MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • இதுக்கு ஓகே சொன்னா தான் விளையாடுவேன்! பிசிசிஐக்கு பும்ரா நிபந்தனை! உண்மையை போட்டுடைத்த கோச்!

இதுக்கு ஓகே சொன்னா தான் விளையாடுவேன்! பிசிசிஐக்கு பும்ரா நிபந்தனை! உண்மையை போட்டுடைத்த கோச்!

இங்கிலாந்து தொடரில் 3 போட்டிகள் மட்டுமே விளையாடுவேன் என ஜஸ்பிரித் பும்ரா சொன்னதாக இந்திய அணியின் துணை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Rayar r
Published : Aug 01 2025, 03:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Jasprit Bumrah Gives Conditions To BCCI
Image Credit : ANI

Jasprit Bumrah Gives Conditions To BCCI

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான 5வது டெஸ்ட் போட்டி ஓவலில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்யும் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் சூப்பர் அரை சதம் (52 ரன்) அடித்து களத்தில் உள்ளார். 

இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் தான் தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலையில், இந்திய அணியின் நம்பர் 1 பாஸ்ட் பவுலர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு 5வது டெஸ்ட்டில் ஓய்வு அளிக்கப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

24
பும்ராவுக்கு ஓய்வு அளித்தது ஏன்?
Image Credit : X

பும்ராவுக்கு ஓய்வு அளித்தது ஏன்?

பும்ரா இந்த தொடரின் முதல், மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். இரண்டாவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வெடுத்தார். ''மிக முக்கியமான டெஸ்ட் தொடரில் தயாராவதற்காக பும்ராவுக்கு முன்கூட்டியே ஓய்வு கொடுத்து இந்த தொடரில் முழுமையாக விளையாட செய்திருக்க வேண்டும்.

 நாட்டுக்காக விளையாடும் ஒருவர் மிக முக்கியமான ஒரு தொடரில் விளையாடுவது அவசியம்'' என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து இருந்தனர்.

Related Articles

Related image1
முடிஞ்சா என்னை அவுட்டாக்கி பாரு! மனம் தளராமல் போராடிய பும்ரா! குவியும் பாராட்டு!
Related image2
Jasprit Bumrah: வரலாற்று சாதனை படைத்தும் கொண்டாடாத பும்ரா! ஏன் தெரியுமா?
34
இந்திய அணியின் துணை பயிற்சியாளர் விளக்கம்
Image Credit : X

இந்திய அணியின் துணை பயிற்சியாளர் விளக்கம்

இந்நிலையில், இங்கிலாந்து தொடரில் பும்ரா முழுமையாக விளையாடாதது குறித்து இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஷ்சேட் விளக்கம் அளித்துள்ளார். ''பணிச் சுமையைக் கருத்தில் கொண்டு, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவதாக ஜஸ்பிரித் பும்ரா தொடர் தொடங்குவதற்கு முன்பே தெரிவித்திருந்தார். பும்ராவின் முடிவுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்திய அணி நிர்வாகம் அவரை கடைசி டெஸ்டில் சேர்க்கவில்லை'' என்று ரியான் டென் டோஷ்சேட் கூறியுள்ளார்.

பும்ரா காயமடைந்தது எப்படி?

பும்ரா ஏற்கெனவே மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவிட்டதால், அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டும், அவரது உடல்நிலைக்கு மதிப்பளித்தும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று ரியான் டென் டோஷ்சேட் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்டின் போது பும்ரா காயம் அடைந்தார். இதனால் அவர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியிலும் விளையாடவில்லை. இந்த காயத்தை தொடர்ந்து பிசிசிஐ பும்ராவின் உடற்தகுதியை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

44
நாட்டுக்காக முழு அர்ப்பணிப்பு வேண்டும்
Image Credit : Getty

நாட்டுக்காக முழு அர்ப்பணிப்பு வேண்டும்

இதனால் தான் அவரை அதிக போட்டிகளில் விளையாட வைக்க பிசிசிஐ தயக்கம் காட்டுகிறது. பிசிசிஐயின் இந்த முடிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ''பல கோடிகள் சம்பளம் வாங்கி, பல்வேறு சலுகைகளை அனுபவிக்கும் ஒரு வீரர் நாட்டுக்காக விளையாடும்போது நிபந்தனைகளை விதித்து விளையாடக் கூடாது. ஒன்று அவர் இந்த தொடரில் முழுமையாக விளையாடி இருக்க வேண்டும். இல்லாவிடில் தொடரில் இருந்தே விலகி இருக்க வேண்டும்'' என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

பும்ராவை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது

இது மட்டுமின்றி பிசிசிஐ பும்ராவை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது. ஏற்கெனவே பல வீரர்கள் இந்திய அணியின் கதவை தட்டிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கும் வாய்ப்பளித்து பும்ராவுக்கு இணையாக உருவெடுக்க வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறியுள்ளனர்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
"பாக். பேட்ஸ்மேன்களை பதம் பார்த்த பும்ரா-பாண்டியா! சூப்பர் 8-க்கு கெத்தாக நுழைந்தது இந்தியா!"
Recommended image2
அபிஷேக் சர்மாவின் பலவீனம்.. 'ஸ்கெட்ச்' போட்டு தூக்கும் எதிரணிகள்.. டக் அவுட்டில் மோசமான சாதனை!
Recommended image3
IND vs PAK: பிட்ச் எப்படி இருந்தால் எனக்கென்ன.. அதிரடி பேட்டிங் சீக்ரெட்டை சொன்ன இஷான் கிஷன்!
Related Stories
Recommended image1
முடிஞ்சா என்னை அவுட்டாக்கி பாரு! மனம் தளராமல் போராடிய பும்ரா! குவியும் பாராட்டு!
Recommended image2
Jasprit Bumrah: வரலாற்று சாதனை படைத்தும் கொண்டாடாத பும்ரா! ஏன் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved