MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை ரத்து செய்திடுக.! மீண்டும் தேர்வு- அரசுக்கு எதிராக இறங்கி அடிக்கும் எடப்பாடி

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை ரத்து செய்திடுக.! மீண்டும் தேர்வு- அரசுக்கு எதிராக இறங்கி அடிக்கும் எடப்பாடி

கடந்த ஜூலை 12ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வில் கேள்வித்தாள்கள் முறையாக கையாளப்படாதது மற்றும் விடைத்தாள்கள் சேதமடைந்தது தொடர்பான சர்ச்சைகள் எழுந்துள்ளன. எடப்பாடி பழனிச்சாமி தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Jul 22 2025, 01:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அரசு பணிக்காக காத்திருக்கும் இளைஞர்கள்
Image Credit : ANI

அரசு பணிக்காக காத்திருக்கும் இளைஞர்கள்

அரசு பணியில் இணைய வேண்டும் என்பது பல லட்சம் இளைஞர்களின் கனவாக உள்ளது. இதற்காக இரவு பகலாக அரசு பணி தேர்விற்காக தயாராகி வருகிறார்கள். பல கனவுகளோடு எழுதும் தேர்வில் சரியான முறையில் முடிவு வெளியாகும் என காத்திருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஜூலை 12ஆம் தேதி நடைபெற்ற தேர்வு தொடர்பாக அடுத்தடுத்து சர்ச்சையான தகவல்கள் வெளியாகி வருகிறது. 

கேள்வித்தாள்கள் பாதுகாப்பு இல்லாமல் அரசு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், விடைத்தாள்கள் கொண்டு செல்லப்பட்ட அட்டைப்பெட்டி சேதம் அடைந்து இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டது. அடுத்ததாக கேள்விகளும் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் குரல் எழுப்பி வருகிறார்கள்.

24
டிஎன்பிஎஸ்சி தேர்வு
Image Credit : Asianet News

டிஎன்பிஎஸ்சி தேர்வு

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 12.07.2025 அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வு ஆரம்பிக்கும் முன்னரே, மதுரையில் வினாத்தாள் ஒரு தனியார் ஆம்னி பேருந்தில், முறையாக சீலிடப்படாமல், கதவின் மேல் ஒரு A4 ஷீட் ஒட்டப்பட்ட நிலையில் அனுப்பப்பட்டது சர்ச்சையானது. பிறகு, தேர்வு வினாத்தாளில் பல கேள்விகள், குறிப்பாக தமிழ்ப் பாடக் கேள்விகள், Syllabus-க்கு அப்பாற்பட்டு இருந்ததாக பல்வேறு தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.

Related Articles

Related image1
டிஎன்பிஎஸ்சி கேள்வி தாள் நடைமுறையில் மாற்றம்.! வெளியான முக்கிய அறிவிப்பு
Related image2
6000 கோடி நகைக்கடன் தள்ளுபடி.! பொதுமக்களுக்கு குஷியான தகவலை சொன்ன தமிழக அரசு
34
டிஎன்பிஎஸ்சி தேர்வு குளறுபடி
Image Credit : ANI

டிஎன்பிஎஸ்சி தேர்வு குளறுபடி

இந்நிலையில், தற்போது, சேலத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட விடைத்தாள்கள் அடங்கிய பெட்டிகள் முறையாக சீலிடப்படாமல், ஆங்காங்கே உடைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன. குரூப்-4 பதவிகள், குறிப்பாக VAO பதவி என்பது தமிழ்நாடு அரசின் வேர் போன்றது.

 ஜாதி மத பேதமின்றி, ஏழை எளிய பின்னணி கொண்ட மக்கள் அரசு அதிகாரிகள் ஆகவேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட பதவி. பல லட்சம் மாணவர்களின் கனவாக இருக்கக் கூடிய குரூப்-4 தேர்வு என்பது, எவ்வளவு முறையாக நடத்தப்பட வேண்டியது?

44
டிஎன்பிஎஸ்சி தேர்வை ரத்து செய்திடுக
Image Credit : our own

டிஎன்பிஎஸ்சி தேர்வை ரத்து செய்திடுக

ஆனால், இந்த ஸ்டாலின் மாடல் அரசோ, மெத்தனப் போக்கின் உச்சத்தில் இந்த தேர்வை நடத்தி, தேர்வர்களின் வாழ்க்கையோடு விளையாடியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஜூலை 12 அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; உடனடியாக மறு தேர்வு வைக்க வேண்டும் எனவும், குரூப்-4 குளறுபடிகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமி அதிமுக
மு. க. ஸ்டாலின்
டி.என்.பி.எஸ்.சி.
தேர்வு

Latest Videos
Recommended Stories
Recommended image1
அன்புமணி மீது சிபிஐயில் கடும் புகார்..! வயிற்றில் வாயில் அடித்துக் கொள்ளும் ராமதாஸ் குரூப்
Recommended image2
விஜய் தூங்குறார்... விஜய் குளிக்கிறார்... என்னங்கடா மீடியா..? கதறும் திமுக ராஜிவ் காந்தி..!
Recommended image3
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு விடாமல் மழை ஊத்தப்போகுதா? சென்னை வானிலை மையம் முக்கிய அப்டேட்
Related Stories
Recommended image1
டிஎன்பிஎஸ்சி கேள்வி தாள் நடைமுறையில் மாற்றம்.! வெளியான முக்கிய அறிவிப்பு
Recommended image2
6000 கோடி நகைக்கடன் தள்ளுபடி.! பொதுமக்களுக்கு குஷியான தகவலை சொன்ன தமிழக அரசு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved