MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • "யார் சார் இவன்?" - வடிவேலுவின் நடிப்பைப் பார்த்து மிரண்டு போன கவுண்டமணி! நடிப்பில் வெறித்தனமாக நடந்துகொண்ட வைகை புயல்.!

"யார் சார் இவன்?" - வடிவேலுவின் நடிப்பைப் பார்த்து மிரண்டு போன கவுண்டமணி! நடிப்பில் வெறித்தனமாக நடந்துகொண்ட வைகை புயல்.!

'என் ராசாவின் மனசிலே' படப்பிடிப்பில் கவுண்டமணியை மிரள வைத்தது முதல், தனக்கு ஒரு வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக அடி வாங்கத் துணிந்தது வரை, வடிவேலுவின் அர்ப்பணிப்பை இக்கட்டுரை விவரிக்கிறது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 18 2026, 01:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
சினிமாவுக்கே சவால் விடும் ரகம்!
Image Credit : our own

சினிமாவுக்கே சவால் விடும் ரகம்!

தமிழ் சினிமாவின் நகைச்சுவை வரலாற்றை 'வடிவேலுவுக்கு முன்', 'வடிவேலுவுக்கு பின்' என இரண்டாகப் பிரிக்கலாம். இன்று உலகத்தமிழர்களைத் தன் உடல்மொழியால் கட்டிப்போட்டுள்ள வைகைப்புயலின் ஆரம்பகாலப் போராட்டங்கள், ஒரு த்ரில்லர் சினிமாவுக்கே சவால் விடும் ரகம். சமீபத்தில் இயக்குநர் கஸ்தூரி ராஜா பகிர்ந்த தகவல்கள், வடிவேலு எனும் கலைஞனின் "வெறித்தனமான சினிமா பசி"யைப் பறைசாற்றுகின்றன.

28
மதுரையில் ஒரு எரிமலை: அரண்டு போன கஸ்தூரி ராஜா!
Image Credit : our own

மதுரையில் ஒரு எரிமலை: அரண்டு போன கஸ்தூரி ராஜா!

'என் தங்கை கல்யாணி' படத்தில் சின்ன வேடத்தில் நடித்தும், மூன்று ஆண்டுகள் வாய்ப்பின்றி முடங்கிக் கிடந்தவர் வடிவேலு. அப்போதுதான் மதுரைக்கு ஒரு திருமணத்திற்காகச் சென்ற ராஜ்கிரண் மற்றும் கஸ்தூரி ராஜாவிடம் வடிவேலுவை யாரோ அறிமுகம் செய்கிறார்கள்.

"ஏதாவது நடித்துக் காட்டு" என்று கஸ்தூரி ராஜா சொன்னதுதான் தாமதம்... அங்கேயே ஒரு 'பெர்ஃபார்மன்ஸ்' அரங்கேறியது. திடீரென தரையில் விழுந்து புரண்டு அழுதார்! அடுத்த நொடியே எழுந்து சிவாஜி கணேசனின் கணீர் வசனங்களைப் பேசினார்! உடல்மொழியில் அப்படி ஒரு வேகம்!அவரின் அந்த அசுரத்தனமான நடிப்பைப் பார்த்து அரண்டு போன கஸ்தூரி ராஜா, "இவன் சாதாரண ஆள் இல்லை, இவனுக்கு என் கதையில் நிச்சயம் இடமுண்டு" என அங்கேயே பச்சைக்கொடி காட்டினார்.

Related Articles

Related image1
Music Story: யாருக்கும் தெரியாத 'கரகாட்டக்காரன்' அன்-டோல்ட் ஸ்டோரி.! 365 நாட்கள் சாதனைக்கு இதுதான் காரணமா?!
Related image2
Music: 'சின்னத்தாய்' பாடலில் ஒளிந்திருக்கும் ராஜாவின் மேஜிக்! தனிமையின் ராகத்தை தாளமிட்ட இசைஞானி.!
38
"யார் சார் இவன்?" - மிரண்டு போன கவுண்டமணி!
Image Credit : our own

"யார் சார் இவன்?" - மிரண்டு போன கவுண்டமணி!

'என் ராசாவின் மனசிலே' படப்பிடிப்புத் தளம். அப்போது நகைச்சுவை உலகில் முடிசூடா மன்னனாக வலம் வந்த கவுண்டமணியுடன் வடிவேலுவுக்கு முதல் காட்சி. கேமரா ஓடியது... வடிவேலு தன் அசாத்தியமான டைமிங்கால் அசத்தினார். காட்சி முடிந்து கட் சொன்னதும், கவுண்டமணி நேராக கஸ்தூரி ராஜாவிடம் ஓடினார். ஒருவித ஆச்சரியமும் மிரட்சியும் கலந்த குரலில், "யார் சார் இவன்? எங்கிருந்து புடிச்சீங்க இவனை?" என்று கேட்டுள்ளார். தனக்கு நிகராக, ஏன் ஒருகட்டத்தில் தன்னையே மிஞ்சும் அளவுக்கு ஒரு அசுரக் கலைஞன் உருவெடுத்துவிட்டதை 'நகைச்சுவை ஜாம்பவான்' அன்றே உணர்ந்துவிட்டார்.

48
"அண்ணே... இன்னும் நாலு மிதி சேர்த்தி மிதிங்க!"
Image Credit : our own

"அண்ணே... இன்னும் நாலு மிதி சேர்த்தி மிதிங்க!"

வடிவேலுவின் சினிமா பசிக்கு மகுடம் வைத்தது ஒரு நெகிழ்ச்சியான சம்பவம். கதையின்படி கவுண்டமணி வடிவேலுவை ஓங்கி மிதிக்க வேண்டும். யாராவது அடி வாங்கத் தயங்குவார்கள், ஆனால் வடிவேலுவோ கவுண்டமணியின் கால்களைப் பிடித்துக்கொண்டு, "அண்ணே, இன்னும் ஒரு நாலு மிதி சேர்த்து மிதிங்கண்ணே... அப்படியாவது எனக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைக்கட்டும்!" என்று உருகியுள்ளார். அடிகள் பட்டாலும் பரவாயில்லை, அது திரையில் சிரிப்பாக மாற வேண்டும் என்ற அந்த "வெறித்தனம்" தான், இன்று அவரை நகைச்சுவை உலகின் சிம்மாசனத்தில் அமர வைத்திருக்கிறது.

58
திறமைகளின் பேரூற்று!
Image Credit : our own

திறமைகளின் பேரூற்று!

"வடிவேலுவிடம் ஒன்றைச் செய்யச் சொன்னால், அவர் ஓராயிரம் ஐடியாக்களைக் கொட்டுவார்" எனப் புகழ்கிறார் கஸ்தூரி ராஜா. வெறும் நடிகராக மட்டும் இல்லாமல், அந்தப் படத்தின் பல நகைச்சுவைக் காட்சிகளுக்கு உயிர் கொடுத்த 'ஐடியா மெஷின்' அவர்தான். சாமானியனாகத் தொடங்கி, இன்று சரித்திரமாக மாறியிருக்கும் வடிவேலுவின் இந்தப் பயணம், சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் ஒரு பாடம்!

68
வெறும் நடிகரல்ல... ஒரு சகாப்தம்!
Image Credit : our own

வெறும் நடிகரல்ல... ஒரு சகாப்தம்!

"யார் சார் இவன்?" என்று அன்று வியப்புடன் கேட்கப்பட்ட அதே கேள்விக்கு, இன்று காலம் பதில் சொல்லியிருக்கிறது. அவர் ஒரு சாதாரண நடிகர் மட்டுமல்ல; பல கோடி மக்களின் மன அழுத்தத்திற்கு மருந்தாக இருக்கும் ஒரு 'சிரிப்பு புரட்சி நடிகர்'. 

78
சாமானியனும் சரித்திரம் படைக்க முடியும்
Image Credit : our own

சாமானியனும் சரித்திரம் படைக்க முடியும்

தன் சினிமா பசிக்காக அன்று உதை வாங்கிய அதே கால்கள், இன்று நகைச்சுவை உலகின் சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கின்றன. கஸ்தூரி ராஜா அன்று விதைத்த அந்தச் சிறு விதை, இன்று வைகைப்புயலாக மாறி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் ஆக்கிரமித்திருக்கிறது. திறமையும், தளராத அர்ப்பணிப்பும் இருந்தால், ஒரு சாமானியனும் சரித்திரம் படைக்க முடியும் என்பதற்கு வடிவேலுவே ஆகச்சிறந்த சாட்சி.

88
 "அவர் தான் எங்கள் வைகைப்புயல்!"
Image Credit : our own

"அவர் தான் எங்கள் வைகைப்புயல்!"

அன்று கவுண்டமணி மிரண்டு கேட்ட அந்த ஒரு கேள்வி, இன்று உலகத் தமிழர்கள் அனைவரும் பெருமையோடு சொல்லும் ஒரு பதிலாக மாறியிருக்கிறது: "அவர் தான் எங்கள் வைகைப்புயல்!"  

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
திரைப்பட விமர்சனம்
சினிமா காட்சியகம்
திரைப்படம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
"அட நம்ம ராஜாடா!" இளையராஜாவை உச்சி முகர்ந்த கண்ணதாசன்! பாட்டிலும் பெயரை சேர்த்து வாழ்த்து கூறிய கவிஞர்.!
Recommended image2
ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா.. யார் அதிக சொத்து வைத்திருக்கிறார் தெரியுமா?
Recommended image3
அம்மா தொல்லை இனி இல்லை... மீனாவால் தப்பித்த தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
Related Stories
Recommended image1
Music Story: யாருக்கும் தெரியாத 'கரகாட்டக்காரன்' அன்-டோல்ட் ஸ்டோரி.! 365 நாட்கள் சாதனைக்கு இதுதான் காரணமா?!
Recommended image2
Music: 'சின்னத்தாய்' பாடலில் ஒளிந்திருக்கும் ராஜாவின் மேஜிக்! தனிமையின் ராகத்தை தாளமிட்ட இசைஞானி.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved