- Home
- Tamil Nadu News
- கணவன் வீட்டில் இருக்கும்போதே வந்த முனங்கல் சத்தம்! ரூமின் கதவை திறந்து பார்த்தவருக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சி!
கணவன் வீட்டில் இருக்கும்போதே வந்த முனங்கல் சத்தம்! ரூமின் கதவை திறந்து பார்த்தவருக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சி!
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், மீனவர் ஒருவர் தனது மனைவியை கள்ளக்காதலனுடன் கையும் களவுமாக பிடித்தார். இதனால் ஏற்பட்ட தகராறில், கள்ளக்காதலன் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

கணவன் - மனைவி இடையே தகராறு
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடற்கரை கிராமத்தை சேர்ந்த மீனவர், தனது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். கணவர் மீன் பிடிக்க செல்லும் போதெல்லாம் மனைவி வேறொரு வாலிபருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்தது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
அறையின் கதவை திறந்த கணவர்
நேற்று முன்தினம் இதுதொடர்பாக தம்பதிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் 2 பேரும் தனித்தனி அறையில் தூங்க சென்றனர். இந்நிலையில் நள்ளிரவில் திடீரென சத்தம் கேட்டதை அடுத்து கணவர் கண் விழித்து பார்த்துள்ளார். கோபத்தில் மனைவி ஏதாவது விபரீத முடிவு எடுத்து விடப்போகிறார் என்ற அச்சத்தில் அவரது அறையின் கதவை திறந்து பார்த்த போது கணவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
கள்ளக்காதலனுடன் நெருக்கம்
தான் வீட்டில் இருக்கும் போதே கள்ளக்காதலனை அறைக்கு வரவழைத்து அவருடன் மனைவி உல்லாசமாக இருந்ததை பார்த்த மீனவர் ஆத்திரத்தில் 2 பேரையும் சரமாரியாக வெளுத்து வாங்கினார். இதனால் கள்ளக்காதலனுக்கும் அவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
போலீஸ் விசாரணை
இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக கள்ளக்காதலன் பிளேடை எடுத்து, தனக்கு தானே கழுத்தை அறுத்துக் கொண்டார். இதையடுத்து கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

