அலறிய ஈசிஆர்.. 36 வயது ஜமுனா செய்த வேலை.. கதறிய சுசில்.. கிரிஜா.. நடந்தது என்ன?
Crime: என் மனைவி பிரிந்து செல்ல காரணமாக இருந்த சுசில் தான் காரணம் என்பதால் கொலை செய்தேன். கள்ளக்காதல் விவகாரத்தில் இரட்டை கொலை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (42). மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜமுனா(36). இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் எதிர்வீட்டில் வசித்து வந்த திருமணமான சுகிலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் அடிக்கடி யாருக்கும் தெரியாமல் தனிமையில் சந்தித்து வந்தனர்.
இவர்களது கள்ளக்காதல் விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவி மற்றும் சுகிலை எச்சரித்துள்ளார். அப்படி இருந்த போதிலும் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஜமுனா தனது கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி பிரிந்து சென்றதற்கு சுசில் தான் முழு காரணம் என்பதால் அவர் மீது கடும் ஆத்திரத்தில் பார்த்திபன் இருந்து வந்துள்ளார். மேலும் சுசில் குடும்பத்தாரிடம் அவ்வப்போது பார்த்திபன் பிரச்சனை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 15ம் தேதி இரவு மது போதையில் பார்த்திபன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது பைக் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த பார்த்திபன் வீட்டில் இருந்த கத்தியால் சுசில் கழுத்து மற்றும் வயிற்றில் குத்தியுள்ளார். இதனை தடுக்க சுசில் மனைவி கிரிஜாவையும் கொலை செய்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் கானத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை செய்யப்பட்ட இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தலைமறவைாக இருந்த பார்த்திபனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். என் மனைவி பிரிந்து செல்ல காரணமாக இருந்த சுசில் தான் காரணம் என்பதால் கொலை செய்ததாக கூறினார். கள்ளக்காதல் விவகாரத்தில் இரட்டை கொலை நடந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

