MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • யார் இந்த நிகிதா? என்னை திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் ஓடியவர் இவர்! அரசியல் பிரமுகர் அதிர்ச்சி தகவல்!

யார் இந்த நிகிதா? என்னை திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் ஓடியவர் இவர்! அரசியல் பிரமுகர் அதிர்ச்சி தகவல்!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக நகை திருட்டு புகார் அளித்த நிகிதா மீது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமண மோசடி, வேலை வாங்கித் தருவதாக மோசடி என பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 04 2025, 06:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கோயில் காவலாளி அஜித்குமார்
Image Credit : Google

கோயில் காவலாளி அஜித்குமார்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்குக் காரணமான நகை திருட்டு புகாரை அளித்த நிகிதா குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

25
யார் இந்த நிகிதா?
Image Credit : Google

யார் இந்த நிகிதா?

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆலம்பட்டியை சேர்ந்தவர் ஜெயபெருமாள் என்பவரின் மகள். ஜெயபெருமாள் ஓய்வு பெற்ற துணை ஆட்சியர். அவரது தாயார் சிவகாமி அரசு ஊழியர். நிகிதா முனைவர்' பட்டம் முடித்தவர். திண்டுக்கல் அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் பேராசிரியையாக உள்ளார். இவர் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்திருப்பதாக ஏற்கெனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.

Related Articles

Related image1
தமிழகத்தில் மீண்டும் கனமழை! கோவை, நீலகிரி மக்களே உஷார்! சென்னையில் இன்றும் சம்பவம் இருக்காம்!
Related image2
அஜித்குமார் கொலையில் தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரி யார்? பகீர் கிளப்பும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்!
35
திருமாறன் அதிர்ச்சி தகவல்
Image Credit : Google

திருமாறன் அதிர்ச்சி தகவல்

தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன் நிகிதா குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்: நிகிதாவுக்கு தாலி கட்டிவிட்டதாலே என் மனைவியா? திருமணமான இரவே பாலும், பழமும் சாப்பிடுவதற்கு முன்பே ஓடிவிட்டார். வரதட்சணை வழக்கு போட்டு, குடும்பத்தை அலைக்கழித்தனர். என்னிடம் ரூ10 லட்சம் பெற்றுக் கொண்டுதான் விவகாரத்தே கொடுத்தார்.

45
திருமண மோசடி கும்பல்
Image Credit : Google

திருமண மோசடி கும்பல்

இப்படி பலபேரை ஏமாற்றியவர்கள்தான் நிகிதாவும் அவரது குடும்பத்தினரும். திருமண மோசடி மட்டுமின்றி வேலை வாங்கி தருவதாகவும் பல்வேறு மோசடிகளை செய்துள்ளனர். திருமணங்களை செய்துவிட்டு அவர்களை காவல்துறை, நீதிமன்றம் என அலையவிட்டு அவர்களிடம் இருந்து ரூ10 லட்சம், ரூ.20 லட்சம் பறித்துவிட்டு விவகாரத்து தருவதுதான் இந்த கும்பலின் வேலை. இதேபோல வேலை வாங்கித் தருவதாகவும் பலரிடம் மோசடி செய்திருக்கிறது இந்த கும்பல்.

55
நகை காணாமல் போனதாக கூறுவது பொய்
Image Credit : Google

நகை காணாமல் போனதாக கூறுவது பொய்

நிகிதா தமது நகை காணாமல் போனதாக சொல்வது எல்லாம் பொய்யாகத்தான் இருக்கும். கோவிலில் காவலாளி அஜித்குமாருடன் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கும். அதற்காக அவர் மீது நகை திருட்டு பழியைப் போட்டிருப்பார். அஜித்குமார் கொலைக்கு அரசு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். நிகிதாவின் தந்தை துணை ஆட்சியராக இருந்தவர். தாயாரும் அரசுப்பணியில் இருந்துள்ளார். இந்த செல்வாக்கை வைத்துக்கொண்டு மக்களை அச்சுறுத்துவது, ஏமாற்றி வந்தனர். மேலும், நிகிதா குடும்பத்தை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
குற்றம்
கொலை
அரசியல்
காவல் நிலையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
தமிழகத்தில் மீண்டும் கனமழை! கோவை, நீலகிரி மக்களே உஷார்! சென்னையில் இன்றும் சம்பவம் இருக்காம்!
Recommended image2
அஜித்குமார் கொலையில் தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரி யார்? பகீர் கிளப்பும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved