MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்! இனி பொருட்களின் தரம் குறையாது! ஏன் தெரியுமா?

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்! இனி பொருட்களின் தரம் குறையாது! ஏன் தெரியுமா?

ரேஷன் பொருட்களின் தரத்தை அதிகரிக்க தமிழ்நாடு அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2 Min read
Author : Rayar r
Published : Jul 30 2025, 07:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Good News For Tamilnadu Ration Card Holders
Image Credit : our own

Good News For Tamilnadu Ration Card Holders

தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடைகள் எனப்படும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. நடுத்தர மக்களுக்கு, ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்களே வாழ்வாதாரமாக உள்ளது. ஆனால் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரம் சரியாக இல்லை என்றும், எடையும் சரியாக போடப்படுவதில்லை என்றும் தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

24
ரேஷன் பொருட்களின் தரம் சரியில்லை
Image Credit : x/ ai image

ரேஷன் பொருட்களின் தரம் சரியில்லை

அதாவது அரிசியில் கல், தவிடு, வண்டுகள் இருப்பது போன்ற புகார்கள் ஒருசில இடங்களில் இருந்து வருகின்றன. துவரம் பருப்பு மற்றும் பாமாயிலின் தரம் சில சமயங்களில் சரியாக இருப்பதில்லை எனவும் சில இடங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது மட்டுமின்றி ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் மாதத்தின் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு கிடைப்பதில்லை எனவும் பரவலாக புகார்கள் எழுந்து வருகின்றன.

Related Articles

Related image1
ரேஷன், ஆதார் கார்டு போதும்.. பெண்களுக்கு ரூ.30 லட்சம் கடனை வாரி வழங்கும் தமிழக அரசு
Related image2
இனி 2- 3 நிமிடங்களில் ரேஷன் பொருட்கள்.! கூட்டுறவுத்துறை முக்கிய அறிவிப்பு
34
தமிழ்நாடு அரசு எடுத்த முக்கிய நடவடிக்கை
Image Credit : our own

தமிழ்நாடு அரசு எடுத்த முக்கிய நடவடிக்கை

இந்நிலையில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறையாத வகையில் தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. அதாவது சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் உணவு வழங்கல் துறை, நுகர்பொருள் வாணிப கழகம், சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் ஒருங்கிணைந்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் தரமான ரேஷன் பொருட்களையே மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.

44
மாவட்ட ஆட்சியர் தரத்தை உறுதி செய்ய வேண்டும்
Image Credit : our own

மாவட்ட ஆட்சியர் தரத்தை உறுதி செய்ய வேண்டும்

வாணிப கழக மண்டல மேலாளர்கள், கிடங்கு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், பொது வினியோக திட்ட கூட்டுறவு இணை பதிவாளர்கள் ஆகியோர் ரேஷன் பொருட்கள் வைக்கபட்டுள்ள கிடங்குகளில் தொடர்ந்து ஆய்வு செய்து பொருட்களின் தரத்தை பரிசோதனை செய்ய வேண்டும். ஆய்வு செய்த பிறகு அவற்றை மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து தரத்தை உறுதி செய்த பின்னரே பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என்று அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டார்.

ரேஷன் அட்டைதாரர்கள் ஹேப்பி

மேலும் பொருட்களின் அளவை குறைக்கக் கூடாது. ரேஷன் கடைகளில் மக்களை அதிக நேரம் காக்க வைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை அதிகாரிகளுக்கு அமைச்சர் வழங்கினார். ரேஷன் பொருட்களை மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்வார் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளதன் மூலம் இனி ரேஷன் கடைகளில் தரம்வாய்ந்த பொருட்கள் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் நீண்ட நாளைய குற்றச்சாட்டு முடிவுக்கு வர உள்ளது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
குடும்ப அட்டை
ரேஷன் கடை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
ரேஷன், ஆதார் கார்டு போதும்.. பெண்களுக்கு ரூ.30 லட்சம் கடனை வாரி வழங்கும் தமிழக அரசு
Recommended image2
இனி 2- 3 நிமிடங்களில் ரேஷன் பொருட்கள்.! கூட்டுறவுத்துறை முக்கிய அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved