பழம்பெரும் நடிகர் சிவக்குமார் கடந்த சில வருடங்களாக சினிமா துறையில் இருந்து விலகி, ஓவியம், மேடை பேச்சு, ஆன்மிகம், யோகா போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.
இவரை தொடர்ந்து இவரது மகன்களான சூர்யா - கார்த்தி இருவருமே தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.
இந்நிலையில் சூர்யா தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள, 'ரெட்ரோ' திரைப்படம் மே 1-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வரும் நிலையில், அண்மையில் இந்த படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியும் நடந்தது.
இதில் கலந்து கொண்ட சூர்யாவின் தந்தை சிவகுமார் தன்னுடைய மகனை பற்றி மிகவும் பெருமையாக பேசினார்.
சூர்யாவுக்கு முன்பு தமிழ்நாட்டில் சிக்ஸ் பேக் வைத்த நடிகர் யாரும் இல்லை. அவர் தான் முதலில் சிக்ஸ் பேக் வைத்ததாக கூறி இருந்தார். இவருடைய இந்த கருத்து தற்போது சர்ச்சையாக மாறி உள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள விஷால், சினிமாவில் முதன் முதலில் சிக்ஸ் பேக் வச்சது நடிகர் தனுஷ் தான். பொல்லாதவன் படத்திற்காக வைத்தார்.
அவரை தொடர்ந்து 2005-ல் ஒருமுறையும், மதகஜ ராஜா படத்திற்காக இன்னொரு முறையும் வைத்தேன். அது தெரியாமல் சிவகுமார் பேசி உள்ளார் என தெரிவித்துள்ளார்.
தன்னுடைய மகன் தான் முதல் சிக்ஸ் பேக் வைத்தவர் என பெருமையாக பேசிய சிவகுமாருக்கு விஷால் கொடுத்த பதிலடியாகவே இது பார்க்கப்படுகிறது.