MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 200 கோடி சொத்து குவிப்பு? அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டின் கதவை தட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை! அதிர்ச்சியில் இபிஎஸ்!

200 கோடி சொத்து குவிப்பு? அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டின் கதவை தட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை! அதிர்ச்சியில் இபிஎஸ்!

முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

1 Min read
Author : vinoth kumar
| Updated : May 17 2025, 09:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன்
Image Credit : Sevvoor Ramachandran

முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன்

அதிமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் அவ்வப்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள சேவூர் ஊராட்சியில் வசித்து வருபவர் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்து வந்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.

23
லஞ்ச ஒழிப்புத்துறை
Image Credit : Sevvoor Ramachandran

லஞ்ச ஒழிப்புத்துறை

இந்நிலையில் சேவூர் ராமசந்திரன் வீட்டில் இன்று காலை முதல் 20க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சேவூர் ராமச்சந்திரன் மகன்களான விஜயகுமார், சந்தோஷ்குமார் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

Related Articles

Related image1
வார விடுமுறை அதுவுமா தமிழகம் முழுவதும் மின்தடை ஏற்படும் இடங்கள்! எத்தனை மணிநேரம்?
Related image2
தமிழகத்தில் நேற்று இரவு வெளுத்து வாங்கிய கனமழை! இன்று 13 மாவட்டங்களில் சம்பவம் காத்திருக்காம்!
33
சொத்து குவிப்பு
Image Credit : Sevvoor Ramachandran

சொத்து குவிப்பு

அதிமுக ஆட்சியின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவர் சேவூர் ராமச்சந்திரன். அப்போது வருமானத்துக்கு அதிகமாக அதாவது 200 கோடிக்கும் மேலாக சொத்துகள் சேர்த்ததாகவும், தமிழகம் மட்டுமல்லாது, கர்நாடகா உள்ளிட்ட பல இடங்களில் சொத்துகளை குவித்ததாகவும் புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் சம்பவம் அவரது ஆதரவாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனைக்கு அதிமுக பொதுச்செயலாளர் விரைவில் கண்டன அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமி

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
வார விடுமுறை அதுவுமா தமிழகம் முழுவதும் மின்தடை ஏற்படும் இடங்கள்! எத்தனை மணிநேரம்?
Recommended image2
தமிழகத்தில் நேற்று இரவு வெளுத்து வாங்கிய கனமழை! இன்று 13 மாவட்டங்களில் சம்பவம் காத்திருக்காம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved