MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • 2K கிட்ஸ் தலையில் இடியை இறக்கும் அரசு: 16 வயதுக்கு உட்பட்டவர்கள் YouTube, Insta பயன்படுத்த தடை

2K கிட்ஸ் தலையில் இடியை இறக்கும் அரசு: 16 வயதுக்கு உட்பட்டவர்கள் YouTube, Insta பயன்படுத்த தடை

அண்மை காலமாக சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்தும் விதமாக 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தடை விதிக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.

1 Min read
Author : Velmurugan s
| Updated : Nov 07 2024, 01:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

உலகம் முழுவதும் டிஜிட்டல் யுகத்தின் ஆதிக்கத்தால் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் டிஜிட்டல் பயன்பாட்டை அரசு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருவதன் காரணமாக நம் நாட்டிலும் தொடர்ந்து ஸ்மார்ட்போன், இணையதளங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

25

குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் ஆன்லைன் வகுப்பு மூலமாக பாடம் எடுத்த நிலையில், இதன் தொடர்ச்சியாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன் பயன்பாடு என்பது இன்றியமையாததாகிவிட்டது.

35

படிப்பை கடந்து பொழுதுபோக்கிற்காக செல்போனை அதிகமாக பயன்படுத்தும் பழக்கம் இருந்து வருகிறது. இதனால் மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு வழக்கமான நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு பெற்றோர் செல்போனை கொடுக்கக் கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

45

இந்நிலையில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த முடியாத வகையில் சட்டம் இயற்றுவதற்கான பணிகளில் ஆஸ்திரேலிய அரசு தீவிரம் கட்டி வருகிறது. அதன்படி Instagram, Facebook, TikTok, X, Youtube உட்பட பல சமூக வலைதளங்களை இந்த தடையின் கீழ் கொண்டுவர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

55

குழந்தைகளுக்கு சமூக வலைதளங்கள் தீங்கு விளைவிப்பதாகவும், அதனால் இந்த சட்டத்தை அமல்படுத்த இருப்பதாகவும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் அறிவித்திருக்கிறார். சட்டம் அமலுக்கு வந்த பின்னர், பெற்றோர்களின் அனுமதி இருந்தாலும் சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
முகநூல் (Mukanool)
சமூக ஊடகம்
தமிழ் செய்திகள்
யூடியூப்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
Recommended image2
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?
Recommended image3
இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved