MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Spiritual: ராகு காலத்தில் என்ன செய்யலாம் தெரியுமா?! ராகுகால வழிபாட்டுக்கு இவ்ளோ பவரா?

Spiritual: ராகு காலத்தில் என்ன செய்யலாம் தெரியுமா?! ராகுகால வழிபாட்டுக்கு இவ்ளோ பவரா?

ராகு காலம் சுப செயல்களுக்கு ஏற்றதல்ல எனக் கருதப்பட்டாலும் இது துர்க்கை அம்மனை வழிபடுவதற்கு மிகவும் சக்திவாய்ந்த நேரமாகும்.ராகுகாலத்தில் நெய் விளக்கேற்றி அம்மனை வேண்டினால் திருமண தடை, கடன் சுமை, உடல்நல குறைபாடுகள் போன்ற பல பிரச்சனைகள் நீங்கும்.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Nov 15 2025, 12:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வழிபாடு செய்வதற்கு மிகச் சக்திவாய்ந்த காலம்
Image Credit : Asianet News

வழிபாடு செய்வதற்கு மிகச் சக்திவாய்ந்த காலம்

இந்து மரபில் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட ஒன்றரை மணிநேரம் ராகு காலம் என அழைக்கப்படும். பொதுவாக இந்த நேரம் சுப செயல்களுக்கு ஏற்ற நேரம் அல்ல என்று கருதினாலும், வழிபாடு செய்வதற்கு மிகச் சக்திவாய்ந்த காலமாகவே நம் சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. எந்த விதமான வாழ்க்கை பிரச்சனைகளாக இருந்தாலும், அவற்றை நீக்க சிறப்பு நேரம் இதுவென பண்டையோர் நம்பிக்கை.

25
உக்கிர தேவைகள் விரைவில் அருள் தருவர்
Image Credit : Asianet News

உக்கிர தேவைகள் விரைவில் அருள் தருவர்

ராகுவின் அதிதேவதை துர்க்கை அம்மன். குறிப்பாக துர்க்கை, காளி போன்ற உக்கிர தேவைகள் விரைவில் அருள் தருபவர்களாக கருதப்படுகின்றனர். ராகு காலத்தில் நெய் விளக்கேற்றி அம்மனை வேண்டினால் மனக் கோரிக்கைகள் தடை இல்லாமல் நிறைவேறும் என்று ஆன்மிகவாதிகள் கூறுகிறார்கள்.

Related Articles

Related image1
Spiritual: நிலப் பிரச்னைகளை தீர்க்கும் வராஹி அம்மன்.! எந்தக் கிழமையில் வழிபடலாம்?
Related image2
Spiritual: உடல் உபாதைகளை தீர்க்கும் நூபுர கங்கை தீர்த்தம்.! குளித்து எழுந்தால் குடும்ப, சொத்து பிரச்சினை காணாமல் போகும்.! எங்குள்ளது தெரியுமா?!
35
தோஷங்கள் ஓடி ஒளியும்
Image Credit : Asianet News

தோஷங்கள் ஓடி ஒளியும்

செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வழிபடுவது திருமண தடைகளை நீக்கவும், கடன் சுமையை குறைக்கவும், வறுமை நீங்கவும், ராகு தோஷத்தால் ஏற்படும் பிரச்சனைகள் சரியாகவும் பயன்படும். வெள்ளிக்கிழமை ராகு காலம் குடும்ப நலன், கணவன்-மனைவி அமைதி, சேமிப்பு வளர்ச்சி, குழந்தைகளின் வளர்ச்சி போன்ற விஷயங்களுக்கு சிறப்பாக கருதப்படுகிறது. 

45
எதிரி பிரச்சினைகள் காணாமல் போகும்
Image Credit : Asianet News

எதிரி பிரச்சினைகள் காணாமல் போகும்

ஞாயிற்றுக்கிழமை வரும் ராகு காலத்தில் வழிபட்டால் உடல்நல குறைபாடுகள், எதிரி பிரச்சினைகள், வெளிநாட்டு முயற்சிகள், பிரிந்த உறவுகள் இணைவு போன்றவை சாதகமாக அமையும். வீட்டில் வழிபட விரும்புபவர்கள் சிவப்பு துணி விரித்து அதன்மேல் துர்க்கை அம்மன் படத்தை வைத்து நெய் விளக்கேற்றி செவ்வரளி அல்லது மல்லிகை மலர்கள் தூவி பூஜை செய்யலாம். எலுமிச்சை சாதம், பானகம் போன்ற எளிய நைவேத்யமும் போதும். துர்க்கை மந்திரம் அல்லது அம்மன் நாமம் 108 முறை ஜபிப்பதும் நல்ல பலனை தரும்.

55
மனதில் இருந்த தடைகள் அகலும்
Image Credit : Asianet News

மனதில் இருந்த தடைகள் அகலும்

தொடர்ச்சியாக ராகு காலத்தில் விளக்கேற்றி அம்மனை வேண்டுகையில், மனதில் இருந்த தடைகள் மெதுவாக அகன்று, நம்பிக்கை, அமைதி, முன்னேற்றம் ஆகியவை வாழ்க்கையில் நிலைப்பெறும் என்று நம்பப்படுகிறது.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஆன்மீகம்
கோவில்
கோவில் நிகழ்வுகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கோவிலில் செருப்பு காணாமல் போனால் அதிர்ஷ்டமா? ஜோதிடர்கள் என்ன சொல்கிறார்கள்?
Recommended image2
மகா சிவராத்திரி உருவான வரலாறு: ஏன் இந்த இரவு இவ்வளவு புனிதமானது? முழு விபரம்!
Recommended image3
தனுசு ராசியினர் வழிபட வேண்டிய சிவன் கோயில் எங்கு இருக்கிறது? என்ன பலன் கிடைக்கும்?
Related Stories
Recommended image1
Spiritual: நிலப் பிரச்னைகளை தீர்க்கும் வராஹி அம்மன்.! எந்தக் கிழமையில் வழிபடலாம்?
Recommended image2
Spiritual: உடல் உபாதைகளை தீர்க்கும் நூபுர கங்கை தீர்த்தம்.! குளித்து எழுந்தால் குடும்ப, சொத்து பிரச்சினை காணாமல் போகும்.! எங்குள்ளது தெரியுமா?!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved