MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மகளிர் உரிமைத் தொகை.. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரூ.1,000 எப்போது? தேதியை அறிவித்த உதயநிதி!

மகளிர் உரிமைத் தொகை.. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரூ.1,000 எப்போது? தேதியை அறிவித்த உதயநிதி!

Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை வேண்டி புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 15ம் தேதி முதல் ரூ.1,000 வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Rayar r
Published : Oct 16 2025, 02:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மகளிர் உரிமைத் தொகை
Image Credit : tndipr

மகளிர் உரிமைத் தொகை

தமிழக அரசு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டம் என்ற பெயரில் குடும்ப அட்டை வைத்துள்ள மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கி வருகிறது. இந்த 1,000 ரூபாய் தகுதியான பெண்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் மாதம்தோறும் செலுத்தப்பட்டு வருகிறது.

அரசு ஊழியர்கள், அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், குறிப்பிட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோரைத் தவிர மற்ற குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

24
புதிதாக விண்ணப்பித்த மகளிர்
Image Credit : Google

புதிதாக விண்ணப்பித்த மகளிர்

இதற்கிடையே புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்கள், தளர்வுகள் அறிவிக்கப்படவர்கள் என ஏராளமானோர் புதிதாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தனர். புதிதாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நடந்து கொண்டிருப்பதால் அவர்கள் தங்களுக்கு எப்போது மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.

Related Articles

Related image1
மகளிர் உரிமைத் தொகை! பெண்களுக்கு வரப்போகும் குஷியான அறிவிப்பு! தமிழக அரசின் சர்ப்ரைஸ்!
Related image2
மகளிர் உரிமைத் தொகை ரூ.30,000! எப்போது கொடுக்க போறீங்க ஸ்டாலின்? விடாமல் ரவுண்ட் கட்டும் நயினார் நாகேந்திரன்!
34
உதயநிதி குஷியான அறிவிப்பு
Image Credit : ANI

உதயநிதி குஷியான அறிவிப்பு

இந்நிலையில், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய உதயநிதி, ''தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 26 மாதங்களாக ஒவ்வொரு மகளிருக்கும் சுமார் 26,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

புதிய விண்ணப்பங்கள் எத்தனை?

இதுவரை மொத்தமாக கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய் மகளிர் உரிமைத்தொகை தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் பெண்கள் மகளிர் உதவித்தொகை பெறும் வகையில் முதல்வர் இந்த திட்டத்தில் சில விதிகளை தளர்த்தினார். புதிதாக மகளிர் உரிமைத் தொகை வேண்டி 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் சுமார் 28 லட்சம் மகளிர் விண்ணப்பங்களை அளித்தனர்.

44
டிசம்பர் 15ம் தேதி முதல் ரூ.1,000 கிடைக்கும்
Image Credit : tndipr

டிசம்பர் 15ம் தேதி முதல் ரூ.1,000 கிடைக்கும்

புதிதாக மகளிர் உரிமைத் தொகை கோரிய விண்ணப்பங்கள் வருவாய்த்துறை மூலமாக பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் நவம்பர் 30ம் தேதிக்குள் முடிவடையும். புதிதாக பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதியான மகளிருக்கு டிசம்பர் 15ம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்'' என்று தெரிவித்தார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
உதயநிதி ஸ்டாலின்
மகளிர் உரிமைத் தொகை
பெண்கள்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
Recommended image2
இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
Recommended image3
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!
Related Stories
Recommended image1
மகளிர் உரிமைத் தொகை! பெண்களுக்கு வரப்போகும் குஷியான அறிவிப்பு! தமிழக அரசின் சர்ப்ரைஸ்!
Recommended image2
மகளிர் உரிமைத் தொகை ரூ.30,000! எப்போது கொடுக்க போறீங்க ஸ்டாலின்? விடாமல் ரவுண்ட் கட்டும் நயினார் நாகேந்திரன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved