MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Spiritual: “பேச்சுலரா நீங்க…! இந்த கோவிலுக்கு போயி வந்தா, அடுத்த தடவையே ஜோடியோட தான் போவீங்க!”

Spiritual: “பேச்சுலரா நீங்க…! இந்த கோவிலுக்கு போயி வந்தா, அடுத்த தடவையே ஜோடியோட தான் போவீங்க!”

மயிலாடுதுறை திருமணஞ்சேரி உத்வகநாதர் கோவில், திருமணத் தடைகளை நீக்கும் ஒரு முக்கிய பரிகார ஸ்தலமாகும். இங்கு வந்து மாலை சூட்டி வழிபடுவதால் திருமணம் கைகூடும் என்பதும், தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனப்தும் ஐதீகம்.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Nov 15 2025, 02:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
திருமண வரும் தரும் ஆலயம்
Image Credit : googlr

திருமண வரும் தரும் ஆலயம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் அமைந்துள்ள திருமணஞ்சேரி உத்வகநாதர் கோவில், திருமணத் தடைகள் நீங்கும் பரிகார ஸ்தலமாக தமிழகத்தில் பெரும் நம்பிக்கையுடன் தரிசிக்கப்படும் தலம். பழங்காலத்தில் ‘கோவில்காடு’ என அழைக்கப்பட்ட இந்த ஊர், காலப்போக்கில் ‘திருமணஞ்சேரி’ என்று பெயர் பெற்றது. இங்கு சிவபெருமான் கந்தபரிமலேஸ்வரராகவும், அம்பாள் பெரியநாயகியாகவும் அருள்பாலிக்கின்றனர்.

இந்தத் தலத்தில் சிவனுக்கும் அம்பாளுக்கும் அடுத்து நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, சுயம்பு விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், வள்ளி–தேவசேனா சமேத சுப்பிரமணியர், துர்கை, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி, சூரியன் உள்ளிட்ட பல தெய்வங்களையும் தரிசிக்கலாம்.

23
திருமணத் தடை நிவாரணம்
Image Credit : googlr

திருமணத் தடை நிவாரணம்

திருமணத் தடை நிவாரணம் திருமணத்தில் தடை இருப்பவர்கள் இங்கு வந்து சிவனுக்கும் அம்மனுக்கும் மாலைகள் சூட்டி அர்ச்சனை செய்தால், வழி திறக்கும் என்ற மகா நம்பிக்கை உள்ளது. அர்ச்சகர் தரும் மாலையை அணிந்து கோவிலை ஒரு முறை வலம் வந்து, அந்த மாலையை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதும் இத்தலத்தின் சிறப்பு. திருமணம் நடந்த பின், தம்பதிகள் மீண்டும் இங்கு வந்து பழைய மாலையை கோவிலில் சமர்ப்பித்து, புதிய மாலை கட்டி சிவஅம்பிகையை வழிபடுவது புனிதமாக கருதப்படுகிறது.

Related Articles

Related image1
Spiritual: உடல் உபாதைகளை தீர்க்கும் நூபுர கங்கை தீர்த்தம்.! குளித்து எழுந்தால் குடும்ப, சொத்து பிரச்சினை காணாமல் போகும்.! எங்குள்ளது தெரியுமா?!
Related image2
Spiritual: ராகு காலத்தில் என்ன செய்யலாம் தெரியுமா?! ராகுகால வழிபாட்டுக்கு இவ்ளோ பவரா?
33
சாந்தானப் பிராப்திக்கான பரிகாரம்
Image Credit : google

சாந்தானப் பிராப்திக்கான பரிகாரம்

சாந்தானப் பிராப்திக்கான பரிகாரம் இன்னும் ஒரு முக்கிய நம்பிக்கை. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இங்கு தொட்டில் கட்டி வழிபட்டால் மனமார்ந்த விருப்பம் நிறைவேறும் என்பதுதான். சித்திரை ஆண்டு பிறப்பின் சிறப்பு சித்திரை வருடப் பிறப்பு நாளில் இங்கு இரவு தங்கி காலையில் வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை தரும் என பக்தர்கள் நம்புகின்றனர்

போக்குவரத்து வசதி கும்பகோணம்–மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால் சென்னையிலிருந்து புதுச்சேரி, சிதம்பரம், கடலூர் வழியாக வரும் பேருந்துகள் அனைத்தும் இந்தத் தலம் அருகே செல்கின்றன. மயிலாடுதுறை நகராட்சி பேருந்துகளும் நேரடியாக திருமணஞ்சேரி வரை செல்வது பயணிகளுக்கு பெரும் வசதியாக இருக்கிறது.

ஒரு நம்பிக்கை… ஒரு மாற்றம்! திருமணஞ்சேரிக்கு ஒருமுறை சென்று பிரார்த்தனை செய்த பலரும், “அடுத்த தடவையே நாங்களே ஜோடியா வந்தோம்!” என்று பகிர்ந்துகொள்வதே இந்தத் தலத்தின் அசாதாரண ஆன்மீக ஈர்ப்பை காட்டுகிறது.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஆன்மீகம்
கோவில் நிகழ்வுகள்
கோவில்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கோவிலில் செருப்பு காணாமல் போனால் அதிர்ஷ்டமா? ஜோதிடர்கள் என்ன சொல்கிறார்கள்?
Recommended image2
மகா சிவராத்திரி உருவான வரலாறு: ஏன் இந்த இரவு இவ்வளவு புனிதமானது? முழு விபரம்!
Recommended image3
தனுசு ராசியினர் வழிபட வேண்டிய சிவன் கோயில் எங்கு இருக்கிறது? என்ன பலன் கிடைக்கும்?
Related Stories
Recommended image1
Spiritual: உடல் உபாதைகளை தீர்க்கும் நூபுர கங்கை தீர்த்தம்.! குளித்து எழுந்தால் குடும்ப, சொத்து பிரச்சினை காணாமல் போகும்.! எங்குள்ளது தெரியுமா?!
Recommended image2
Spiritual: ராகு காலத்தில் என்ன செய்யலாம் தெரியுமா?! ராகுகால வழிபாட்டுக்கு இவ்ளோ பவரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved