MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • கொந்தளித்த GenZ! நேபாள அரசுக்கு எதிரான போராட்டத்தில் 14 பேர் பலி!

கொந்தளித்த GenZ! நேபாள அரசுக்கு எதிரான போராட்டத்தில் 14 பேர் பலி!

நேபாளத்தில் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறி, பலர் உயிரிழந்துள்ளனர் மற்றும் காயமடைந்துள்ளனர்.

2 Min read
Author : SG Balan
Published : Sep 08 2025, 04:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
நேபாளத்தில் GenZ இளைஞர்கள் போராட்டம்
Image Credit : Asianet News

நேபாளத்தில் GenZ இளைஞர்கள் போராட்டம்

நேபாளத்தில் ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வன்முறைப் போராட்டங்களால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர், 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை, நேபாள அரசு சமூக ஊடக நிறுவனங்கள் அரசின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் பதிவு செய்ய வேண்டுமென அறிவித்திருந்தது. ஆகஸ்ட் 28 முதல் ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டும், மெட்டா (ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்), ஆல்பாபெட் (யூடியூப்), எக்ஸ், ரெடிட், மற்றும் லிங்க்ட்இன் போன்ற முக்கிய நிறுவனங்கள் எதுவும் காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்கவில்லை. இதன் விளைவாக, அந்த நிறுவனங்களின் சமூக ஊடகத் தளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. எனினும், டிக்டாக் மற்றும் வைபர் போன்ற சில தளங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளதால், அவை தொடர்ந்து செயல்படுகின்றன.

24
தீவிரம் அடைந்த போராட்டம்
Image Credit : X-@Theunk13

தீவிரம் அடைந்த போராட்டம்

தலைநகர் காத்மாண்டுவில் தொடங்கிய இந்த போராட்டம், தற்போது இமயமலை நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த நியூ பனேஷ்வர், சிங்ஹதுர்பார், நாராயண்ஹிட்டி மற்றும் முக்கிய அரசுப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க ரப்பர் குண்டுகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்திய போலீஸாருடன் ஏற்பட்ட மோதல்களில் பலர் காயம் அடைந்துள்ளனர்.

ஒரு போராட்டத் தலைவர், குழுக்களாகப் பிரிந்த மக்கள் வன்முறையைத் தூண்டுவதற்காக ஊடுருவியுள்ளதாகக் கூறி, மற்ற போராட்டக்காரர்களைப் பின்வாங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். “நாம் இன்று வெற்றி பெற்றுவிட்டோம்” என்றும் அவர் அறிவித்தார். போராட்டங்கள் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, நியூ பனேஷ்வர் பகுதியில் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
பேய் பிடித்ததும் சரளமாக தமிழில் பேசும் நேபாள பெண்.? வெளியான அதிர்ச்சி தகவல்
Related image2
பேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்குத் தடை: நேபாள அரசு அதிரடி!
34
போராட்டக்காரர்கள் சொல்வது என்ன?
Image Credit : ANI

போராட்டக்காரர்கள் சொல்வது என்ன?

சமூக ஊடகத் தடையால் பாதிக்கப்பட்ட பல இளைஞர்கள், தங்களின் தொழில் மற்றும் தகவல்தொடர்புகளுக்கு இந்தத் தளங்களையே சார்ந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். சமூக ஊடகத் தடையை எதிர்த்துத் தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டம், தற்போது ஊழலுக்கு எதிரான போராட்டமாக மாறியுள்ளது.

"நாங்கள் சமூக ஊடகத் தடையால்தான் போராட வந்திருக்கிறோம். ஆனால் அது மட்டுமே நாங்கள் கூடியதற்கான காரணம் அல்ல. நேபாளத்தில் நிறுவனமயப்படுத்தப்பட்ட ஊழலுக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம்" என்று 24 வயது மாணவர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மற்றொரு மாணவி, "நாங்கள் மாற்றத்தைக் காண விரும்புகிறோம். மற்றவர்கள் இதைத் தாங்கிக்கொண்டனர், ஆனால் இது எங்கள் தலைமுறையுடன் முடிவுக்கு வர வேண்டும்" என்று கூறினார்.

44
சர்மா ஒலி ஆலோசனை
Image Credit : ANI

சர்மா ஒலி ஆலோசனை

பிரதமர் கே.பி. சர்மா ஒலி, நிலைமையைக் குறித்து விவாதிக்க இன்று மாலை அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். சமூக ஊடகங்கள் சுதந்திரமான கருத்து வெளிப்பாட்டிற்கான ஒரு சூழலை உருவாக்கும் எனவும், அதன் பாதுகாப்புக்கு உறுதிபூண்டுள்ளதாகவும் அரசு நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.

கடந்த ஆண்டு, ஆன்லைன் மோசடி மற்றும் பணமோசடி நடவடிக்கைகளுக்காக டெலிகிராம் தடை செய்யப்பட்டது. பின்னர் டிக்டாக் செயலியும் முடக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் நேபாள விதிமுறைகளுக்கு இணங்க ஒப்புக்கொண்டதால் டிக்டாக் மீதான தடை நீக்கப்பட்டது. 

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
உலகம்
சமூக ஊடகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
டி20: இந்தியாவிடம் தோற்றது கையாளாகத் தனம்..! நக்வி வாயைக் கிழித்த பாக்., ராணுவ தலைவர்..!
Recommended image2
வங்கதேசத்தின் புதிய அமைச்சரவையில் இந்து அமைச்சர்..! யார் இந்த கயேஷ்வர் சந்திர ராய்..?
Recommended image3
ஆப்கானிஸ்தானின் திராணிகூட இல்லை.. இஸ்லாமிய நாடுகளின் பாதுகாவலன் பாகிஸ்தானின் வெற்றுக் கூச்சல்..!
Related Stories
Recommended image1
பேய் பிடித்ததும் சரளமாக தமிழில் பேசும் நேபாள பெண்.? வெளியான அதிர்ச்சி தகவல்
Recommended image2
பேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்குத் தடை: நேபாள அரசு அதிரடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved