MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • தினமும் 2 மணி நேரம் மட்டுமே ஸ்மார்ட்போன் பயன்படுத்தணும்! அதிரடியாக உத்தரவிட்ட அரசு! எங்க தெரியுமா?

தினமும் 2 மணி நேரம் மட்டுமே ஸ்மார்ட்போன் பயன்படுத்தணும்! அதிரடியாக உத்தரவிட்ட அரசு! எங்க தெரியுமா?

மக்கள் தினமும் 2 மணி நேரம் மட்டுமே ஸ்மார்ட்போன் பயன்படுத்த வேண்டும் என ஜப்பான் நகரம் அறிவித்துள்ளது.

1 Min read
Author : Rayar r
Published : Aug 29 2025, 08:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Japan City Restricts Smartphone Use To 2 Hours Daily
Image Credit : stockphoto

Japan City Restricts Smartphone Use To 2 Hours Daily

இன்றைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் உலகை ஆட்டிப்படைக்கின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன்களில் மூழ்கி கிடைக்கின்றனர். தகவல்தொடர்பு, பொழுதுபோக்கு, கல்வி, வேலை என அனைத்திற்கும் ஸ்மார்ட்போன்கள் அத்தியாவசியமாகிவிட்டன. ஆனால் ஸ்மார்ட்போன்களின் அதீத பயன்பாடு பல்வேறு சமூக மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

24
தினமும் 2 மணி நேரம் மட்டுமே ஸ்மார்ட்போன்
Image Credit : our own

தினமும் 2 மணி நேரம் மட்டுமே ஸ்மார்ட்போன்

மொபைலால் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மனநலம், உடல்நலம் மற்றும் கல்வித்திறன் பாதிக்கப்படுவது பெரும் கவலையாக இருந்து வருகிறது. உலகில் வளர்ந்து வரும் நாடான ஜப்பானிலும் அனைவரும் செல்போனுக்கு அடிமையாக உள்ளனர். இதை கவனத்தில் கொண்ட ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள யமகாட்டா மாகாணத்தில் உள்ள யோனேசாவா நகரம் மக்கள் தினமும் 2 மணி நேரம் மட்டுமே ஸ்மாட்போன் பயன்படுத்த வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Articles

Related image1
பொளக்குது விற்பனை..₹15,000-க்கு கீழ் ஸ்மார்ட்போன் தேடுறீங்களா? இவங்கதான் மார்க்கெட்டின் கிங்! டாப் 7 லிஸ்ட்!
Related image2
ஸ்மார்ட்போன் உலகில் புதிய புரட்சி! இன்டர்நெட், நெட்வொர்க் இல்லாமல் வாட்ஸ்அப் கால்.. பிக்சல் 10 அதிசயம்!
34
சட்டப்பூர்வமான தடை அல்ல‌
Image Credit : AI

சட்டப்பூர்வமான தடை அல்ல‌

யோனேசாவா நகர மேயர் மசாஃபூமி கோகி மக்கள் தினமும் 2 மணி நேரம் மட்டுமே செல்போன் பயன்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். இது சட்டபூர்வமான தடை அல்ல. இது ஒரு தன்னார்வ முயற்சி. இருப்பினும், இந்த வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்துவதற்கு உள்ளூர் சமூகம், பள்ளிகள் மற்றும் பெற்றோர்கள் இடையே வலுவான ஒத்துழைப்பு தேவை என்று யோனேசாவா நகரம் தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் மட்டுமே ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

44
ஸ்மார்ட்போனால் ஏற்படும் தீமைகள்
Image Credit : AI

ஸ்மார்ட்போனால் ஏற்படும் தீமைகள்

அதிக நேரம் ஸ்மார்ட்போனில் செலவழிப்பது, மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு மற்றும் சமூகத் தனிமைப்படுத்துதல் போன்ற மனநலப் பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆன்லைன் கேம்கள், வீடியோக்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் குழந்தைகளை படிப்பில் கவனம் செலுத்த விடாமல் தடுக்கின்றன. நீண்ட நேரம் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தும்போது கண் சோர்வு, கழுத்து வலி, உடல் பருமன் மற்றும் தூக்கமின்மை போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதாலும் ஜப்பான் நகரம் இந்த அதிரடி முடிவை கொண்டு வந்துள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜப்பான்
திறன் பேசி
நகர்பேசி

Latest Videos
Recommended Stories
Recommended image1
e-SIM பயன்படுத்துபவர்களே உஷார்! ஒரே போன் கால்.. 11 லட்சத்தை இழந்த பெண் - தப்பிப்பது எப்படி?
Recommended image2
அடேங்கப்பா.. வெறும் ரூ.7,499 தானா? 5000mAh பேட்டரியுடன் லாவா செய்த தரமான சம்பவம்!
Recommended image3
உலகமே இந்தியாவைத் திரும்பிப் பார்க்கும் தருணம்.. 100 நாடுகள், 400 நிறுவனங்கள் - பிரம்மாண்ட AI மாநாடு!
Related Stories
Recommended image1
பொளக்குது விற்பனை..₹15,000-க்கு கீழ் ஸ்மார்ட்போன் தேடுறீங்களா? இவங்கதான் மார்க்கெட்டின் கிங்! டாப் 7 லிஸ்ட்!
Recommended image2
ஸ்மார்ட்போன் உலகில் புதிய புரட்சி! இன்டர்நெட், நெட்வொர்க் இல்லாமல் வாட்ஸ்அப் கால்.. பிக்சல் 10 அதிசயம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved