
சென்னையில் வாக்களித்த திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி !
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனநாயகக் கடமையை ஆற்ற பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதன் ஒரு பகுதியாக, சென்னை மயிலாப்பூரில் உள்ள சி.எஸ்.ஐ புனித எப்பாஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் (CSI St. Ebba’s Matriculation Higher Secondary School) அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி. கனிமொழி கருணாநிதி அவர்கள் தனது வாக்கினைப் பதிவு செய்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்