சம்பவத்தால் சோகத்தில் பக்தர்கள்!

ஷாக்கிங் நியூஸ்! திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் நடந்த சம்பவத்தால் சோகத்தில் பக்தர்கள்!

Tiruchendur Murugan Temple: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாகப் பணியின் போது, வடமாநிலத் தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தார். 

1 Min read
Author : vinoth kumar
Published : Sep 19 2025, 11:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
Image Credit : Asianet News

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

தமிழ் கடவுளான முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாகவும், கடற்கரையோரம் அமைந்துள்ள கோவில்களில் மிகவும் சிறப்பு பெற்ற தலமாகவும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாக பணிகள் நடந்து வந்தது. பின்னர் 12 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூலை மாதம் 7ம் தேதி கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இன்னும் பணிகள் முடிவடையாததால் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

23
திருச்செந்தூர் கோவில் வளாகம்
Image Credit : Google

திருச்செந்தூர் கோவில் வளாகம்

இந்த பணியில் வடமாநிலங்களைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கோவில் வளாகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தின் மேல் தளத்தில் பணியில் வடமாநிலத் தொழிலாளி அவிஜித் போதார் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவிஜித் போதாருக்கு தலையில் மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சக பணியாளர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Related Articles

Related image1
வரிசை கட்டி வரும் மேகக்கூட்டங்கள்! இன்னொரு ரவுண்ட் இருக்கு! மழை குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த தமிழ்நாடு வெதர்மேன்!
Related image2
அப்பவே அப்பாவுக்கு 14 இடங்களில்.. இப்போ அம்மா! முதலில் சுத்தி! அப்புறம் கத்தி! கிறுகிறுத்து போன போலீஸ்!
33
வடமாநிலத் தொழிலாளி
Image Credit : stockPhoto

வடமாநிலத் தொழிலாளி

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த அவிஜித் போதாருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோவில் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் வளாகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலாளி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
காவல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அதிமுகவிடம் பாஜககூட ஆட்சியில் பங்கு கேட்கலாம்... திமுகவுக்காக காங்கிரஸ் என்ன செய்தது..? நியாயம் சொல்லும் தராசு ஷ்யாம்..!
Recommended image2
மோடி, அமித்ஷா பருப்பு தமிழ்நாட்டில் வேகாது..! உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
Recommended image3
போட்ரா வெடிய.. இனி 6ம் வகுப்பு முதல் இலவச லேப்டாப்..! முதல்வர் அதிரடி அறிவிப்பு
Related Stories
Recommended image1
வரிசை கட்டி வரும் மேகக்கூட்டங்கள்! இன்னொரு ரவுண்ட் இருக்கு! மழை குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த தமிழ்நாடு வெதர்மேன்!
Recommended image2
அப்பவே அப்பாவுக்கு 14 இடங்களில்.. இப்போ அம்மா! முதலில் சுத்தி! அப்புறம் கத்தி! கிறுகிறுத்து போன போலீஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved