MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விஜய் கைதாக வாய்ப்பு...??தொடர் உயிர் ப**லிகளால் கடும் சிக்கலில் தவெக

விஜய் கைதாக வாய்ப்பு...??தொடர் உயிர் ப**லிகளால் கடும் சிக்கலில் தவெக

நடிகர் விஜய்யின் கரூர் மாவட்டத்தில் நடத்திய மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 Min read
Author : Ajmal Khan
Published : Sep 27 2025, 09:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : X

தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், நடிகருமான விஜய்யின் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமானோர் கவலையான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

23
Image Credit : X

இந்த நிலையில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று காலை 8.45 மணிக்கு நாமக்கல்லில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விஜய் காலை 8.45 மணிக்கு தான் சென்னையில் இருந்தே புறப்பட்டார். ஆனால் காலை 6 மணியில் இருந்து ஏராளமான மக்கள் காத்திருந்தனர். ஆனால் விஜய் மதியம் 2.30 மணிக்கு தான் நாமக்கல் பகுதிக்கே வந்தடைந்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு கரூர் பகுதிக்கு விஜய் புறப்பட்டு சென்றார். காலையில் இருந்து பல ஆயிரம் மக்கள் வெயிலில் காத்திருந்தனர். ஆனால் விஜய் மதியல் 12 மணியளவில் கரூர் பகுதிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாலை 7.30 மணிக்கை கரூர் வந்தடைந்தார்.

33
Image Credit : Asianet News

இதன் காரணமாக மூச்சு கூட விட இடமில்லாத வகையில் கூட்டமானது அதிகரித்திருந்து. இதனால் ஒரு கட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் பலர் மூச்சு திணறி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.  இதில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெண்கள் பலியானார்கள். 

இந்த சம்பவம் கரூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் தவெக தலைவர் விஜய்யை போலீசார் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. போலீசாரின் பல்வேறு நிபந்தனைகளை தவெக கண்டுகொள்ளவில்லையென்றே கூறப்படுகிறது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
டிவி.கே. விஜய்
அரசியல்
மருத்துவமனை

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved