MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • "அட நம்ம ராஜாடா!" இளையராஜாவை உச்சி முகர்ந்த கண்ணதாசன்! பாட்டிலும் பெயரை சேர்த்து வாழ்த்து கூறிய கவிஞர்.!

"அட நம்ம ராஜாடா!" இளையராஜாவை உச்சி முகர்ந்த கண்ணதாசன்! பாட்டிலும் பெயரை சேர்த்து வாழ்த்து கூறிய கவிஞர்.!

தமிழ் திரையிசை வரலாற்றில் கவிப்பேரரசு கண்ணதாசனும், இசைஞானி இளையராஜாவும் இணைந்த தருணங்கள் காலத்தால் அழியாத காவியங்கள். மெட்டுக்கு வரி எழுதுவதில் மன்னனான கவிஞர், இளையராஜாவுக்காக எழுதிய முதல் பாடலிலேயே ஒரு ரகசிய வாழ்த்தை ஒளித்து வைத்திருந்தார். 

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 18 2026, 01:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
காவியம் அது காவியம்
Image Credit : Asianet News

காவியம் அது காவியம்

தமிழ் திரையுலகின் இரு துருவங்கள். ஒருவர் சொற்களால் வித்தை காட்டும் கவிப்பேரரசு கண்ணதாசன், மற்றொருவர் உலக மக்களை இசையால் மகுடி ஊதி மயக்கும் இசைஞானி இளையராஜா. இவர்களின் முதல் சந்திப்பும், அதில் கவிஞர் காட்டிய பேரன்பும் இன்றும் ஒரு காவியமாகவே பேசப்படுகிறது.

26
யார் இந்த புது இசையமைப்பாளர்?
Image Credit : Asianet News

யார் இந்த புது இசையமைப்பாளர்?

'அன்னக்கிளி' படத்தின் மூலம் இளையராஜா அறிமுகமாகி, தமிழகத்தையே தன் பக்கம் திரும்ப வைத்திருந்த காலம் அது. அப்போது 'பாலூட்டி வளர்த்த கிளி' என்ற படத்திற்காக இளையராஜா இசையமைத்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்திற்கு பாடல் எழுத கவிஞர் கண்ணதாசனை அழைக்கத் தீர்மானித்தனர்.

கவிஞரின் மகனும், அந்தப் படத்தின் உதவி இயக்குநருமான அண்ணாதுரை கண்ணதாசன், தன் தந்தையிடம் சென்று "தயாரிப்பாளர் உங்களை பாடல் எழுத அழைக்கிறார்" என்று கூறினார். கவிஞர் வழக்கமான பாணியில், "இசையமைப்பாளர் யார்?" எனக் கேட்க, "இளையராஜா" எனப் பதிலளித்தார் அண்ணாதுரை. "அவர் யார்?" என கவிஞர் கேட்க, "அன்னக்கிளி படத்துக்கு இசையமைத்த புதுப்பையன்" என்று விளக்கம் தந்து அழைத்து வந்தார்.

Related Articles

Related image1
பாட்டுப்பாடி இசைஞானியை பித்து பிடிக்க வைத்த கமல்.! கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி நின்ற இளையராஜா.!
Related image2
அடேங்கப்பா! மணிரத்னத்தை அறிமுகப்படுத்தியது இவர்தானா? இளையராஜா உடைத்த உண்மை!
36
ஸ்டுடியோவில் நடந்த 'ராஜா' தரிசனம்!
Image Credit : Asianet News

ஸ்டுடியோவில் நடந்த 'ராஜா' தரிசனம்!

அடுத்த நாள் பாடல் பதிவுக்காக ஸ்டுடியோவிற்குள் நுழைந்த கண்ணதாசனைப் பார்த்ததும், இளையராஜா மரியாதையுடன் எழுந்து நின்றார். இளையராஜாவைப் பார்த்த அடுத்த நொடியே கவிஞரின் முகம் மலர்ந்தது. "அட... நீதானா! டேய், இது நம்ம ராஜாடா!" என்று உரிமையோடு குரல் கொடுத்தார் கவிஞர். காரணம், இளையராஜா தனது ஆரம்பக் காலத்தில் கண்ணதாசனின் நெருங்கிய நண்பரான ஜி.கே. வெங்கடேசிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். அந்த பழைய நினைவுகள் கவிஞரின் மனதில் சட்டென்று நிழலாடின.

46
பாடலில் மறைந்திருந்த அந்த ஆசிர்வாதம்!
Image Credit : AFP

பாடலில் மறைந்திருந்த அந்த ஆசிர்வாதம்!

பாடல் வரிகளை எழுதத் தொடங்கினார் கவிஞர். இளையராஜா மெட்டைக் கொடுக்க, வரிகள் மழையெனப் பொழிந்தன:

"கண்ணோடு கண்ணு ரெண்டும் ஒன்னோடு ஒன்னு.. கல்லும் இல்ல முள்ளும் இல்ல பூவிலே.. கண்ணா ஓடோடி வா..."

இந்த வரிகளைச் சொல்லி முடித்த கவிஞர், அருகில் நின்றிருந்த இளையராஜாவைப் பார்த்து, "நீ இன்னும் பெரிய இடத்துக்கு வரணும்டா ராஜா" என்று மனதார வாழ்த்தினார். அந்த வாழ்த்தைத் தன் கவிதையிலும் பதிய வைக்க விரும்பிய கவிஞர், பல்லவியின் இறுதியில்,

"...கண்ணா ஓடோடி வா ராஜா வா.. ராஜா வா.. ராஜா வா.."

என்று இளையராஜாவின் பெயரையும் சேர்த்தே எழுதினார். மெட்டில் அந்த "ராஜா வா" என்ற சொற்கள் கச்சிதமாகப் பொருந்தியது. தன் பெயரையே பாடலில் வாழ்த்தாகக் கேட்டு இளையராஜா மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றார்.

56
காலத்தால் அழியாத நட்பு
Image Credit : Asianet News

காலத்தால் அழியாத நட்பு

ஒரு ஜாம்பவான் வளர்ந்து வரும் மற்றொரு கலைஞனைத் தன் மகனைப் போல அரவணைத்து, பாடலிலேயே வாழ்த்துச் சொன்ன அந்தத் தருணம் மிகவும் அபூர்வமானது. அதனால்தான் இளையராஜா இன்றும், "என் வாழ்வில் நான் சந்தித்த கவிஞர்களில் கண்ணதாசனைப் போல் ஒருவரைப் பார்த்ததே இல்லை" என்று நன்றியுடன் நினைவு கூர்கிறார்.

66
காலத்தை வென்ற கலைஞர்களின் சங்கமம்!
Image Credit : Asianet News

காலத்தை வென்ற கலைஞர்களின் சங்கமம்!

கவிஞர் கண்ணதாசன் மற்றும் இளையராஜா ஆகிய இரு மாபெரும் ஆளுமைகளின் முதல் சந்திப்பு, வெறும் பாடல் உருவாக்கத்திற்கான நிகழ்வு மட்டுமல்ல; அது ஒரு தலைமுறை மற்றொரு தலைமுறையை மனதார வாழ்த்தி வழிநடத்திய உன்னதமான தருணம். "கண்ணா ஓடோடி வா... ராஜா வா..." என்று கவிஞர் அன்று பாடலில் சேர்த்த அந்த வரிகள், வெறும் சொற்கள் அல்ல; அது ஒரு தீர்க்கதரிசனமான வாழ்த்து. அந்த வாழ்த்தைப் பலிதமாக்கும் வகையில், இன்றுவரை இசை உலகின் சிம்மாசனத்தில் 'ராஜா'வாக இளையராஜா வீற்றிருக்கிறார். திறமையைக் கண்டால் பாராட்டுவதற்கும், வளரும் கலைஞர்களைத் தோளோடு அணைப்பதற்கும் கவிஞரிடம் இருந்த அந்தப் பெருந்தன்மைதான், இன்றும் அவர்களைத் தமிழ் நெஞ்சங்களில் நீங்காத இடம்பிடிக்கச் செய்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
இசை
சினிமா காட்சியகம்
திரைப்பட விமர்சனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா.. யார் அதிக சொத்து வைத்திருக்கிறார் தெரியுமா?
Recommended image2
அம்மா தொல்லை இனி இல்லை... மீனாவால் தப்பித்த தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
Recommended image3
உயிலை எடுத்த சோழனுக்கு அடுத்த நொடியே காத்திருந்த அதிர்ச்சி... சிக்கினாரா நிலா? அய்யனார் துணை சீரியல் ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
பாட்டுப்பாடி இசைஞானியை பித்து பிடிக்க வைத்த கமல்.! கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி நின்ற இளையராஜா.!
Recommended image2
அடேங்கப்பா! மணிரத்னத்தை அறிமுகப்படுத்தியது இவர்தானா? இளையராஜா உடைத்த உண்மை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved