
நல்ல திட்டங்களை தடுத்து நிறுத்தும் திமுக முதலமைச்சர்.!
சங்ககிரி தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, முந்தைய அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்குத் தங்கம், அம்மா இருசக்கர வாகனத் திட்டம் மற்றும் மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்கும் திட்டம் போன்ற உன்னதமான மக்கள் நலத்திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முடக்கிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். நல்ல திட்டங்களைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் திமுக அரசு அடித்தட்டு மக்களுக்குப் பெரும் துரோகம் இழைப்பதாக அவர் தெரிவித்தார்.