MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 100 கி.மீ. வேகம்.. விளம்பர பலகையில் பைக் மோதி பயங்கர விபத்து.. தலை துண்டாகி துடித்த மருத்துவ மாணவர்கள்

100 கி.மீ. வேகம்.. விளம்பர பலகையில் பைக் மோதி பயங்கர விபத்து.. தலை துண்டாகி துடித்த மருத்துவ மாணவர்கள்

பெங்களூருவில் இருந்து ஒகேனக்கலுக்கு புல்லட்டில் சுற்றுலா சென்ற இரண்டு மருத்துவ மாணவர்கள்விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிவேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர விளம்பர பலகையில் மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

1 Min read
Author : vinoth kumar
Published : Dec 18 2025, 10:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மருத்துவக் கல்லூரி மாணவர்கள்
Image Credit : Asianet News

மருத்துவக் கல்லூரி மாணவர்கள்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வருண் கடப்பால் (22). அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிஸ்பால்சிங் (20). மாணவர்கள் இருவரும் பெங்களூருவில் இருந்து ஒகேனக்கலுக்கு புல்லட்டில் சுற்றுலா சென்றுள்ளனர்.

24
 இருசக்கர வாகனம் விபத்து
Image Credit : Google

இருசக்கர வாகனம் விபத்து

நேற்று முன்தினம் இரவு ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை பகுதியில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அரசு போக்குவரத்து பணிமனை அருகே வளைவில் செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த விளம்பர பலகை மீது இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

Related Articles

Related image1
மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
Related image2
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!
34
தலை துண்டாகி பலி
Image Credit : our own

தலை துண்டாகி பலி

இதில், வாகனத்தை ஓட்டி சென்ற வருண் காடாபால் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல் வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற மாணவர் சிசுபால் சிங் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தேன்கனிக்கோட்டை போலீசார் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

44
போலீஸ் விசாரணை
Image Credit : our own

போலீஸ் விசாரணை

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இருசக்கர வாகனத்தை அதி வேகத்தில் இயக்கியதே விபத்து காரணம் என தெரியவந்துள்ளது. சுற்றுலா சென்ற இளைஞர் தலை துண்டாகி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விபத்து
காவல்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய்க்கு 'டாட்டா' காட்டிய தாடி பாலாஜி! ஜோஸ் சார்லஸ் கட்சியில் இணைந்த பின்னணி என்ன?
Recommended image2
சீமான் பேச்சை காப்பியடித்தாரா விஜய்?.. ஆதாரங்களை அடுக்கும் 'தம்பிகள்'.. இணையத்தில் மோதல்!
Recommended image3
என் வாழ்நாளில் இதுவரை இல்லாத மகிழ்ச்சி..! தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சி பதிவு!
Related Stories
Recommended image1
மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
Recommended image2
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved